search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvPAK"

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 10 கேட்ச்கள் பிடித்து கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் மார்கிராம், டீன் எல்கர், ஹம்சா, பவுமா, ரபாடா ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்களை கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.

    2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது டீன் எல்கர், மார்கிராம், பவுமா, ஆலிவியர், அம்லா ஆகியோரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

    இரண்டு இன்னிங்சிலும் 10 கேட்ச் பிடித்துள்ளார். இதன்மூலம் டோனி சாதனையை முந்திய சர்பிராஸ், கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார். இதற்குமுன் கில்கிறிஸ்ட் டோனி மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் 9 கேட்ச் பிடித்துள்ளார். கில்கிறிஸ்ட் ஹாமில்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக 10 கேட்ச் பிடித்துள்ளார்.



    ஒட்டுமொத்தமாக ஒரு டெஸ்ட் போட்டியில் மார்க் டெய்லர், கில்கிறிஸ்ட், சகா, சர்பிராஸ் அகமது ஆகியோர் 10 கேட்ச் பிடித்து 2-வது இடத்திலும், ரஸல், டி வில்லியர்ஸ், ரிஷப் பந்த் 11 கேட்ச் பிடித்து முதல் இடத்தில் உள்ளனர்.
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. டி காக் சதம் விளாசினார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது.

    77 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டீன் எல்கர் (5), மார்கிராம் (21) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அம்லா நிலைத்து நின்று விளையாட டி ப்ரூயின் 7 ரன்னிலும், ஹம்சா டக்அவுட்டிலும், பவுமா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 42 ரன்னுடனும், டி காக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அம்லா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். டி காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், தென்ஆப்பிரிக்கா அணி 302 ரன்னாக இருக்கும்போது 129 ரன்கள் விளாசி 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழந்ததும் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை விட 380 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால்  பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் இருந்து 5 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.#SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இடம்பிடித்துள்ளார்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்ததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான செஞ்சூரியன் மற்றும் கேப் டவுன் டெஸ்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அமிருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆசாத் ஷபிக், அசார் அலி, ஹாரிஸ் சோஹைல், முகமதுத அப்பாஸ், யாசிர் ஷா ஆகியோர் நீக்கப்பட்டு முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஹுசைன் தலாத், உஸ்மான் ஷின்வாரி மற்றும் இமாத் வாசிம் ஆகியோரின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த நிலையில், தென்ஆப்பிரிக்காவிற்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.

    பின்னர் 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.


    பாபர் ஆசம்

    254 ரன்களை தாண்டியதால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. தற்போது 40 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 41 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டெயின், ரபாடா தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.


    ரபாடா

    பாகிஸ்தான் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்து எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கும்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. சர்பிராஸ் அகமது 56 ரன்கள் சேர்த்தார் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


    ஷான் மசூத்

    இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் முதல்நாள் நாள் மதிய உணவு இடைவேளை பாகிஸ்தான் 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டெயின், பிலாண்டர், ரபாடா, ஆலிவியர் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று நினைத்த இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


    சர்பிராஸ் அகமது

    ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். முகமது அமிர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க யாசிர் ஷா (5), முகமது அப்பாஸ் (0), ஷாஹீன் அப்ரிடி (3) அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 4 விக்கெட்டும், ஸ்டெயின் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், பிலாண்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் 75 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினாரகள்.



    இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். பாகிஸ்தான் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அம்லா, டீன் எல்கர் அரைசதத்தால் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.


    டீன் எல்கர்

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், மார்க்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரில் மார்க்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார்.



    8-வது ஓவரை ஹசன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் அம்லா கொடுத்த கேட்சை 3-வது ஸ்லிப்பில் நின்றிருந்த பகர் சமான் பிடிக்க தவறினார். இதனால் அம்லா 8 ரன்னில் அவுட்டாகுவதில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரின் 5-வது பந்தில் டீன் எல்கர் அடித்த பந்து முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த அசார் அலியின் கையில் தஞ்சமடைந்தது.

    ஆனால் பந்து தரையில் உரசியதுபோல் சந்தேகம் எழும்பியது. இதனால் மைதான நடுவர் அவுட் கொடுத்துவிட்டு 3-வது நடுவரின் உதவியை நாடினார். 3-வது நடுவர் காட்சியை பலமுறை ‘ரீபிளே’ செய்து பார்த்துவிட்டு, பந்து தரையில் பட்டதற்கு போதுமான அளவு சாட்சி உள்ளது என்று நடுவர் தீர்ப்பை திரும்பப்பெற்றார். இதனால் டீன் எல்கர் 3 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அம்லா, டீன் எல்கர் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் உத்வேகம் குறைந்தது. அம்லா, டீன் எல்கர் அரைசதம் அடித்ததோடு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். டீன் எல்கர் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ப்ரூயின் (10), டு பிளிசிஸ் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அம்லா 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுக்கள் சாய்த்த ஆலிவியர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.


    மசூத்

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


    இமாம் உல் ஹக்

    முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.



    நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
    செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 181 ரன்னில் சுருண்டது. பாபர் ஆசம் மட்டும் தாக்குப்பிடித்து 71 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்திருந்தது. பவுமா 38 ரன்களுடனும், ஸ்டெயின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.



    ஸ்டெயின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த பவுமா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டி காக், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா முன்னணி வகிக்க போராடினார். அவர் 45 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர், ஷாஹீன் ஷா அப்ரிடி தலா நான்கு விக்கெட்டுக்களும், ஹசன் அலி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    செஞ்சூரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். 2-வது ஓவரை ரபாடா வீசினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் இமாம்-உல்-ஹக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து பகர் சமான் உடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். பகர் சமான் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    ஷான் மசூத் 19 ரன்னில் வெளியேறினார். அசார் அலி தாக்குப்பிடித்து விளையாட ஆசாத் ஷபிக் 7 ரன்னில் வெளியேறினார். தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

    பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அகமது (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    மறுமுனையில் நின்றிருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். ஸ்டெயின் வீசிய ஓவரில் நான்கு பவுண்டரிகள் விரட்டினார்.



    அணியின் ஸ்கோர் 178 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் ஹசன் அலி உடன் இணைந்து 67 ரன்கள் சேர்த்தார். ஹசன் அலி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் டெஸ்ட் போட்டியில் 421 ரன்கள் வீழ்த்தி பொல்லாக் உடன் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்திருந்தார்.

    கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்டில் ஸ்டெயின் விளையாடினார். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனால் பொல்லாக் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தார் ஸ்டெயின்.



    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஸ்டெயின் தனது 4-வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் பகர் சமானை 12 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார்.
    ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடித்தால் போதாது, மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். 35 வயதாகும் இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை சாய்த்து சாதனை புரிந்து இருந்தார். தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.

    கடந்த முன்றரை ஆண்டுகளில் காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணியில் தொடர்ச்சியான இடம்பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் 21 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தி பொல்லாக்கின் சாதனையை சமன் செய்ய முடிந்தது.

    நாளை தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டியில் ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் பெறுவார்.

    ஆனால், ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதைவிட அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘நான் ஒரு விக்கெட் பெறுவதை விட அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற வேண்டும். பொல்லாக்கை விட ஒரு விக்கெட் அதிகமாக பெறுவதால் என்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. பெரிய இலக்காக இருக்க வேண்டும்.

    அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை நடந்தால் மிக சிறப்பானதாக இருக்கும். இதுபோன்ற சாதனைகள் படைப்பது கவுரவம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும். ஆனால், சாதனையை முறியடித்த பிறகு, மேலும் ஒரு சாதனை படைக்க முயற்சி செய்வேன். இதுதான் எனது திட்டம்’’ என்றார்.
    ×