search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohan Bopanna"

    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
    புனே:

    மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.



    இருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி இருக்கிறார்கள். 32 வயதான திவிஜ் சரண் கூறும் போது, ‘நிச்சயம் எனக்கு இது சிறப்பான வெற்றி தான். உள்ளூரில் நான் வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இது, புதிய சீசனுக்கு எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது’ என்று குறிப்பிட்டார். போபண்ணா- திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.20 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட இருக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா-நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.

    இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளிகளாக மாற்றுவதில் மட்டும் கவனமாக இருந்தனர். ஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.

    2 மணி 44 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ.62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ.33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெயஸ் இணையை வீழ்த்தி போபண்ணா ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. #MaharashtraOpen #RohanBopanna
    புனே:

    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜாமி முனாரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் மாலெக் ஜாஸிரியை (துனிசியா) விரட்டியடித்தார். குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் தன்னை எதிர்த்த எர்னஸ்ட்ஸ் குல்பிசை (லாத்வியா) 7-6 (5), 7-6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7-6 (6) 6-7 (5), 3-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஜாஸிரியிடம் வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    அதே சமயம் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி 6-7 (4-7), 6-4, 17-15 என்ற செட் கணக்கில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் (மெக்சியா) இணையை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 6 முறை ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்த போபண்ணா கூட்டணி இந்த வெற்றியை பெற 1 மணி 45 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ‘இது போன்ற மிகவும் நெருக்கமான போட்டியை ஒரு போதும் விளையாடியதில்லை’ என்று வெற்றிக்கு பிறகு போபண்ணா கூறினார்.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. #AsianGames2018 #RohanBopanna
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.



    இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #RohanBopanna
    லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபன்னா, பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin

    லண்டன்:

    ஆடவருக்கான குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபன்னா - பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி, தென்னாப்ரிக்காவில் கெவின் ஆண்டர்சன் - பிரான்சின் ஜூலியன் பென்னெடியூ ஜோடியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் போபன்னா ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் செட்டை போபன்னா - ரோஜர் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் ஆண்டர்சன் - ஜூலியன் ஜோடி சிறப்பாக எதிர்ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.

    இருப்பினும் போபன்னா-ரோஜர் ஜோடி அந்த செட்டையும் 7-6 (7-3) என கைப்பற்றியது. இறுதியில் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபன்னா-ரோஜர் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin
    ×