search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப் டவுன் டெஸ்ட்: 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் திணறல்
    X

    கேப் டவுன் டெஸ்ட்: 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் திணறல்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் 75 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினாரகள்.



    இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். பாகிஸ்தான் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×