search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snacks"

    • ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்

    தண்ணீர் - 1 1/2 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கேரட் - 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,

    சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாழைக்காயில் பல ரெசிபிகளை செய்யலாம்.
    • வாழைக்காய் சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் மிளகுத் தூள்/மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்த மிளகாய் தூளை சேர்த்து நன்றாக குலுக்கி எடுத்தால் வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த போண்டாவை டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இந்த போண்டா செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்

    பெரிய வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 3

    சோம்பு - 1 ஸ்பூன்

    தனி மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடலை மாவு - 4 ஸ்பூன்

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.

    கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய் தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு போட்டு நன்றாக கலந்து இந்த கலவையை  10 நிமிடம் மூடி வைக்கவும்.

    10 நிமிடம் கழித்து பார்த்தால் வெங்காயம் மிருதுவாகி இருக்கும். இப்போது மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உங்களுக்கு பிடித்த வடிவில் உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீக்கடை வெங்காய போண்டா ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பருப்பு வடையை விட இந்த வடை சூப்பரான இருக்கும்.
    • இன்று இந்த வடை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காய்ந்த பச்சை பட்டாணி - 200 கிராம்,

    கடலைப் பருப்பு - 50 கிராம்,

    அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    * இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காய்ந்த பச்சை பட்டாணி, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணி வடை ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டெல்லியில் மிகவும் பிரபலமான, சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட்.
    • இதை உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருள்கள்:

    உருளைக்கிழங்கு - 2

    கொண்டைக்கடலை - கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 1

    மாதுளை - சிறிதளவு

    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

    கல் உப்பு - தேவைக்கேற்ப

    பிளாக் சாட் மசாலா - தேவைக்கேற்ப

    செய்முறை :

    கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஸ்பூன் வைத்து நடுவில் குழி போல் வெட்டி எடுக்கவும். இப்போது பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.

    எடுத்த உருளைக்கிழகை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த பின்னர் கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது கலந்த கலவையை உருளைக்கிழங்கு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.

    இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

    இதோ போல் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ

    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செடார் சீஸ் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    பிரெட் தூள் - 3 டீஸ்பூன்

    கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ள கொள்ள வேண்டும்.

    மசித்த உருளைக்கிழங்கு, கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், பிரெட் தூள், உப்பு, சீஸ், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பின் இதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் பிசைந்த மாவை பெரிய உருண்டையாக உருட்டி வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.

    பின்னர் ரவுண்ட் கட்டர் வைத்து வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

    வாய்க்கு ஸ்பூன் வைத்து வரைய வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் சாப்பிடவும்.

    ஸ்மைலிகளை பாக்ஸில் போட்டு ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப் பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்).

    கடலை மாவு - 1 கப்,

    அரிசி மாவு - 5 டீஸ்பூன்,

    மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை,

    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

    தேவையான பொருட்கள்

    ரவை - 1 கப்

    மைதா - 1 கப்

    துருவிய தேங்காய் - 1 கப்

    சர்க்கரை - ஒன்றரை கப்

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    உப்பு - சிட்டிகை

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

    இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.

    ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

    இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையானபொருட்கள் :

    விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100 கிராம்,

    கர்ஜூர் (Khajur )- 8 (விதை நீக்கியது),

    நெய் - 100 கிராம்,

    எண்ணெய் - 50 மில்லி,

    சர்க்கரை - 250 கிராம்,

    டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,

    முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,

    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை :

    பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.

    நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.

    வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.

    ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சத்தான ட்ரை ஃப்ரூட் அல்வா ரெடி.

    இதை அப்படியேவும் கொடுக்கலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டியும் கொடுக்கலாம். இதை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • கோதுமை மாவில் வித்தியாசமான ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்

    வெல்லம் - 1/2 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    கனிந்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று 'ஆனியன் ரிங்ஸ்'.
    • விருந்தினர்களுக்கு சில நிமிடங்களில் செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 5

    மைதா மாவு - 200 கிராம்

    சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

    ஆரிகனோ (உலர்ந்த கற்பூரவள்ளி) - 2 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

    பூண்டு - 8 பல்

    தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    ரொட்டித் தூள் - 100 கிராம்

    'டிப்' தயாரிக்க தேவையான பொருட்கள்:

    பிரியாணி இலை - 1

    வெண்ணெய் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 1 ஆரிகனோ (உலர்ந்த கற்பூரவள்ளி) - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

    மயோன்னஸ் - 4 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    படத்தில் காட்டியுள்ளதுபோல் வெங்காயத்தை வட்டமாக வெட்டி, தனித்தனி வளையங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் சிறிது மைதா மாவைத் தூவி கிளறி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, சில்லி பிளேக்ஸ், ஆரிகனோ, மிளகுத்தூள், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.

    பின்பு வெங்காயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அந்த மாவில் தோய்த்து, ரொட்டித்தூளில் நன்றாக புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    'டிப்' செய்முறை

    வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு உருகியதும், பிரியாணி இலை, சில்லி பிளேக்ஸ், பொடிதாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

    பின்னர் அந்தக் கலவையில் மயோன்னஸ், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

    இப்பொழுது 'ஆனியன் மயோன்னஸ் டிப்' தயார்.

    மொறுமொறு ஆனியன் ரிங்சுடன், ஆனியன் மயோன்னஸ் டிப் சேர்த்து பரிமாறலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளைக் காராமணி - 1 கப்

    தினை அல்லது வரகு அல்லது அரிசி - கால் கப்

    வெங்காயம் - 1

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 4

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெள்ளைக் காராமணியுடன், தினை அல்லது வரகு அல்லது அரிசியை நன்றாக கழுவி மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள்.

    * நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில்வைத்து மாவை மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள்.

    * சூப்பரான காராமணி வடை ரெடி.

    புரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×