search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seeds"

    • தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களான தங்க சம்பா, கருங்குறுவை மற்றும் ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற நெல் ரக விதைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டேவிட் டென்னிசன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரக விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் நடப்பு நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களான தங்க சம்பா, கருங்குறுவை மற்றும் ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற நெல் ரக விதைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விதைகளின் விலையானது ரூ.25 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ விதைகள் மட்டும் வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி குறுவை சாகுபடிக்கு நேரடி விதைப்பு முறை, எந்திர நடவு முறை மற்றும் வரிசை நடவு முறைகளில் நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தரமான விதைகளின் அவசியம் குறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-

    அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் தற்போது குறுவை மற்றும் ஆடிப்பட்ட சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பலவிதமான இடுபொருட்களைப் பயன்படுத்தினாலும் விதைத் தேர்வு தான் மகசூலை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.எனவே பிற ரகக் கலப்பில்லாத, திறன் வாய்ந்த, தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.தரமான விதைகளின் நிலைகளான வல்லுநர் விதைகள், ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதனால் அதிக முளைப்புத்திறன், சீரான பயிர் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை, பூச்சி, நோய் எதிர்ப்புத்தன்மை, ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

    அறுவடை செய்த தானியங்களை அப்படியே விற்பனை செய்வதற்குப் பதிலாக, விதைப்பண்ணைகள் அமைத்து அதன் மூலம் தரமான சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். தரமான சான்று பெற்ற விதைகளை அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமோ பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். விதைப் பண்ணையாக பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப்பறிக்கை 3 நகல்களுடன் இணையத்தில் பதிவு செய்து, சான்றட்டை, விதை வாங்கிய பட்டியல் மற்றும் வயல் வரைபடத்துடன் திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விதைப்பறிக்கை பதிவுக் கட்டணமாக ரூ.25, வயலாய்வுக் கட்டணமாக நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.100,பயறு வகைப் பயிர்களுக்கு ரூ.80 மற்றும் பகுப்பாய்வுக் கட்டணமாக ரூ.80 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விதைப்பறிக்கை பதிவு செய்த பிறகு பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணைகளை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கான தரமான விதைகளை உற்பத்தி செய்கிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு நல்ல மழை பெய்துள்ளது. இதுகுறித்து விவசாயம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவரங்களை தாக்கல் செய்தனர். பின்னர் குமாரசாமி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை 51 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மேலும் பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே கர்நாடகத்திற்கு வந்துள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் விதைகள், உரம் கொள்முதல் செய்வதில் எந்த தொந்தரவையும் அனுபவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும். தரம் குறைந்த விதைகளை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு நான் இஸ்ரேலுக்கு சென்று அங்கு விவசாய பணிகள் குறித்து ஆய்வு செய்தேன்.

    அங்கு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் கர்நாடகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும். இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மண்டியா மாவட்டத்தில் 900 ஏக்கர் பரப்பளவில், விசுவேஸ்வரய்யா கால்வாய் பண்ணை நிலத்தில் சோதனை அடிப்படையில் இஸ்ரேல் தொழில்நுட்ப பயன்பாட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக இஸ்ரேல் நாட்டில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை கர்நாடகத்திற்கு வரவழைத்து நமது விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும்.

    தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதனால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.
    ×