search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது
    X

    கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

    • கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்,

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5வாலிபர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர், இதில் அவர்கள் சட்டவிரோதமாக போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர் (20), இசக்கிப்பாண்டி (20), இசக்கி துரை(22), சந்துரு (22), கார்த்திக் (31) ஆகிய 5பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×