search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரபேல் நடால் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் சுற்றை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.

    இதையடுத்து, ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

    ரபேல் நடால் இதுவரை 16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர். இவர் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் மற்றும் மரின் சிலிச் ஆகியோர் பங்கேற்ற காலிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
    தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் அர்ஜெண்டினாவின் டிகோ ஷ்வர்ட்ஸ்மான் மோதினர்.



    இதில், முதல் செட்டில் அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய நடால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் மற்றும் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர். முதல் சுற்றில் 6-6 என்ற கணக்கில் சமநிலை வகித்தபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்த ஆட்டங்கள் மறுநாள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் செச்சினடோ முன்னாள் சாம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலியின் மார்கோ செச்சினடோவும் மோதினர்.



    இதில், இத்தாலி வீரர் செச்சினடோ முதல் இரண்டு சுற்றுகளை 6-3, 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, மூன்றாம் சுற்றை 1-6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற நான்காவது சுற்றில் செச்சினடோ அபாரமாக விளையாடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், இத்தாலி வீரர் மார்கோ செச்சினடோ 6-3 7-6(4) 1-6 7-6(11) என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பாரிஸ் நகரில் நான்காவது மாடி பால்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார். #parishero #parisspiderman #EmmanuelMacron
    பாரிஸ்:

    மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

    அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

    ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

    பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.


    இந்த வீடியோ பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    ஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மமூது கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார். #parishero #parisspiderman #EmmanuelMacron

    பாரீசில் 4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர் மேன் போல் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்த வாலிபருக்கு அதிபர் நேரில் பாராட்டு தெரிவித்தார். #spiderman #paris
    பாரீஸ்:

    மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

    அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

    ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

    பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.

    இந்த வீடியோ பேஸ்புக் சமூக வலை தளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    ஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார். #spiderman #paris
    பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Knifeattack
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.



    இந்நிலையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவன் செசன்யா நாட்டை சேர்ந்தவன் என்பதும், கம்சாத் (29) என்ற வாலிபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக கம்சாத்தின் நண்பரை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர். #Knifeattack
    பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Knifeattack #emmanuelmacron
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கோரத் தாண்டவத்தில் ஈடுபட்ட அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.



    இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரத்தத்துக்கான விலையை பிரான்ஸ் மீண்டும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் வலைத்தளத்தில், பாரிஸ் தாக்குதலுக்கு எங்கள் அமைப்பு தான் மூளையாக செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Knifeattack #emmanuelmacron
    பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆசாமி உள்பட 2 பேர் பலியாகினர். #Paris #Knifeattack
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ். இந்த கட்டிடத்தின் அருகே இன்று ஒரு மர்ம நபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான்.

    இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Paris #Knifeattack
    ×