search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pitru paksha"

    மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    காகத்துக்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?

    தினமும் காலையில் சாப்பிடத் தொடங்கும் முன்பு, உங்கள் முன்னோரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த உணவு உங்களால் வந்தது என்று மனதுக்குள் நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நன்றி சொல்லி விட்டால் போதுமா? அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு காகம் உதவுகிறது. தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். தினமும் காகத்துக்கு உணவளிக்கும் பட்சத்தில் நாளடைவில் உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.

    எந்த நட்சத்திரத்தில் என்ன பலன்?

    சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

    நோயில் இறந்தவர்களுக்கு பிரதமையில் தர்ப்பணம்

    சிலர் நீண்ட நாட்கள் ஏதாவது தீராத கொடிய வியாதிகளில் சிக்கி மரணம் அடைந்து இருப்பார்கள். சிலர் கடைசி வரை புத்திர பாக்கியம் கிடைக்காமல் ஒரு வித ஏக்கத்துடன் வாழ்க்கையை முடித்து இருப்பார்கள். சிலர் விபத்துகளில் உயிரிழந்திருக்கலாம். சிலருக்கு சர்க்கரை வியாதிகளால் கை விரல், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு இறந்து இருக்கலாம். இத்தகைய பித்ருக்களுக்கு பிரதமை திதியன்று வழிபாடுகள் செய்வது நல்லது.

    விவாகரத்தில் இறந்தவர்களுக்கு துவிதியில் தர்ப்பணம்

    விவாகரத்து பெற்றவர்களில் சிலருக்கு கடைசி வரை வேறு திருமணம் நடக்காது அவர்கள் மனக்குறையுடன் உயிர் விட நேரிடலாம் சிலர் சுவாச கோளாறால் இறந்தவர்கள் இத்தகைய பித்ருக்களுக்கு தூவிதியை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.
    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள்.
    அகன்ட பாரத தேசத்தில் சுழன்று வரும் அறுபது வருடங்களிலும் உத்தமமான மாதமாக புரட்டாசி மாதம் திகழுகின்றது. சூரிய பகவான் தன் சொந்த வீடான சிம்மத்திலிருந்து புறப்படுகின்ற மாதம் கன்யா மாதம் என்றும் பாத்ரபத மாதம் என்றும் வழங்கப்படுகின்றது.

    இந்த பாத்ரவத மாதத்தில் தான் நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நமக்கு பல விதமான பலன்களை தரத்தயாராக இந்த பூவுலகிற்கு வந்து நலம் தரப்போகும் எள்ளு கலந்த நீரை நெஞ்சார பருகி நமக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையுடன் கன்றுக்கிரங்கும் பசு போல் நம்மை வாழவைக்க இவ்வகையகம் வரும் மஹாளய பசமும் இம்மாதத்தில் தான் வருகிறது.

    ஒருவன் தான் ஜனிக்கும் போதே தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் என்கிற மூன்று கடன்களுடன் பிறக்கிறான். பரந்தாமன் உறையும் தெய்வீக ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாலும் வீட்டில் தெய்வீக முறைகள் யாகங்கள், ஹோமங்கள் செய்வதாலும் தன்னுடைய தேவ கடன் அடைக்கிறான்.

    மஹான்கள் பாதங்களில் நமஸ்காரங்கள் செய்து அவர்களது நல்ல உபதேசங்களை கேட்டு வாழ்க்கையை நடத்துவதாலும் நம் கோத்ர பூர்வர்களான ரிஷிகளின் சரித்திரத்தை கேட்டும் வணங்கி வழிபடுவதாலும் ரிஷியினுடைய கடனையும் அடைக்கிறான். மூன்றாவதானதும் முக்கியமானது பல சாபங்களை தவிர்க்க வல்லதாகவும் இருக்கிற பித்ரு கடனை ஒருவன் மாதா மாதம் அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்பணங்களாலும் வருடாவருடம் செய்யும் திதி அன்ன சிராத்தத்தையும் சிரத்தையாக செய்து மேற்படி கடனை அடைக்கிறான்.

    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள். இந்த இரண்டு அமாவாசை தினங்களிலும் பித்ருக்களை மிகக் கட்டாயமாக பூஜித்து தர்ப்பண தானங்கள் செய்ய வேண்டும்.

    இது தவிர மாதா மாத அமாவாசையிலும் செய்ய வேண்டியது. இதில் ஏதாவது சில சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாமல் போனதையும் குடும்பத்திலுள்ள சகலமான காலஞ்சென்றவர்களின் நினைவாகவும், கட்டாயம் மகாளய அமாவாசையன்று தர்ப்பண தானங்களை செய்ய வேண்டும். பவுர்ணமி ஆரம்பித்து மஹாளய பஷமான 15 தினங்களிலும் செய்வது மிக சிறப்பு. முடியாதவர்கள் கட்டாயம் மஹாளய அமாவாசை தினம் செய்ய வேண்டும்.

    இத்தகைய மகிமை வாய்ந்த பித்ரு கடனை தீர்க்க பல புண்ணிய நதிகள், புண்ய புஷ்கரிணிகள் (குளங்கள்) இருக்கின்றன. இவைகள் கிடைக்காத பட்சத்தில் வீட்டிலேயே கும்பம் வைத்து நீர்நிரப்பி அதில் கங்கையை பூஜித்து அந்த தண்ணீரால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. மஹாளய அமாவாசையன்று தர்ப்பணத்துடன் திதி சிராத்தம் அன்ன ரூபமாக செய்வது சிறப்பு அல்லது அதற் குண்டான பொருட்களை வாங்கி ஆமரூபமாக செய்வதும் நல்லது. இதை சாதாரணமாக அரிசி கொடுப்பது என்பர். இதுவே ஆமரூபமான சிராத்தமாகும்.

    இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த பித்ருக்களுக்கு புண்ணிய நதி களோ புண்ணிய தீர்த்தங்களோ தென்புறத்தில் இருந்தால் மிக மிக மேன்மையானது. அப்படி சில புண்ணிய தலங்களில் கோவிலுக்கு தென்புறத்தில் புண்ணிய தீர்த்தங்கள் அமைய பெற்றிருக்கும். இந்த தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலனை தரவல்லது.

    இவ்வளவு பெருமைகளை உடைய புண்ணியதீர்த்தம் பாரத தேசத்தில் தென் பாகத்தில் திராவிட தேசத்தில் ஆன்மீகத்தின் அடித்தளமான தமிழ் நாட்டில் தலைநகராம் சென்னை பட்டினத்திற்கு அருகில் (சுமார் 45 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது. இந்த புண்ணிய பூமிக்கு புண்ணியாவர்த்த சேத்ரம் என்ற பெயர். இந்த புண்ணிய, புஷ்கரணிக்கு கிருந்தாப நாசினி என்றும் பெயர்.

    தற்போது இந்த திவ்ய தேச தலம் திருமழிசை ஆழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்று மங்களாசாசன திவ்யதேசமாக திரு எவ்வுள் என்றும் மருவி திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. புண்யாவர்த்தம் இந்த தலத்தில் தெரிந்தோ தெரியாமலோ புண்யம் செய்தால் அது பல மடங்கு ஆவர்த்தமாகிறது.

    ஒரு புண்ணியம் பண்ணினாலே பல பாபங்கள் நசித்து விடும் என்பது சாஸ்திரம். அப்படியிருக்க இந்த தலத்தில் யார் ஒருவரும் பாபம் பண்ண நினைக்க முடியாது. இத்தகு பெருமை வாய்ந்த புண்யாவர்த்த சேத்தரமான திருவள்ளூருக்கு புரட்டாசி மாதத்தில் வந்து ஸ்ரீவீரராகவனை வணங்கி ரிஷிகடனையும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பித்ரு தர்பணங்கள் செய்து பித்ரு கடன்களையும் நிறைவேற்றி நீங்காத செல்வங்கள் நிறைந்து எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழ வைத்திய வீரராகவனின் திருவடிகளில் வணங்கி வழிபடுவோம்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.
    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்து விட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று சொல்ல மறந்து விடக்கூடாது. பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப் பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் நீத்தார் வழிபாடு நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமை களையும் செய்தனர். அதை செஞ் சோற்று கடனாக நினைத்தனர்.

    இப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் இருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.

    மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    இன்று காலையும் திரளானோர் வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. திருவள்ளூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவில் குளத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் வழிபட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

    கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது’’ என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற் குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய் வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம்.

    அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
    முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.
    ‘மறந்தவனுக்கு மகாளயபட்சம்’ என்பது பழமொழி. அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.

    தென் புலத்தில் இருக்கும் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் அவ்வுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பவுர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

    அந்நாட்களில் புனிதத் தலங்கள் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டுதல் செய்யலாம். அவரவர் சக்திக்கு தகுந்தவாறு வஸ்திரதானம், அன்னதானம், சிரமப்படும் மாணவர்களின் கல்விக்கு வித்யாதானம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம்முடன் இருக்கும் நம் முன்னோர்கள் மகிழ்வுடன் நம்மையும் நம் வாரிசுகளையும் ஆசீர்வதிப்பார்கள்.

    அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.
    மகாளய பட்சத்தின் மிக முக்கிய அம்சமே அன்னதானம் செய்ய வேண்டும் என்பது தான். அன்னதானத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நின்று செய்தால் அதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.

    அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.

    மேலும் ஏழைகளுக்கு அன்னத்தை தானம் செய்யும் போது, உங்கள் பித்ருக்களை மனதில் தியானம் செய்து கொண்டே மிக, மிக பணிவுடன் செய்ய வேண்டும். அன்னதானம் செய்கிறோம் என்ற அகந்தை மனதுக்குள் துளி அளவு கூட வந்து விடக்கூடாது.

    அதுவும் அன்னத்தை குடும்பத்து பெண்கள் தங்கள் கைப்பட சமைத்து வழங்கி இருந்தால், அந்த பெண்களுக்கு அபரிதமான பலன்கள் கிடைக்கும்.

    அன்னதானத்துடன் பித்ரு காரியங்களுக்கு உரியதாக கருதப்படும் எள் உருண்டை, அதிரசம், பணியாரம், தேன்குழல், உளுந்து வடை, தேங்காய்பால், பால்பழம், சுசீயம், மாவு உருண்டை மற்றும் இனிப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம். சிலர் தங்கள் மூதாதையர்களுகு பிடித்த உணவு வகைகளை அன்னதானத்துடன் சேர்த்து வினியோகம் செய்வார்கள். இவையெல்லாம் பித்ருக்களை முழுமையான அளவில் திருப்திப்பட வைக்கும்.
    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

    * முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது.

    * குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது.

    * சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம்.

    * தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது.

    * அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது

    * தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது.

    * பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது.

    * நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. 
    மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியமாகும். தானம் செய்வதன் மூலம் நமது கர்மவினைகளை தூள் தூளாக்க முடியும்.
    சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

    இவர்கள் “காருண்ய பித்ருக்கள் என்று அழைக் கப்படுகின்றார்கள்’’. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.'

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. எனவே மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியமாகும். தானம் செய்வதன் மூலம் நமது கர்மவினைகளை தூள் தூளாக்க முடியும்.
    எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள்     - பலன்கள்

    அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்
    துணி - ஆயுள் அதிகமாகும்
    தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
    தீபம் - கண்பார்வை தெளிவாகும்
    அரிசி - பாவங்களை போக்கும்
    நெய் - நோய்களை போக்கும்
    பால் - துக்கம் நீங்கும்
    தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
    பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
    தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
    வெள்ளி - மனக்கவலை நீங்கும்
    பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
    தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
    நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
    பூமி தானம்     - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று இருக்கிறது.

    அது தான் பசுவிற்கு உணவளிப்பது. கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை நீக்கலாம். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வந்தால் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

    கர்ணனின் தான தர்மம்

    மகாபாரதத்தின் பிரபல வீரனான கர்ணன் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கம் சென்றான். அதுவரை அவன் செய்த தருமங்கள் நூறு மடங்காக பெருகின. ஆனால் அது அத்தனையும் வெள்ளியும், தங்கமுமாக இருந்தன. உணவாக இல்லை. இதனால் அவன் உணவுக்காக கஷ்டப்பட்டான். இது குறித்து அவன் எமதர்மராஜனிடம் கூறி வருத்தப்பட்டான்.

    அதற்கு அவர் நீ பூமியில் வாழ்ந்த காலத்தில் பிறருக்கு பொன்னும், பொருளும், தானமாக வழங்கினாய். அவை அனைத்தும் இங்கு உள்ளன. ஆனால் யாருக்கும் அன்னதானம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது எனக்கூறி இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 14 நாட்கள் அவனை பூமிக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்படியே பூமிக்கு வந்த கர்ணன் 14 நாட்கள் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினான். பிறகு மேலுலகத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு உணவு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் இந்த 14 நாட்கள் அவன் அன்னதானம் செய்தான். எனவே இந்த மாதத்தில் வழங்கப்படும் தானங்கள் எல்லா பித்ருக்களுக்கும் நலம் தருகின்றன.
    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.
    பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கடவுளுக்கு முதலில் பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது.

    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.

    பகவான் பாண்டுரங்கன் ஒரு தடவை தன் பக்தன் ஹரிதாசரைப்பார்க்க சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்கு பணி விடைகள் செய்து கொண்டிருந்தார். பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானை பார்த்து, சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணி விடைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக் காட்டினாராம். உடனே பகவான் பாண்டுரங்கன் அந்த செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணி விடைகளை முடித்து விட்டு வந்த பிறகு அவருக்கு பகவான் ஆசி வழங்கினாராம்.

    எனவே நம் வீட்டு பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய்-தந்தையை பட்டிப்போட்டு விட்டு கோவிலுக்கு சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும். ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

    ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 96 நாட்கள் எவை-எவை என்ற விவரம் வருமாறு:-

    மாதபிறப்பு நாட்கள்-12, மாத அமாவாசை-12, மகாளபட்ச நாட்கள்-16, யுகாதி நாட்கள்-4, மன்வாதி நாட்கள்-14, வியதீபாதம்-12, வைத்ருதி-12, அஷ்டகா-4, அன்வஷ்டகா-4, பூர்வேத்யு-4 ஆக மொத்தம் 96.

    இந்த 96 நாட்களை விட தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி நாள்தான் ஒருவருக்கு மிக, மிக உயர்ந்தது என்று ஆச்வலாயன மகரிஷி கூறி இருக்கிறார். சிலருக்கு தங்கள் பெற்றோர் மரணம் அடைந்த தினத்துக்கான திதி தெரியாமல் இருக்கலாம். தர்ப்பணம் செய்து வைப்பவர்களிடம் கூறினால் அவர்கள் திதி விவரத்தை மிகச் சரியாக சொல்லி விடுவார்கள்.
    ×