search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road facility"

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண் 5 கி.மீ. தூரம் வரை தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த ஆதிவாசி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.

    மேலும் இவர்கள் இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து செல்லும் சிரமமான நிலையும் உள்ளது.

    இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

    முதலில் அவருக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முயன்றனர். அதில் சிக்கல் ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

    சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கில் கம்பில் சேலையால் தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு அவர்கள் ஓட்டமும், நடையுமாக அரளிகோணம் வரை சென்றனர். அங்குள்ள சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் இயங்காத நிலையில் இருந்தது.

    இதனால் பெண்கள் அமைப்பான குடும்ப ஸ்ரீ என்ற தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ் மூலம் மணியை அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    குழந்தையுடன் மணி.

    அந்த மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். மணிக்கு சுகபிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மணி இது பற்றி கூறும் போது, எங்களது குலதெய்வம் நல்லீஸ்வரன் ஆகும். எனக்கு குலதெய்வம் அருளால் தான் தற்போது நல்லமுறையில் குழந்தை பிறந்து உள்ளது என்றார்.

    சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டி தான்இந்த பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மகளிர் ஆணையம் தலைவர் ஜோசபைன் இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். #TribalWomen #AttapadiVillage
    சாலை வசதி செய்து தரக்கோரி ஊட்டியில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். கோத்தகிரியை அடுத்த பாரதிநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பாரதிநகர் பகுதியில் நடைபாதை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குண்டும், குழியுமான பாதையை பொதுமக்களே சரிசெய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் பாரதிநகருக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டவளை பகுதியில் இருந்து பாரதி நகருக்கு சாலை வசதி செய்து தரக்கோரி வருகிற 18-ந் தேதி கோத்தகிரி-ஊட்டி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். ஆகவே, சாலை வசதி ஏற்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊட்டி காந்தல் ஸ்லேட்டர்ஹவுஸ் பகுதியில் நகராட்சி இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து மின் இணைப்பு பெற்று உள்ளார். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, மின் இணைப்பு வழங்க நகராட்சி மூலம் எந்தவித சான்றிதழும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவலில் நகராட்சி அதிகாரிகள் மூலம் வழங்கிய தடை இல்லா சான்று மற்றும் வரிச்சான்று மூலமே மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டு இருந்தது. 2 துறைகளும் மாறுபட்ட கருத்து கூறுவதால் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூரில் இந்து முன்னணி சார்பில் பேனர் வைத்த போது, போலீசார் வழக்குப்பதிவு செய்து பேனரை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், ஊட்டியில் அரசியல் கட்சியினர் நகராட்சி அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் கொடிக்கம்பம் வைத்து உள்ளனர். எனவே போலீசார் பாரபட்சமாக செயல்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 
    ×