search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subway"

    கோவை அருகே சுரங்கப்பாதை கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை இருகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளி ஊருக்கு தெற்கே ரெயில்வே பாதையை தாண்டி அமைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர தினமும் ரெயில்பாதையை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே ரெயில்பாதையை கடந்து செல்ல சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

    இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி சிங்காநல்லூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், தினேஷ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிந்திரன், பாலகிருஷ்ணன், குருசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின், பிரபாகரன், காவ்யா மற்றும் சிலர் சட்டவிரோதமாக கூடி, மாணவ, மாணவிகளை திரட்டி பள்ளி கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன்பேரில் கோகுல் கிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், மாணவர்களை தடுத்தல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பயணிகள் வசதிக்காக சென்ட்ரலில் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் இணைப்பு சுரங்கப்பாதை 3 மாதங்களில் திறக்கப்படுகிறது. #Metrotrain
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் பயணிகள் விரைவு போக்குவரத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    சென்ட்ரலில் பிரம்மாண்ட மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இங்கு சென்ட்ரலில் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள், மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் பயணிகள், பூங்கா நகர் பறக்கும் ரெயில் பயணிகள், மெட்ரோ ரெயில் பயணிகள் ஆகியோர் எளிதில் செல்லும் வகையில் அதிநவீன இணைப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    45 மீட்டர் நீளம் 11 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை இன்னும் 3 மாதங்களில் பயணிகள் வசதிக்காக திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் ஒரே நேரத்தில் மெட்ரோ ரெயில் நிலையம், மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையம், எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு எளிதில் செல்ல முடியும்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில், மின்சார ரெயில், எக்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில் பூமிக்கடியில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இன்னும் 3 மாதங்களில் பயணிகள் வசதிக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதால், மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்படுகிறது.
    ஆலந்தூர்:

    சென்னையில் ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமால் இருக்க ரெயில்வே கேட் மூடப்பட்டு சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே ஜி.எஸ்.டி. சாலையையும், பழவந்தாங்கல் பகுதியையும் இணைக்கும் ரெயில்வே கேட் 16-ந் தேதி (அதாவது இன்று) முதல் மூடப்படுகிறது. அதன்பிறகு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பழவந்தாங்கல் மற்றும் மீனம்பாக்கம் சுரங்கப்பாதைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரெயில்வே கேட் மூடப்படுவதால், தண்டவாள பகுதியில் ரெயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தபிறகு, சென்னை மாநகராட்சியிடம், ரெயில்வே நிர்வாகம் ஒப்படைக்கும். அதன்பின்னர் சுரங்கப்பாதைகளை சாலைகளுடன் இணைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் செய்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
    ×