என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ramayana"
- ராமாயணம் முழுவதும் சரணாகதி தத்துவம் ஊடுருவி கிடக்கின்றது.
- காலனின் கையில் சிக்காமல் எந்த உயிரும் தப்பிப்பதற்கு இல்லை.
ஓரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவும் மக்களை நல்வழிப்படுத்தவும் சரணாகதி தத்துவத்தை போதிப்பதற்காகவும் ஏற்பட்டது. இந்த அவதாரம் தாய் தந்தையரிடம், குருவிடம், உடன் பிறந்தோரிடம், மனைவியிடம், விரோதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் உதாரண புருஷனாக திகழ்கிறான் ஸ்ரீ ரகுராமன்.
அரசனாக எப்படி நல்லாட்சி செய்ய வேண்டும். குடி மக்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் விளக்கிக் காட்டுகிறான். மக்களுடைய மகிழ்சியிலும் துக்கத்திலும் ஸ்ரீராமன் பங்கு கொள்வதை மிக அழகாக காட்டுகிறது ராமாயணம்.
விபீஷணன் இலங்கையை விட்டு ஸ்ரீராமனிடம் அடைக்கலம் கேட்டு வரும் போது ஸ்ரீ ஹனுமான் போன்றோரின் அபிப்பிராயத்தைக் கேட்டபின் சரணாகதி தத்துவத்தை மிக அழகாக விளக்குகிறான் ஸ்ரீராமன்.
என்னை சரணம் அடையக் கூட வேண்டாம். தோழன் என்று நினைத்து என்னிடம் வந்தாலே போதும். அவனை ஒருகாலமும் கைவிடமாட்டேன் என்றான் ஸ்ரீராமன். இதையே சீதாபிராட்டியம் ராவணனிடம் கூறுகிறான்.
ஸ்ரீராமனுடன் உனக்கு தோழமை ஏற்படட்டும் என்ற ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திலும் சரணாகதியின் பெருமை கூறப்படுகிறது.
தேவர்களின் சரணாகதி போன்று ராமாயணம் முழுவதும் முனிவர்களின் சரணாகதி பரதன் சரணாகதி விபீஷணன் சரணாகதி போன்று ராமாயணம் முழுவதும் சரணாகதி தத்துவம் ஊடுருவி கிடக்கின்றது. அதனால் வைஷ்ணவர்கள் ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்றே போற்றுவர்.
நாமும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்ரீசீதாப்பிராட்டியையும் சரணாகதி அடைவோம். ஸ்ரீராமநாமத்தை ஜெபிப்போம். சகல பாவங்களையும் நீக்கி சகல நன்மைகளையும் பெறுவோம்.
ஸ்ரீராமன் ஓர்அனுஷ்டான சீலர். ஆன்மீக செல்வர். இணையற்ற பராக்கிரமசாலி. ஈகையால் உயர்ந்தவர். உத்தமமான பல குணங்களை கொண்டவர். ஊரார் போற்றும் ஊறுதியான வீரம் பல படைத்தவர். எத்திசையும் புகழ் பெற்ற புனிதன். ஏற்றம் மிக்கவன். ஒழுக்கத்தால் ஒப்பற்றவன். ஒளஷதமாய் அனைவரையும் காத்து ரக்ஷிப்பவர்.
இம்மணுலகில் பிறக்கின்ற எவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். அவனவன் இறக்கும் நாள் முன்பே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. நிலையாமை ஒன்றே தனது பெருமையாய் கொண்டது இவ்வுலகம்.
மனிதனோ காலாகாலத்திற்கு இங்கேயே நிலைத்திருக்கப்போவதாய் எண்ணி இறுமாப்பு அடைகிறான். படைப்பின் உண்மை பிறந்தவர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும். இந்த உண்மையை அறிந்தவர் எத்தனைபேர்? தன் வாழ்க்கையை உறுதி செய்ய மனிதன் முயல்கிறான். ஆனால் மனித வாழ்வை இறுதி செய்ய காலன் வந்துவிடுகிறான்.
காலனின் கையில் சிக்காமல் எந்த உயிரும் தப்பிப்பதற்கு இல்லை. இந்த வாழ்க்கை நிலையற்றது. ஒரு நாளில் கூற்றுவனின் பிடி இறுகும் என்பதை யார் புரிந்து கொண்டிருக்கிறாரோ அவன் அறநெறி தவறாது வாழ்வான். ஸ்ரீராமனை சரணாகதி அடைந்து தானதர்மங்கள் செய்து வாழ்வை அர்த்தமுடையதாக்கி கொள்வான்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறினார். தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க.வினர் அனுமன் முஸ்லிம் என்றும், ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், ஜெயின் சமூகத்தவர் என்றும் பலவாறு கூறிவருகின்றனர். இதற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுபற்றி எழுதியிருப்பதாவது:-
இந்த விவாதம் தேவையற்றது, அர்த்தமற்றது. உத்தரபிரதேச அரசு புதிய ராமாயணத்தை அதன் முக்கிய பாத்திரங்களுக்கு சாதி முத்திரையுடன் எழுத முயற்சிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவிலை இன்னும் கட்டவில்லை. ஆனால் விசுவாசம் மற்றும் பக்தியின் வடிவமான அனுமன் சாதி பற்றி பா.ஜனதா விவாதத்தை தொடங்கியுள்ளது. அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது. தங்களை இந்துக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்பவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களோ, முற்போக்குவாதிகளோ இதை கூறினால் இந்துக்களின் பாதுகாவலர்கள் அமளியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. #ShivSena #Ramayana
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் ராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் ராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்