search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி தினவிழா
    X

    கலைநிகழ்ச்சி பிரச்சார வாகனம் தொடக்கம்.

    அங்கன்வாடி தினவிழா

    • அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு.
    • அங்கன்வாடிக்கு தேவையான உபகரண பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா , அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.

    விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார்.

    திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கொக்காலடி, முள்ளூர், திருத்துறைப்பூண்டி டவுன் பள்ளிவாசல் ஆகிய அங்கன்வாடி மையங்க ளுக்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் உதவியா ளர்களை பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து அங்க ன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக மேளதாள இன்னிசையுடன் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கி ல்லி வளவன், அங்கன்வாடி மைய பார்வை யா ளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பெ ற்றோ ர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.

    Next Story
    ×