search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Care"

    • சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை.
    • சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது.

    சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

    அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

    சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

    அவசரமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 3-4 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

    கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும்.

    எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

    க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

    தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமம் அழகாக இருக்கும்.

    • மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும்.
    • சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள்.

    வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.

    சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

    மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

    இரவு நீண்ட நேரம் படிப்பதாலும், வேலை செய்வதாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின்மீது பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வாராமல் தடுத்து, வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.

    வாழைப்பழத் தோளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏவில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின், தொற்று உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழத் தோளை நறுக்கி, முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில், மெதுவாக தேய்க்கவும். பத்து நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால், நாள் முழுவதும் கூட கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்குவதற்கு முன் கூட இப்படி செய்து தூங்கி விடலாம். நீண்ட நேரம் சருமத்தில் (skin) இருந்து கொண்டு நன்றாக வேலை செய்யும்.

    • வைட்டமின் ஈ எண்ணெய் உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்க உதவுகிறது.
    • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

    வைட்டமின் ஈ என்பது தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள். வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் ஆன்லைனில் அல்லது மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன.

    தலை முதல் கால் வரை வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தலாம். வைட்டமின் ஈ எண்ணெய் உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை அதன் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் பற்றி பார்க்கலாம்.

    உங்கள் கைகள் நாள் முழுவதும் தொடர்ந்து பல்வேறு வகையான வேலைகளை செய்கின்றன. உங்கள் நகங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் உங்கள் நகங்களைச் சுற்றியுள்ள தோலை மெதுவாக மசாஜ் செய்ய வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தவும். படுக்கைக்கு முன் இதை செய்யுங்கள். இதனால் உங்கள் நகங்கள் உகந்த ஈரப்பதத்தைப் பெறுகின்றன. உங்க நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளை வழங்குவதற்காக அறியப்பட்ட வைட்டமின் ஈ எண்ணெய் கூந்தலுக்கு ஒரு அற்புதமான எண்ணெய். காப்ஸ்யூலில் இருந்து எண்ணெயை கசக்கி எடுத்து, உங்கள் வழக்கமான முடி எண்ணெயுடன் கலக்கவும். உங்கள் தலைமுடியில் இந்த கலவையை மெதுவாக மசாஜ் செய்து 2-3 மணி நேரம் விட்டு விடுங்கள். ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவ வேண்டும். நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம். தொடர்ந்து இரண்டு வாரம் செய்துவந்தால், முடிவுகளை நீங்களே கவனிக்கத் தொடங்குவீர்கள்.

    சருமத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உள்ளவர்கள் , வைட்டமின் ஈ எண்ணெயுடன் வயதானால் ஏற்படும் சுருக்கத்தை எதிர்க்கும் கிரீம் பயன்படுத்தலாம். இது ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்றப்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தில் வைட்டமின் ஈ எண்ணெயை மசாஜ் செய்வது உங்கள் சரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை உறுதியாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

    வைட்டமின் ஈ எண்ணெய் வறண்ட மற்றும் மெல்லிய சருமத்திற்கு சிகிச்சையளிக்கும். வெயிலின் விளைவாக உங்கள் தோல் எரிந்தால் அல்லது அரிப்பு ஏற்பட்டால், வைட்டமின் ஈ எண்ணெயை கூலிங் கிரீம் உடன் கலந்து பயன்படுத்தலாம். இருப்பினும், வெயிலில் நீங்கள் செல்லுவதற்கு முன் சன்ஸ்கிரீன் போடுவது நல்லது.

    வைட்டமின் ஈ முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். கடுமையான முகப்பரு உள்ளவர்களுக்கு குறைந்த வைட்டமின் ஈ பிளாஸ்மா அளவு இருப்பதாக மருத்துவ மற்றும் பரிசோதனை தோல் மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வைட்டமின் ஈ உங்கள் தோலை ஈரப்பதமாக்கி, ஒளிரும் மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும் டோகோபெரோல்கள் மற்றும் டோகோட்ரியெனோல்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் ஈ மேற்பூச்சு பயன்பாடு உங்கள் சருமத்தின் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்புக்கு பங்களிக்கிறது. மேலும் இது உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

    வைட்டமின் ஈ எண்ணெய் சாத்தியமான தோல் பராமரிப்பு நன்மைகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், அதனுடன் தொடர்புடைய சில அபாயங்களும் உள்ளன. ஆதலால், வைட்டமின் ஈ பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.

    • கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான்.
    • தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் இருமுறையாவது குளிக்கலாம். காலையில் குளித்த பின்பு மாலையில் தான் அடுத்த குளியல் அமைய வேண்டும். மாலைக் குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். நாட்டு மருந்து கடையில் சந்தனாதி தைலம், பிருங்காமலாதி தைலம், திரிபலா தைலம் போன்ற தைல எண்ணெய்கள் கிடைக்கும். மேற்கூறிய தைல எண்ணெய்களில் ஏதாவது ஒன்றினைத் ( நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஓ.கே தான் ) தலையில் தடவிக் குளித்து வரலாம். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி ஏற்படும். மாலையில் செய்யும் எண்ணெய்க் குளியலால் தூக்கம் நன்றாக வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய்ப் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கசகசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.

    கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், பனை நுங்கு, தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்குப் பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது. இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால் தோலுக்கும் ( சருமம் ) மிகுந்த ஆரோக்கியத்தினை, பளபளப்பினைத் தருகின்றது. தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் நீராவி முகருவதினைச் செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் 10 நிமிடமும் கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.

    கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான். வெப்பத்தால் ஏற்படும் சரும அலர்ஜி, சருமம் வறண்டு போவதற்கு காரணங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது போன்றவற்றாலும் சரும பாதிப்புகள் உருவாகும். இவற்றுக்கு சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றைத் தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் குளித்தால் நல்லது.

    கோடையில் தோலில் அரிப்பும், சினப்பும் ஏற்பட்டால் முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் அரிப்பு குறையும்.

    அருகம்புல் சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருகம் புல் தைலம் மேல் பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு, உடல் சூடு குறையும்.

    வெயிலில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள் (Scrubs):

    1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், சமைத்த ஓட்ஸ் + பாதாம் பருப்பு இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.

    2. உலர்ந்த சருமத்திற்கேற்ற 'மாஸ்க்': இரண்டு தேக்கரண்டி அளவு பால் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு மேஜைக் கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளிசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் Moisturiser ஆக பயன்படுத்தலாம்.

    3. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

    4. இயல்பான ( நார்மல் ) சருமத்திற்கு மஞ்சள் பொடியை பாலில் குழைத்துத் தடவி, அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத் கழுவவும். சந்தனப் பொடியுடன் ரோஜா பன்னீர் சேர்த்து குழைத்து தடவி வரவும். கருமை திட்டுக்களையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.

    • இயற்கையான அழகு பெற, செயற்கையான சோப்புகளும் கிரீம்களும் எதற்கு?
    • அழகை மேம்படுத்திக் கொள்ள இயற்கையாக இருக்கும் சில பொருட்களே போதுமானது.

    பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக பல வகையான சோப்புகளையும், ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்தை கழுவும் பழக்கம் இருக்கும். இயற்கையான அழகு பெற, செயற்கையான சோப்புகளும் கிரீம்களும் எதற்கு? நம்முடைய அழகு கெட்டுப் போகாமல் இருக்கவும், அந்த அழகை மேம்படுத்திக் கொள்ளவும், இயற்கையாக இருக்கும் சில பொருட்களே போதுமானது. இப்படிப்பட்ட இயற்கையான பொருட்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, செயற்கையான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

    முகத்தை தினந்தோறும் சோப்பில் கழுவாமல், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கழுவி வாருங்கள். நல்ல வித்தியாசம் தெரியும். இது ஒரு சுலபமான முறையும் கூட. அது என்ன முறை என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

    இதற்கு தேவையான பொருட்கள் முல்தானி மெட்டி தூள், தக்காளி பழம் அவ்வளவுதான். இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 மேசைக்கரண்டி தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த விழுதினை உங்களது முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விட வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.

    இந்த முறைப்படி காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி உங்களது முகத்தை கழுவி வாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    இந்த முல்தானி மெட்டியானது உங்களது முகத்தில் தேவையில்லாமல் எண்ணெய் வடியும் தன்மையைக் கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்கும். தக்காளிப் பழ விழுதானது, உங்கள் முகத்தில் படிந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த தக்காளி பழ விழுதானது, உங்களது தோலின் நிறத்தை அதிகப்படுத்திக் காட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தினம்தோறும் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களது முகத்தில் கட்டாயம் வித்தியாசம் தெரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    • சருமத்திற்கு இயற்கைப் பொருட்களை பின்பற்றுவதே மிகவும் சிறந்தது.
    • வினிகர் சமைப்பதற்கு மட்டுமின்றி, அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது.

    சருமத்தை அழகாக பராமரிப்பதற்கு நிறைய பொருட்கள் உள்ளன. அவற்றில் வினிகரும் ஒன்று. வினிகர் சமைப்பதற்கு மட்டுமின்றி, அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களுள் ஒன்றாகவும் உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும்.

    எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். இரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களை பின்பற்றுவதே மிகவும் சிறந்தது.

    ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

    ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும்.

    எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.

    அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது.

    குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

    கைகள் அழுக்கோடு, மென்மையிழந்து இருக்கிறதா? அப்படியெனில் கைகளில் உள்ள கிருமிகளை போக்குவதற்கு, வினிகர் கலந்த நீரில், கைகளை கழுவ வேண்டும். இதனால் கிருமிகள் நீங்குவது மட்டுமின்றி, கைகளும் மென்மையாகும்.

    3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.

    முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் புள்ளிகளை போக்குவதற்கு, வெங்காயச் சாற்றில் சிறிது வினிகர் சேர்த்து கலந்து தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்தால், அவற்றை முற்றிலும் போக்கிவிடுவதோடு, வராமல் தடுக்கலாம்.

    • சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.
    • உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியதாக சீரம் உள்ளது.

    சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் அழகு பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணெய் போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும்.

    சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது.

    மாய்ஸ்சரைசருக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் சீரமானது, பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் எளிதில் தோலின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக வழங்குகிறது.

    இதனால் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குவதோடு, கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், பருக்கள், கறைகள், திறந்த துளைகள், சுருக்கங்கள், கோடுகள் போன்ற சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. இப்படி பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு தரக்கூடியதாக சீரம் உள்ளது.

    நாம் எந்த வகையான சரும பராமரிப்பு அல்லது அழகு சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

    வறண்ட சருமம், எண்ணெய் சருமம், உணர்திறன் மிக்க சருமம் என ஒவ்வொருவரது சருமம் வெவ்வேறு வகையானது.

    எண்ணெய் சருமம் கொண்ட நபர்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு கொண்ட சீரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஹைலூரோனிக் அமிலம் அடங்கிய சீரம் சிறப்பானது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. சாதாரண சரும வகையைக் கொண்டவர்களுக்கு வைட்டமின் "சி" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் அடங்கிய சீரம் சிறந்ததாகும்.

    சருமத்தின் வகை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதனை பயன்படுத்துபவரின் வயதும் சரும பராமரிப்பு சாதனங்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்குவகிக்கிறது.

    சீரம் பொதுவாக வயதான தோற்றத்தை குறைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் டீனேஜராக இருந்தால், சரும பராமரிப்பிற்கு க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்தினாலே போதும்.

    இருபது வயதை தொடப்போகும் பெண்கள், "நியாசினமைடு" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் கலந்த சீரத்தை பயன்படுத்தலாம். இருபது வயதிற்கு மேல் மற்றும் முப்பது அல்லது நாற்பது வயதானவர்கள் "ரெட்டினோல்" அடங்கிய சீரம் வகைகளை தேர்வு செய்வது உங்கள் வயதான தோற்றத்தை மாற்ற உதவும்.

    சருமத்தின் பிரச்சனைகளை பொறுத்து தான் பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சீரற்ற சரும நிறம், கரும்புள்ளி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் "ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி" அமிலங்களான கிளைகோலிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம், அசெலாயிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் கோஜிக் அமிலம் ஆகியவை அடங்கிய சீரம் வகைகளை பயன்படுத்தலாம்.

    வயதான தோற்றங்களை மறக்க விரும்புவோருக்கு ரெட்டினோல் சீரம் சிறந்த தேர்வாகும். கரும்புள்ளிகள் அல்லது வெண் புள்ளிகளைக் கொண்ட சருமத்திற்கு ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் நிறைந்த சீரம் சிறப்பான பலனளிக்கக்கூடும்.

    மேற்கூறிய சரும பிரச்சனைகள் அனைத்தும் இருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து விதமான சீரத்தையும் பயன்படுத்த வேண்டாம். அது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக பின்விளைவுகளை பெரிதாக்கக்கூடும்.

    எனவே வயது, சரும வகை, சரும பிரச்சனை ஆகியவற்றை பொருத்து சரியான மூலப்பொருட்களைக் கொண்ட சீரத்தை தேர்வு செய்யுங்கள். அதேபோல் சரும பிரச்சனைகள் சம்பந்தமான பராமரிப்பு சாதனம் அல்லது சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு நாம் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

    • சந்தனம் பேஸ் பேக் முகம் வெள்ளையாகவும், பொலிவோடும் இருக்க உதவும்.
    • சருமத்திற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என பார்க்கலாம்.

    சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். இங்கு வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

    சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.

    கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும்.

    சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.

    பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடி மற்றும் வேப்பிலைப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள பாக்டீரியல் தன்மை, பருக்களைப் போக்கி, முகத்தைப் பொலிவாக்கும்.

    சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அதிலும் இதை தினமும் முகத்திற்கு போட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சந்தனப் பொடியுடன், கடலை மாவை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, 20-30 நிமிடம் கழித்து தேய்த்து கழுவ, முகம் அழகாக ஜொலிக்கும்.

    • பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.
    • பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

    ஒவ்வொரு பூக்களும் பல்வேறு நன்மைகளை கொண்டது. இவை உடல் ஆரோக்கியம் முதல் முக அழகு வரை பராமரிக்க பயன்படுகின்றது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவற்றை முகத்தில் தடவினால் முகம் இளமையாக மாறுவதோடு, மினுமினுப்பாகவும் பொலிவு தரும். பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

    சாமந்தி பூ :- இந்த மலர்கள் அதிக நன்மைகளை கொண்டது. இவை வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகும்பெற செய்கிறது.

    தேவையனவை :- சாமந்தி பூக்கள் 3, பால் 1 டீஸ்பூன், யோகர்ட் 1 டீஸ்பூன், துருவிய கேரட் 2 டீஸ்பூன்

    செய்முறை :- முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும். அத்துடன் கலை இழந்த முகத்தில் புது பொலிவு கிடைக்கும்.

    மல்லிகை பூ :- வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள இந்த மல்லிகை உதவுகிறது. மல்லிகை பூக்கள் சிறிது எடுத்து கொண்டு அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பின் அவற்றுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் மிகவும் மென்மையாகும். அத்துடன் முகத்தில் உள்ள சொரசொரப்புகளை நீக்கி விடும்.

    ரோஜா பூ :- தேவையானவை :- ரோஜா பூ 1, பால் 1 டீஸ்பூன், கோதுமை தவடுகள் 1 டீஸ்பூன்

    செய்முறை :- முதலில் ரோஜா பூவின் இதழை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவடுகளையும் சேர்த்து அரைத்து கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெரும்.

    தாமரை பூ :- தேசிய மலரான தாமரையில் அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலில் செல்களை மறு உற்பத்தி செய்து என்றும் இளமையாக வைக்கிறது. அத்துடன் முகத்தை மிகவும் அழகாக மாற்றுகிறது.

    தேவையானவை :- ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன், தாமரை மலர் 1, பால் 2 டீஸ்பூன்

    செய்முறை :- வெள்ளை தாமரை இதழ்களை முதலில் தனியாக நறுக்கி கொள்ளவும். பிறகு அவற்றுடன் பால், ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் இளமை பெரும்.

    செம்பருத்தி பூ :- பொதுவாக செம்பருத்தி பூ முடி பிரச்சினையை போக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவற்றுடன் முகத்தின் அழகையும் இது பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது.

    தேவையானவை :- 1 செம்பருத்தி பூ, 1 டீஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் முல்தானி மட்டி, 1 ரோஜா பூ

    செய்முறை :- முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்த இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கி விடும்.

    • உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்.
    • தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.

    வயது 30-யைத் தாண்டியதும், நம் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புகள் கரையும். இதனால் சருமம் தளர ஆரம்பிக்கும். முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது''. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம்.

    1. ''விளக்கெண்ணெய், சருமப் பிரச்னைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்ஸைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

    3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது கூழை முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.

    4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத் தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனைத் தடவி வரலாம்.

    5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

    6 கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

    7 நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும்; வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.

    8 உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

    9 கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.

    10 தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்!''

    • பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.
    • இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள்.

    ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

    தேவையானவை :

    வெள்ளை சர்க்கரை - அரை கப்

    சமையல் சோடா - 1 டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தேன்- 1 டீஸ்பூன் பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் - 2 துளி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

    சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும்.

    சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும்.

    தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.

    ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

    தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.

    • நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் அதன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள்.
    • சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.

    சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.

    1. பாதுகாப்பு நிலை

    UVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய ரசாயன சன்ஸ்கிரீன்களைத் தேர்வுசெய்க. காரணம், இந்த இரண்டு வகையான கதிர்கள் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரண்டு வகையான கதிர்களிலிருந்து பாதுகாக்க நீங்கள் சன்ஸ்கிரீன் என்று பெயரிடப்பட்ட போர்டு ஸ்பெக்ட்ரம் தேர்வு செய்ய வேண்டும்.

    ஏனென்றால், இந்த லேபிள் இல்லாத தயாரிப்புகள் சருமத்தை வெயிலிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன, புற்றுநோய் அல்லது தோல் வயதானவை அல்ல. கூடுதலாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின் பரிந்துரைகளின்படி, நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் குறைந்தது UVB 30 என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக எஸ்பிஎஃப் எண், அதிக பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும்.

    2. சன்ஸ்கிரீனின் உள்ளடக்கம்

    சன்ஸ்கிரீன்களில் தொடர்ச்சியான செயலில் உள்ள ரசாயனங்கள் உள்ளன, அவை சருமத்திற்கு புற ஊதா கதிர்வீச்சிற்கான வடிப்பான்களாக செயல்படுகின்றன. உள்ளடக்கங்களில் ஆக்டில்க்ரிலீன், சுலிசோபென்சோன், ஆக்டினாக்ஸேட், ஆக்டிசலேட், ஆக்ஸிபென்சோன், ஹோமோசலேட், ஹெலியோப்ளெக்ஸ், 4-எம்பிசி, மெக்ஸோரில் எஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்எல், டைனோசார்ப் எஸ் மற்றும் எம், உவினுல் டி 150, மற்றும் உவினுல் ஏ பிளஸ் ஆகியவை அடங்கும். இந்த சேர்மங்களிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான சன்ஸ்கிரீன்களும் பொதுவாக நிறமற்றவை, மேலும் நீங்கள் ஒப்பனை பயன்படுத்துவதற்கு முன்பு பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் உணர்திறன் வாய்ந்த சருமம் மற்றும் சில தோல் பிரச்சினைகள் இருந்தால், பாரா-அமினோபென்சோயிக் (பாபா), டையோக்ஸிபென்சோன், ஆக்ஸிபென்சோன் அல்லது சுலிசோபென்சோன் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன்களைத் தவிர்க்கவும். கூடுதலாக, ஆல்கஹால், மணம் மற்றும் அதிகப்படியான பாதுகாப்புகளைக் கொண்டிருக்கும் சன்ஸ்கிரீன்களையும் தவிர்க்கவும்.

    3. உங்கள் தோல் வகையை சரிசெய்யவும்

    உங்களிடம் உள்ள தோல் வகைகளுடன் சன்ஸ்கிரீனின் தேவையை சரிசெய்வது சிறந்த சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கியமான வழியாகும். காரணம் வெவ்வேறு தோல் வகைகளும் உங்களுக்குத் தேவையான பல்வேறு வகையான சன்ஸ்கிரீன்கள். சான்றாக, எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான தோலுக்கு எண்ணெய் அல்ல, நீர் சார்ந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது சன்ஸ்கிரீன் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்பட்டு துளைகளை அடைக்காது. பொதுவாக இந்த வகை சன்ஸ்கிரீன் ஜெல் வடிவில், தடிமனான கிரீம் அல்ல. உலர்ந்த சருமம் இருந்தால், சருமத்தை ஈரப்பதமாக்க உதவும் எண்ணெய் சார்ந்த சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கவும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்த சரியான வழி

    உங்கள் சருமத்திற்கு சிறந்த சன்ஸ்கிரீன் கிடைத்த பிறகு, அடுத்த கட்டமாக அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சன்ஸ்கிரீன்கள் நன்றாக வேலை செய்யும். எனவே, சூரிய ஒளியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் காதுகளின் முன் மற்றும் பின்புறம் இதில் அடங்கும். கூடுதலாக, கடற்கரைக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், வெப்பமான வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அது சூடாக இல்லாதபோதும் நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் 80 சதவீதம் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும் மேகங்களுக்குள் ஊடுருவ முடிகிறது.

    ×