search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student union"

    • தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார். துணை முதல்வர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ஷோபா வரவேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேங்க் ஆப் இந்தியா மேலாளருமான பாக்கிய பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து கடந்த ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முடிவில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் புகழரசன் மற்றும் பகிமிதா நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்க விழா மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாணவர்கள் புதுவையின் வரலாற்றையும், ஆட்சி நிர்வாகத்தையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்க விழா மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் புதுவையின் வரலாற்றையும், ஆட்சி நிர்வாகத்தையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.புதுவை அரசு நிர்வாகத்தில் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும் கவர்னர், தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோரே ஆட்சி செய்யும் அவல நிலை உள்ளது.

    இது போக்கப்பட வேண்டும். பா.ஜனதா பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகின்றது. இவைகளை தெரிந்து, புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருந்தால் மட்டுமே நாம் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், மாநில துணை அமைப்பாளர் அமுதாகுமார், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி சங்கர், தர்மன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நசீர், மாணவர் அணி துணை அமைப்பாளர் அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் செய்திருந்தார்.

    கோவை அருகே சுரங்கப்பாதை கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை இருகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளி ஊருக்கு தெற்கே ரெயில்வே பாதையை தாண்டி அமைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர தினமும் ரெயில்பாதையை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே ரெயில்பாதையை கடந்து செல்ல சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

    இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி சிங்காநல்லூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், தினேஷ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிந்திரன், பாலகிருஷ்ணன், குருசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின், பிரபாகரன், காவ்யா மற்றும் சிலர் சட்டவிரோதமாக கூடி, மாணவ, மாணவிகளை திரட்டி பள்ளி கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன்பேரில் கோகுல் கிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், மாணவர்களை தடுத்தல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×