search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottaiyan"

    அரியலூரில் புத்தகதிரு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூரில் அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக  விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் 4-வது புத்தக திருவிழா நடை பெறுகிறது. 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கிறார். அரசு தலைமை கொறடா, எம்.பி, எம்.எல் .ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உட்பட  பலர் கலந்து கொள்கிறார்கள். 12-ம் தேதி தமிழக பண்பாட்டு துறை அமைச்சர்  பாண்டியராஜன் கலந்து கொள்கிறார்.

    இதனை முன்னிட்டு அண்ணாசிலையிலிருந்து புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சி தலைவர் சத்திய நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார், முக்கிய கடைவீதிகளின் வழியாக சென்ற பேரணி அரியலூர் யூனியன் அலுவலகத்தில் முடிவடைந்தது. 

    தாசில்தார் முத்துலெட்சுமி, மாவட்ட கல்வி  அலுவலர்செல்வம், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்  நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, தமிழ் பாண்பாட்டு பேரமைப்பு பொறுப்பாளர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், நல்லப்பன், புலவர்.இளங்கோ, ஜமீன்வெங்கடேசன், அரிமா சங்க பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, அசோக்குமார், கோகுல், சங்கர், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    2018-19ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். #publicexam #timetablereleased
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.



    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் முறையை ஆன்லைனில் கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதை தவிர்க்க, தமிழகத்திலேயே அதிகப்படியான மையங்களை அமைக்க தயார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் 500 மையங்கள் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பாக கற்க ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றும், அதற்கு பெரிதும் உதவியாக ஸ்மார்ட் வகுப்பு திட்டம் இருக்கும் எனவும் கூறினார். 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் பாடங்கள் நீட் குறித்ததாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

    மேலும், நீட் தேர்வில் குறைந்தது 250 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெகு சில ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், பல ஆசிரியர்கள் பணியில் இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். #publicexam #timetablereleased
    ×