search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shiva lingam"

    • சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர் படும் அபூர்வ நிகழ்வை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் சமேத கூம்பாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய கதிர் வீச்சு விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளின் முதல் நாளில் இருந்து 3 நாட்கள் வரை லிங்கத்தின் மீது அதிகாலை காலை 6.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை 20 நிமிடங்கள் சூரிய கதிர்கள் விழுகின்றன. இந்த அரிய நிகழ்வு குறித்து வேதாந்த மடத்தின் மடாதிபதி மாதவ குமாரசாமி கூறுகையில், ஆவணி மாதம் பவுர்ணமியில் இருந்து 3 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடம் தெளிவாக அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்றார். இந்த நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    • சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.
    • சிவன் லிங்க வடிவமாக உள்ளார்.

    சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது.

    இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு.

    ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது.

    நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.

    • இன்று சூரிய ஒளிக்கதிர்கள் காசி விஸ்வநாதரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது.
    • 3 நாட்கள் (நாளை மற்றும் நாளைமறுநாள்) சூரியோதயத்தின்போதும் இந்த வழிபாடு நடைபெறும்.

    திருச்சியை அடுத்த கல்லணை சாலை, சர்க்கார் பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியதாக வரலாறு கூறுகிறது.

    அப்போது, இறைவன் அவரது கனவில் தோன்றி கோவில் அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோவில் கட்டியதாகவும், அதனையடுத்தே கல்லணை கட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவாணைக் காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலின் சார்பு கோவிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

    வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும். இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆவணி மாதம் 7-ம் நாளான இன்று (23-ந்தேதி) காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய ஒளிக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து காசி விஸ்வநாதர் மூலவரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது. அதனைத்தொடர்ந்து சூரிய வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் காசிவிஸ்வநாதருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திருச்சி மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து பக்தியுடன் வழிபட்டனர்.

    3 நாட்கள் சூரியோதயத்தின்போதும் இந்த வழிபாடு நடைபெறுவதால் நாளை மற்றும் நாளை மறுதினம் கோவிலில் தங்கி வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    • ஆண்டுக்கு 2 முறை இந்த கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய ஒளி படும்.
    • பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி சவுந்தரவல்லி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரியன் தனது கதிர்களை பாய்ச்சி வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.

    தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் 4 மாதங்கள் இடைவெளி விட்டு ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய கதிர்கள் படும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் ஒவ்வொரு முறையும் சூரிய கதிர்கள் லிங்கத் திருமேனி மீது படும்.

    இந்த ஆண்டு சித்திரை மாத சூரிய வழிபாடு நடைபெற்ற முடிந்த நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் திருமேனி மீதுபட்டது. அடுத்த இரண்டு நாட்கள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. நேற்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத் திருமேனி மீது முழுவதும் சூரிய கதிர்கள் படர்ந்து லிங்க திருமேனி தங்கத்தை உருக்கி ஊத்தியது போல் தகதகவென மின்னியது.

    இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். பின்னர் சூரிய பகவானுக்கும் பசுபதீஸ்வரர் சவுந்தரநாயகி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த அதிசய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்.

    இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வில்லீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
    கோவை இடிகரையில் பழமை வாய்ந்த வில்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர் கோடுகள் உள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் இதனை நேரில் பார்ப்பவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இந்த வருடம் பங்குனி மாதத்தில் வில்லீஸ்வரர் மீது கடந்த 5 நாட்களாக சூரியஒளி விழுந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல கடந்த வாரம் துடியலூர் அருகில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலிலும் சூரிய கதிர்கள் இறைவனின் மீது விழுந்தது. வடமதுரை விருந்தீஸ்வரர், இடிகரை வில்லீஸ்வரர் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இதன் பின்னர் பங்குனி உத்திரத்தை தொடர்ந்து வரும் பவுர்ணமிக்கு பிறகு 3 நாட்கள் இந்த கோவிலில் திருமுருகநாத சுவாமி மீது சூரிய ஒளி விழும் வினோதமான நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

    இதன்படி இந்த ஆண்டும் பங்குனி உத்திரத்தையொட்டி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்தி சாயும் நேரத்தில் திருமுருகநாதசுவாமி சிலை மீது பாதி அளவு சூரிய ஒளி விழுந்தது. நேற்று மாலை 6.10 மணிக்கு முழு சூரிய ஒளியும் திருமுருகநாத சுவாமி சிலை மீது பட்டது. 6.15 மணி வரை 5 நிமிடம் சூரிய ஒளி சாமி சிலை மீது தொடர்ந்து விழுந்தது. கோவிலில் மூலஸ்தானத்திற்குள் இருக்கும் திருமுருகநாத சுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுவது வினோத நிகழ்வாக கருதப்படுகிறது. இதையடுத்து சாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய் கிழமை) மாலையும் சூரிய ஒளி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
    ஆந்திர மாநிலம் முன்னொரு காலத்தில் ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.
    ஆந்திர மாநிலம் தற்போது தெலுங்கு தேசம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் அது ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.

    அதாவது ஆந்திரத்தில் தெற்கு பகுதியில் ஸ்ரீகாளகஸ்தி என்ற புகழ்பெற்ற திருத்தலமும், மேற்குப் பகுதியில் ஸ்ரீசைலம் என்ற சிறப்புமிக்க ஆலயமும், வடக்கு பகுதியில் ஸ்ரீத்ராட்சராமம் என்ற மகத்துவம் வாய்ந்த திருத்தலமும் அமைந்திருந்தன.

    இதனால் ஆந்திரம் ‘திரிலிங்க தேசம்’ என்று பெயர் பெற்று விளங்கியது. அதோடு இன்னும் சிலர் அந்தப் பகுதியை ‘மகாலிங்க சேத்திரம்’ என்றும் அழைத்தனர்.
    தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
    தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். அவரும் பற்பல சாந்தியங்களுடன் கூடிய சிவலிங்கங்களை அவர்களுக்கு செய்து கொடுத்தார். அதைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தேவர்கள் அனைவரும் பயனடைந்தனர். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    இந்திரன் - பதுமராக லிங்கம்

    அசுவினி தேவர்கள் - மண்ணால் ஆன லிங்கம்

    எமதர்மன் - கோமேதக லிங்கம்

    சந்திரன் - முத்து லிங்கம்

    பிரம்மன் - சொர்ண லிங்கம்

    வருணன் - நீல லிங்கம்

    வாயுதேவன் - பித்தளை லிங்கம்

    விஷ்ணு - இந்திர லிங்கம்

    நாகர்கள் - பவள லிங்கம்

    ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்

    குபேரன் - சொர்ண லிங்கம்

    மகாலட்சுமி - நெய்யால் ஆன லிங்கம் 
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம்.
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன்.

    பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

    தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.

    அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

    ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

    சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும்.
    சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார். சிவபெருமானை நாம் ஆலயங்களில் சென்று வழிபடும் பொழுது லிங்க வடிவமாகத் தான் வழிபடுகின்றோம். பொதுவாக சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. திருவாதிரை நட்சத்திரம் அன்றும் தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும். அவ்வாறு வழிபட சிவன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, முதலில் கணபதியை வழிபட வேண்டும். பிறகு அறுபத்து மூவரை வழிபட்டு, அடுத்ததாக நந்தியை தரிசித்த பிறகே, சிவலிங்க வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி வழிபட்டால் தான் உரிய விதத்தில் பலன் உடனடியாகக் கிடைக்கும்.

    சிவலிங்கத்தை பீடம், லிங்கம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தரையில் இருந்து மேலே எழும்பி லிங்கத்தை தாங்கி நிற்கும் பகுதி ‘பீடம்’ ஆகும். இது எல்லா வடிவங்களிலும் இருக்கும். பாணம் அல்லது லிங்கம் என்பது உருளை வடிவத்தில் இருக்கும். பீடத்தில் இருந்து நீர் விழும் பகுதி ‘நாளம்’ எனப்படும். பொதுவாக லிங்கத்தின் தன்மையைப் பொறுத்து, அசையும் லிங்கம், அசையா லிங்கம் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.

    மொத்தத்தில் சிவலிங்க விரத வழிபாடு என்பது சிறப்பான வழிபாடு. ஒரே சிவலிங்கத்தில், 1008 லிங்கங்கள் அமையப் பெற்றதை ‘சகஸ்ர லிங்கம்’ என்று அழைப்பார்கள். இது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ளது. 108 சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்தது தஞ்சை அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. தினமும் சிவாயநம, ஓம் நமசிவாய, சிவசிவ என்று எத்தனை முறை சொல்லி வழிபடுகின்றோமோ, இந்த அளவிற்கு செல்வாக்கு விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். திங்கட்கிழமை வழிபட்டால் மங்கலங்கள் உருவாகும்; சந்ததி தழைக்கும்; சந்தோஷம் பிறக்கும்; எண்ணியது நடக்கும்.

    சிவனை வழிபடும் பொழுது இரு கரங்களையும் மேல்நோக்கி தலைக்குமேல் உயர்த்தி “சிவாயநம” அல்லது “ஓம் நமசிவாய” என்று சொல்லி சிவலிங்கத்தை வழிபட்டால் மன அமைதியோடு வாழ இயலும். சிவ தரிசனத்தையும், இறை ஆராதனைகளையும் முடித்த பிறகுதான் ஆலயத்தை வலம் வர வேண்டும். ஆலயத்தை 1, 3, 5 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வலம் வரவேண்டும். பிரகாரத்தைச் சுற்றி வந்து முடிக்கும் பொழுது, கொடிமரத்தின் முன்பாக அனைத்து தெய்வங்களையும் மனதில் நினைத்துக் கொண்டு நமது வேண்டுதலைச் சொல்லி வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    சிவலிங்கத்திற்கு வில்வ அர்ச்சனை மிகவும் உகந்தது. வில்வத்தால் அர்ச்சித்தால் பாவங்கள் தீரும். பணவரவு கூடும். வீட்டில் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்பவர்கள் புறத் தூய்மையோடு, அகத்தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    அசையும் லிங்கம் என்பவை மண், உலோகம், ரத்தினம், மரம், கல், மாவு, மஞ்சள் போன்றவற்றால் செய்யப்படும். சுயம்புலிங்கம் என்பது தானே தோன்றியது. இவை நிலையாக இருக்கக் கூடியவை. இவை தவிர அரிசி, சாதம், களிமண், பசுஞ்சாணி, வெண்ணெய், ருத்ராட்சம், சந்தனம், தர்ப்பம், பூ போன்றவற்றால் ஆன லிங்கங்கள். இவை வழிபாடு முடிந்ததும் அந்தந்த பொருட்களுடன் சேர்க்கப்படும். அசையா லிங்கங்கள் என்பவை கோவில்களில் நிலையாக இருக்கும் கற்சிற்பங்கள்.

    எந்தெந்தப் பொருட்களால் ஆன லிங்கங்கள் என்னென்ன பலன் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மன உறுதி, உடல் உறுதி பெற மாவால் செய்த லிங்கத்தையும், நல்ல உணவு கிடைத்து பசிப்பிணி அகல சாதத்தால் செய்த லிங்கத்தையும், ஞானம் பெருக ருத்ராட்ச லிங்கத்தையும், நீண்ட ஆயுள் கிடைக்க பூவால் ஆன லிங்கத்தையும் வழிபாடு செய்யலாம். இன்னும் எத்தனை, எத்தனையோ லி ங்கங்கள் இருக்கின்றன. மரகத லிங்கத்தை மனதார வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும்.

    இத்தனை வகை லிங்கங்களில் நமக்கு ஏற்ற லிங்கத்தைத் தேர்ந் தெடுத்து, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஆயுள் நீடிக்கும். நோய் நீங்க கரும்புச் சாறு அபிஷேகமும், பயம் நீங்க பழச்சாறு அபிஷேகமும், இனிய குரல் வளம் கிடைக்க தேன் அபிஷேகமும், லட்சுமி கடாட்சம் ஏற்பட சந்தன அபிஷேகமும், நினைத்தது நிறைவேற சுத்தமான தண்ணீர் அபிஷேகமும், வசீகரம் பெற மஞ்சள் தூள் அபிஷேகமும், ராஜ யோக வாழ்வு அமைய அன்னாபிஷேகமும் செய்து வழிபட்டால் நல்லது.
    146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையையில் உள்ள மேலமலை பகுதியில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் கோவிலுக்கு கீழ் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் ஒரு லிங்கம் உள்ளது. அந்த லிங்கத்தை 1872-ம் ஆண்டு மக்கள் வழிபட்டதாக கல்வெட்டு அங்கு உள்ளது.

    இந்நிலையில் தொல்லியல் துறை அனுமதியோடு மோட்டார்களை கொண்டு சுனை நீரை இரைக்கும் பணி, கடந்த 30-ந் தேதி தொடங்கியது. இதில் சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட சுனையில் இருந்து நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.



    இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுனையில் இருக்கும் லிங்கத்தை பார்க்க குவிந்தனர். நேற்று காலை தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர், லிங்கம் வெளியே தெரிந்தது. இதையடுத்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து மதியம் சுனைலிங்கத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். 146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    எந்த லிங்கத்தையும் விட, அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் தான் இறைவனுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகமும் உயர்வு பெறுகிறது.
    மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன், மிகச் சிறந்த வில்லாளி. அதே நேரத்தில் சிவ பூஜை செய்பவர்களிலும் சிறப்பு பெற்றவனாக இருந்தான். அவனுக்கு ‘தன்னை விட சிறப்பாக சிவ பூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை’ என்ற கர்வம் இருந்தது.

    அர்ச்சுனன் பாதை மாறிச் செல்லும் வேளையில் எல்லாம், நண்பனாக இருந்து பல அறிவுரைகளைச் சொல்லி நல்வழியில் செலுத்தியவர் கண்ணன். அவருக்கு அர்ச்சுனனின் கர்வம் அறிந்து நகைப்பு தான் வந்தது. அவர் அர்ச்சுனனிடம், “உன்னை விட அதிகமான, உயர்வான லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர். அவர்களே சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்” என கண்ணன் கூறினார்.

    “அவர்கள் யார்?” என்று கேட்ட அர்ச்சுனனுக்கு, ஒரு குடியானவனையும், அவரது மனைவியையும் காட்டினார் கண்ணன்.

    அர்ச்சுனன், மறைவாக இருந்து அந்தக் குடியானவனின் ஒரு நாள் நடவடிக்கைகளை கவனித்தான். அவன் கவனித்த நாளில் ஒரு முறை கூட அந்தக் குடியானவன் சிவபூஜை செய்யவில்லை.

    கண்ணனிடம் வந்த அர்ச்சுனன், “குடியானவன் சிவபூஜையே செய்யவில்லை. அவர்களின் வீட்டில் சிவலிங்கமே இல்லை” என்றான்.

    புன்னகை புரிந்த கண்ணன், “நீ அங்கே கவனித்த போது, அவர்கள் எப்போதாவது வழிபாடு செய்தார்களா?” என்றார்.



    “ஆம்.. ஒரு முறை மட்டும் தம்பதியராக நின்று சாதம் வடித்த பானையை வழிபட்டனர்” என்றான் அர்ச்சுனன்.

    உடனே கண்ணன் “உலக ஜீவ ராசிகளின் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா? அரிசிமணி தேவையா?” என்றார்.

    “அரிசி தான் பொன்னை விட உயர்ந்தது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்று என்ற பழமொழி வந்தது” என்று கூறினான் அர்ச்சுனன்.

    “அப்படியானால் ஒரு அன்னப் பருக்கை ஒரு லிங்கத்திற்கு சமம் தானே?”

    கண்ணனின் கேள்வியை ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டான் அர்ச்சுனன்.

    “அந்த தம்பதியர் வணங்கிய சாதம் வடித்த பானையில் எத்தனை ஆயிரம் லிங்கங்கள் இருந்திருக்கும். அத்தனை லிங்கங்களை வணங்கிய அவர்கள் தானே, சிறந்த சிவ பக்தர்கள்” என்று கூறிய கண்ணனின் கிடுக்கிப்பிடியில் திணறிப்போனான் அர்ச்சுனன். அவனது கர்வம் தவிடுபொடியாகிப்போனது.

    எந்த லிங்கத்தையும் விட, அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் தான் இறைவனுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகமும் உயர்வு பெறுகிறது.

    தினமும் வீட்டில் சாதம் செய்த பின், அது வேகவைக்கப்பட்ட பானையில், விபூதி பட்டையிட்டு சிறிது பூவும் வைத்து, கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் கிடைக்கும்.
    ×