search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police patrol"

    • பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    குனியமுத்தூர்,

    போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத் தொட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இப்பகுதியில் எதிர் எதிரே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதனால் எந்த நேரமும் குடிமகன்கள் இப்பகுதியில் கும்மாளமிட்டு வருவது வழக்கம். சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தில் உள்ள பொருட்களை அபேஸ் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் ஹெல்மெட்டுகள் மேலும் வீட்டிற்கு வாங்கி செல்லும் பொருட்கள் ஆகியவை காணாமல் போய் விடும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அடிதடி ரகளை சம்பவங்களும், கூச்சல் குழப்பங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயந்து கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    ஈச்சனாரியை சேர்ந்த முத்து என்பவர் நேற்று சாரதா மில் ரோட்டில் அமைந்துள்ள அரசன் தியேட்டர் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிக்கெட் விவரம் தெரிந்து கொள்ள உள்ளே சென்றார். இரண்டு நிமிடங்களில் வெளிவருவதற்குள் வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பேக் திருட்டு போய்விட்டது.

    ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியிருந்த பேக் திருடு போய்விட்டதால், அதிர்ச்சி அடைந்த அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தியேட்டர் வளாகத்தில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இதுமட்டுமன்றி சராசரியாக ஒரு நாளைக்கு 10 -க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகள் காணாமல் போய் வருகிறது.

    சாரதாமில் ரோடு கார்னரில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. நடந்து செல்லும் தூரத்தில் போத்தனூர் காவல் நிலையமும் உள்ளது. ஆனாலும் இப்பகுதியில் திருட்டு நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கூறுகையில், 24 மணி நேரமும் சீருடை இல்லாத போலீசார் இப்பகுதியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பின் தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர். 

    சென்னையில் 2-வது நாள் போலீஸ் வேட்டையில் 500 பேர் சிக்கினர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும் சிக்கினர்.

    சென்னை:

    சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 14 பேரிடம் வழிப்பறி நடந்தது.

    இதனையடுத்து நேற்று முன்தினம் இரவில் சென்னை மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்றது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 700-க்கும் மேற்பட்ட லாட்ஜீகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர்.

    போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே நாள் இரவில் பிடிபட்டனர். வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளும் சிக்கினர்.

    2-வது நாளாக நேற்று இரவும் வாகன சோதனை நடத்தப்பட்டது. குற்ற பின்னணியை கொண்டுள்ள பழைய குற்றவாளிகள், பிடிவாண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடந்தது.

    இதில் நேற்று இரவும் 500 பேர் சிக்கினர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும் சிக்கினர். வாகன சோதனையின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 53 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    வனப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் நக்சல் தடுப்பு போலீசார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #Maoist

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்குள் பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மெண்ட்கள் உள்ளன. தமிழக வனப்பகுதியின் தொடர்ச்சியாக கேரள வனப்பகுதி மிக அதிக பரப்பளவில் உள்ளது.

    இதில் கேரள வனப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் நக்சல் தடுப்பு போலீசார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நக்சல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, ஆகியோர் அடங்கிய குழுவினர் வால்பாறை பகுதியில் உள்ள நெடுங்குன்று, பரமன்கடவு, ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    துப்பாக்கியுடன் ரோந்து சென்ற போலீசார்.

    இதில் வனப்பகுதிக்குள் புதிய நபர்களைக் கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்களிடம் அறிவுறுத்தினர்.

    கொட்டும் மழையில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து சென்றதால் மலை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. #Maoist

    ×