search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvNZ"

    • நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் சதம் அடித்தார்.

    கராச்சி:

    பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

    இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார்.

    86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடனும் (277 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஹா சல்மான் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பாபர் அசாம் அவுட் ஆனார். அவர் 161 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் செளதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    • விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தாரை வார்த்தது. சொந்த மண்ணில் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழுமையாக தோற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மாற்றப்பட்டது.

    கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, நஜம் சேத்தி அமர்த்தப்பட்டார். தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரிலும் அவர் சொதப்பினால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார்.

    தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார். 86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது.
    • மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மீண்டும் விக்கெட் கீப்பராக அணிக்குள் இணைந்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பைனல் செல்லும் வாய்ப்பை இவ்விரு அணிகளுமே இழந்து விட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அஜாஸ் படேலின் 4-வது ஓவரின் 3-வது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் பந்தை தவற விட்டதை பயன்படுத்திய விக்கெட் கீப்பர் டாம் ப்ளன்டல் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்து 7 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஷான் மசூத் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மற்றொரு ஸ்பின்னர் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து பந்தை நழுவ விட்டார். அதை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் மீண்டும் துல்லியமாக ஸ்டம்பிங் செய்து அவரை 3 ரன்களில் அவுட்டாக்கினார்.

    பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவது மிகவும் அரிதாகும். அதிலும் போட்டி துவங்கியதுமே பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பந்து வீசுவார்கள் என்பதால் எட்ஜ், போல்ட், எல்பிடபிள்யு, கேட்ச் ஆகிய முறைகளில் தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட்டாவார்கள்.

    ஆனால் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் குறிப்பாக ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு அரங்கேறியதில்லை. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

    • நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.

    சிட்னி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்குசன் (தலா 7 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

    அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப் கான் (10 விக்கெட்), ஷாஹின் ஷா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இறுதிப்போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய அரையிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெஸ்ட் தொடரில் வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானை 49 வருடத்திற்குப் பிறகு வீழ்த்தி நியூசிலாந்து சாதனைப் படைத்துள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன் (139), நிக்கோல்ஸ் (126 அவுட் இல்லை) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இன்றைய கடைசி நாளில் 81 ஓவர்கள் மீதம் இருந்தது.

    இமாம்-உல்-ஹக், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹபீஸ் 8 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அசார் அலி (5), ஹரிஸ் சோகைல் (9), ஆசாத் ஷபிக் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    இதனால் பாகிஸ்தான் 55 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அடுத்து வந்த பாபர் ஆசம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். மற்ற வீரர்களான சர்பிராஸ் அகமது (28), பிலால் ஆசிப் (12), யாசிர் ஷா (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


    ஹபீஸ் க்ளீன் போல்டாகிய காட்சி

    அரைசதம் அடித்த பாபர் ஆசம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 56.1 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

    நியூசிலாந்து கடந்த 1969-ம் ஆண்டு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன்பின் தற்போது 49 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.
    அபு தாபியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 272 ரன்கள் சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கேன் வில்லியம்சன் 139 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இன்று 9 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126 ரன்னுடன் களத்தில் இருந்தார்.


    கேன் வில்லியம்சன் - நிக்கோல்ஸ்

    ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சுமார் 81 ஓவர்கள் இன்று விளையாட வேண்டும். கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் எடுப்பது எளிதான காரியம் அல்ல. அதேவேளையில் கடைசி வரை விக்கெட் இழக்காமல் இருந்தால் டிரா செய்யலாம்.

    பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்றால் நியூசிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் பாகிஸ்தான் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து தொடரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது.
    அபு தாபி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் 33 இன்னிங்சில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் யாசிர் ஷா.
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய யாசிர் ஷா, 4-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    2-வது விக்கெட்டை வீழ்த்தும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்தார். யாசிர் ஷா 33 போட்டியிலேயே 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான கிரிம்மெட் 1936-ம் ஆண்டு 36 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப்படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை யாசிர் ஷா முறியடித்துள்ளார்.



    இந்திய அணியின் அஸ்வின் 37 போட்டியில் கைப்பற்றி 3-வது இடத்தையும், 38 போட்டியில் கைப்பற்றி லில்லீ, வக்கார் யூனிஸ் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் கேப்டன் கேன் வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து 104 ஓவர்கள் விளையாடி 272 ரன்கள் சேர்த்துள்ளது.



    தற்போது வரை 198 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கூடுதலாக 100 ரன்களுக்கு மேல் அடித்து 300 ரன்கள் முன்னிலைப் பெற்றால் நியூசிலாந்து போட்டியை டிரா செய்யும், அல்லது வெற்றி பெறும். சதம் அடித்த கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த பாகிஸ்தான் கனவை தகர்த்துள்ளார்.

    முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தொடரை தீர்மானிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியுள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. தபாயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ராவல் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராவல் 45 ரன்கள் எடுத்தும், கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.


    ஐந்து விக்கெட் வீழ்த்திய பிலால் ஆசிப்

    விக்கெட் கீப்பர் வாட்லிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் 42 ரன்னுடனும், சோமர்வில் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சோமர்வில் நேற்று எடுத்திருந்த 12 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்டேல் 6 ரன்னிலும், போல்ட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அரைசதம் அடித்த வாட்லிங் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 116.1 ஓவர்கள் விளையாடி 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.


    பிலால் ஆசிப் பந்தில் சோமர்வில் க்ளீன் போல்டாகிய காட்சி

    பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் பாகிஸ்தான் முதல் இனிங்சை தொடங்கியது. 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அப்பாஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    3-வது போட்டியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது அப்பாஸ் திகழ்ந்து வருகிறார். இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகமது அப்பாஸிற்குப் பதிலாக சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான 3 மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பரபரப்பாக ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

    துபாயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 184 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்கள் அள்ளினார்.



    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த டெஸ்டில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.



    3-வது போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. முகமது ஹபீஸ், 2. இமாம்-உல்-ஹக், 3. அசார் அலி, 4. அசாத் அலி, 5. ஹரிஸ் சோஹைல், 6. பாபர் ஆசம், 7. சாத் அலி, 8. சர்பிராஸ் அகமது, 9. யாசிர் ஷா, 10, பிலால் ஆசிப், 11. முகமது அப்பாஸ், 12. ஹசன் அலி, 13. பஹீம் அஷ்ரப், 14. ஷஹீன் அப்ரிடி, 15. மிர் ஹம்சா.
    அபு தாபியில் நடைபெற்று வந்த பரபரப்பான முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 171-ல் ஆல்அவுட்டாக்கி நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அபு தாபியில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 227 ரன்கள் சேர்த்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து 249 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.


    சோதி

    4-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அசாத் ஷபிக் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 155 ரன்னிற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

    ஒருபக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் அசார் அலி அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடினார். வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஹசன் அலி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 164 ரன்கள் எடுத்திருந்தது.


    அசார் அலி - அசாத் ஷபிக்

    வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டுக்க அசார் அலி உடன் முகமது அப்பாஸ் ஜோடி சேர்ந்தார். அப்பாஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு அசார் அலி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். 11 ஓவர்கள் தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்தார் அசார் அலி. இறுதியில் 65 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆக பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் பரபரப்பாக சென்ற டெஸ்டில் நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. பட்டேல் சிறப்பாக பந்து வீசி ஐந்துவிக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    ×