என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sequence"
- அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு.
- அங்கன்வாடிக்கு தேவையான உபகரண பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா , அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார்.
திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கொக்காலடி, முள்ளூர், திருத்துறைப்பூண்டி டவுன் பள்ளிவாசல் ஆகிய அங்கன்வாடி மையங்க ளுக்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் உதவியா ளர்களை பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து அங்க ன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக மேளதாள இன்னிசையுடன் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கி ல்லி வளவன், அங்கன்வாடி மைய பார்வை யா ளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பெ ற்றோ ர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமையில், வட்டார திட்ட அலுவலர் கண்ணகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா முன்னிலையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாரிமுத்து எம்.எல்.ஏ கர்ப்பிணி பெண்கள் நலத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
ெதாடர்ந்து, செல்வராசு எம்.பி கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், பேரீட்சை பழங்கள் உள்பட 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசும்போது, குழந்தையின் வளர்ச்சியானது கருவுற்ற திலிருந்து தொடங்குகிறது, தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமாக பிறக்கும். தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.
மேலும், வட்டார மருத்துவ அலுவலர் கௌரி கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊட்டசத்து கண்காட்சி நடைப்பெற்றது, கர்ப்பிணிகளுக்கு புளிசாதம், காய்கறி சாதம், புலவு, லெமன் சாதம், வடை, தயிர்சாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்த்தி, ஊராட்சி தலை வர்கள் வீரசேகரன், ஜானகிராமன், மாலினி ரவிச்சந்திரன், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஊட்டசத்து ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன், உதவியாளர் மேனகா, சூபர்வைசர்கள் கமலா, காயத்ரிதேவி, ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் பூ, பழம், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
- தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலையில் கணபதிஹோமம், லெட்சுமிஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பெண்கள் பூ புஷ்பம், பழ வகைககள், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோயில் வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்