search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தர்ப்பணம் பற்றிய 9 தகவல்கள்
    X

    தர்ப்பணம் பற்றிய 9 தகவல்கள்

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

    * முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது.

    * குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது.

    * சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம்.

    * தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது.

    * அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது

    * தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது.

    * பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது.

    * நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. 
    Next Story
    ×