search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling ganja"

    • கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்,

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5வாலிபர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர், இதில் அவர்கள் சட்டவிரோதமாக போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர் (20), இசக்கிப்பாண்டி (20), இசக்கி துரை(22), சந்துரு (22), கார்த்திக் (31) ஆகிய 5பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய மாவட்ட முழுவதும் 46 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்பா ர்வையில் அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் சம்மந்தப்ப ட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் கஞ்சா உபயோகப்படுத்து வதால் ஏற்படும் தீமைகள், அதனை விற்பனை செய்வோர் மீது எடுக்கப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைககள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

    சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய மாவட்ட முழுவதும் 46 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 157 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 116 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 206 ேபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் முழுமையாக கஞ்சா விற்பனையை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
    • அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    • புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • புதுவையில் பள்ளி-கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பள்ளி-கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதற்கிடையே லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை பிடித்து அவர்களின் சட்டைப்பைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது சட்டைபையில் அவர்கள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் ஒரு கிலோவுக்கும் மேலாக அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை விசாரணை நடத்தினர்.

    விசாரனையில் அவர்கள் லாஸ்பேட்டை மடுவு பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம்கி வயது (25). லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த துரை (22) மற்றும் லாஸ்பேட்டை ஏர்போட்டு பின் புறப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ராம் (24) என்பதும் இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இது போல் கோரிமேடு காமராஜர் நகர் மெயின் ரோடு பல் மருத்துவ கல்லூரி அருகே இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்ததின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கஞ்சா விற்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான மொரட்டாண்டியை சேர்ந்த ஹரிகரன் (21) மற்றும் கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி வீதியை சேர்ந்த சுகுமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    புதுவை பஸ்நிலையம் பின்புறம் உள்ள மங்கள லட்சுமி நகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 17வயது சிறுவன் மற்றும் ஆட்டுப்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்த அருண் (22) ஆகிய 2 பேரை உருளையன் பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆண்ட்ரூஸ் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பெருந்துறை போலீசாருக்கு பீடா கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம் பத்ரா மாவட்டம் திகிடி தாலுகா வருணை பகுதியை சேர்ந்தவர் அபய்குமார் பகரா (வயது 30). இவர் தற்பொழுது பெருந்துறையை அடுத்துள்ள மலைச்சீனாபுரம் பகுதியில் குடியிருந்து பீடா கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பெருந்துறை போலீசாருக்கு இவரது கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    இதில் கடையில் 80 கிராம் கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 11 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அபய்குமார் பகராவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தனி ப்பிரிவு போலீசார் மற்றும் சித்தோடு போலீசார் காலிங்க ராயன்பாளையம் கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் 3 வாலிபர்கள் இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் (24), காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம். வீதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மெய்யப்பன் (19) மற்றும் சித்தார், குப்பிச்சிபாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் (24) என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

    மேலும் அந்த வீட்டில் சிறு சிறு பொட்டலங்களாக 300 கிராம் எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்ட லங்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியான காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி 3 பேர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உழவர்கரையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு வங்கி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    உழவர்கரையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை உழவர்கரை சிவகாமி நகரில் 3-வது குறுக்குத்தெருவில் ஒரு வங்கி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சட்டைப்பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 315 கிராம் கஞ்சாவை அவர்கள் சட்டைப்பையில் பதுக்கி வைத்திருந்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் உழவர்கரை-வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்த விமல் (வயது24) மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த பாரத் (24) என்பதும். இவர்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×