search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parthiban"

    • இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பண்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன்.
    • இவர் தற்போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    1989ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி தேவை, ஹவுஸ் ஃபுல், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர்.


    பார்த்திபன்

    பார்த்திபன்

    இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் நடிகர் பானுசந்தருக்கு பார்த்திபன் டப்பிங் கொடுத்த வீடியோவை பகிர்ந்து, இந்தக் குரல் யாரெனத் தெரிகிறதா? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி பதில் பதிவிட செய்துள்ளது.

    • பார்த்திபன் ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பார்த்திபன்

    இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கான உங்களுக்கு!ஆனால், புத்துயிர் பிறந்ததே இன்று(14/04/1989)தான் 'உங்கள் பார்த்திபனா'ன எனக்கு! விடியாத பொழுதுகளாய்,பொழுதுகள் விடிந்துக் கொண்டிருந்த அப்பொழுதுகளில்,நல்வாழ்வின் விடியல் பொழுதாய் மலர்ந்தது இப்பொழுது அப்பொழுது மறக்க முடியாத நாள் என் வாழ்வில்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


    பார்த்திபன்-மணிரத்னம்

    பார்த்திபன்-மணிரத்னம்

    இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக பார்த்திபன் புதிய ஐடியா கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென… அவர் பதில்… என்று குறிப்பிட்டு மணிரத்னம் கொடுத்த பதிலையும் இணைத்துள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை சில இடங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் திரையரங்கத்தில் அனுமதிக்காத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக இயக்குனர் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை சென்னை ரோகிணி திரையரங்கில் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.


    அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்
    அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்

    இதையடுத்து யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை, வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சமமாய் மதித்து இருக்கை தர வேண்டுமென 2000-ல் தேசிய விருது பெற்ற 'house full' என்ற என் படத்தில் காட்சி படுத்தியிருக்கிறேன் என்று பார்த்திபன் பதிவிட்டு ஹவுஸ் ஃபுல் படத்தின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இந்த படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இந்த படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பத்திரிகையாளர்களிடம் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "என்னை மாதிரியானவர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த சந்தோஷத்தோடு நெஞ்சில் வாள் சுமந்து வந்திருக்கிறேன்.

    பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை. முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் சென்று ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டேன். நான் முதல் பாகத்தை பார்க்காதது பெரிய ஆச்சர்யமான செய்தி. முதல் பாகத்தில் என்ன இருந்தது என்று தெரியாது இரண்டாவது பாகத்தில் என்ன இருக்க போகிறது என்று தெரியாது , இந்த படத்தில் நான் இருப்பது தான் என்னுடைய சந்தோஷன் பெருமை என்று நினைத்திருந்தேன்.

    முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சின்ன கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடித்திருந்தேன் என்று கூறினார்கள். எல்லா படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். வரலாற்று படத்திற்கு மட்டுமல்லாமல் சராசரி படத்திற்கு கூட வரலாறு படைக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்" என்று பேசினார்.

    • சில தினங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்.
    • புதுச்சேரியில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்தனர். பின்னர் இவரது உடல் சென்னை வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    பார்த்திபன்
    பார்த்திபன்


    இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமிக்காக புதுச்சேரியில் பார்த்திபனின் மக்கள் மன்றம் சார்பில் நினைவேந்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்ட பார்த்திபன், மறையா மனிதம் மயில்சாமிக்கு…! என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    குடும்பத்தாருடன் அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித்தின் பண்பை பாராட்டி இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கடந்த 2019-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒத்த செருப்பு’.
    • இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    ஒத்த செருப்பு

    பார்த்திபன் மட்டுமே தனி கதாபாத்திரமாக நடித்திருந்த இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை பார்த்திபனே தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை மலையாள நடிகர் மோகன் லாலை வைத்து ரீமேக் செய்ய முயற்சித்ததாக பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    பார்த்திபன் -மோகன் லால்

    அதில், "'Alone'(Malayalam) இன்னும் பார்க்கவில்லை.actual-ஆ ஒத்த செருப்பை லால் சாரை வைச்சுதான் remake செய்யனும்னு ஆசைபட்டேன் முயற்சியும் பண்ணேன். எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்திருக்கிறது. மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    இரவின் நிழல்

    மேலும், இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்த்திபன் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இவர் இந்தாண்டு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.


    ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் கொடுத்த பரிசு

    இந்நிலையில், நடிகர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பியானோ வடிவில் பரிசு ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், "ஆன்மாவை அலங்கரிப்பது இசை.இசைப்புயலின் அலுவலக அலங்காரத்தில் என் பரிசும். மனதில் மகிழ்ச்சி tune ஆகிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அடுத்த பட கூட்டணியா இருக்குமோ என்றி சலசலத்து வருகின்றனர்.


    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், 'லியோ' படத்தை புகழ்ந்து நடிகர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "காதல்(ர்)நவாஸ்கான் சாலையில் நேற்று… பெரும் பணக்கார காப்பி கடைகளைவிட, நாயர் கடை சாயாவே என் சாய்ஸ்! ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா, தூளை மாத்தி, கண்ணாடி டம்ளரின் உதட்டடோரத்தை விரல்களால் வருடித் துடைத்தபடி, வாயை வைத்துரிஞ்சி சூடா ஒரு சிங்கிள் அது தே(னீர்)வாமிர்தம் !


    லியோ

    CARB(அரிசி/கோதுமை)பினில் அன்றி-cold Coffeeயினிலும் அவரவர் பெயர் எழுதி எழுதியிருக்கிறதே!! but bloody Tasty! அந்த காலத்தில் நான் விரும்பிக் குடித்தது லியோ காபி( விளம்பரத்திற்கு அணுகிவிடுவார்களோ?) சமீபத்தில் விரும்பிப் பார்த்ததும் பிடித்ததால் திரும்பப் பார்த்ததும் 'leo' !

    லியோ: தளபதி விஜய் கலீலியோ: லோகேஷ் கனகராஜ் ! அவரோ அறிவியல் அறிஞர் இவரோ அறிவின் செறிவர்! செறிவு: ConcenTRIC(k) எதையுமே திட்டமிட்டு, அடர்த்தியான கவனத்துடன் வெற்றியாக்கும் trick ! LOKESH ! Low cash budget நகரை மா'நகராக்கி, இன்று Highest paid director ஆக, ஆகச்சிறந்த வெற்றி படைப்பின் universe ஆக இருப்பது பெருமை!" என்று பதிவிட்டுள்ளார்.


    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உலகமே சிரித்து மகிழ காரணமான ஒருவரின் கண்களில் உருண்டு வழியும் கண்ணீரில் அவரின் தாயார் மறைவு. திரு வடிவேல் அவர்கள் தன் மீளா துயரிலிருந்து விரைவில் ஆறுதல் பெற விரும்பும் நண்பர்களில் நானும் ஒருவனாக!" என்று பதிவிட்டுள்ளார்.


    ×