என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pakistan army
நீங்கள் தேடியது "Pakistan army"
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #Pakistanmilitarycourt
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள், ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள் என 202 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த ராணுவ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் 7 பயங்கரவாதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா உறுதிப்படுத்தியதாக ராணுவத்தின் செய்திப்பிரிவு தெரிவித்து உள்ளது. #Pakistanmilitarycourt
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள், ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள் என 202 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த ராணுவ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் 7 பயங்கரவாதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா உறுதிப்படுத்தியதாக ராணுவத்தின் செய்திப்பிரிவு தெரிவித்து உள்ளது. #Pakistanmilitarycourt
அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்துவரும் திட்டத்துக்கு டிரம்ப் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #UScutsmilitarytraining #UScutstrainingprog
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்க அரசு கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது.
இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார மசோதாவுக்கு(2019) ஒப்புதல் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் கடந்த 18-6-2018 அன்று வாக்கெடுப்பு நடந்தது. 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான இந்த மசோதாவை ஆதரித்து 85 உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பாராளுமன்ற காங்கிரஸ் சபையிலும் இரு சபைகளின் கூட்டுக் குழுவிலும் ஒப்புதல் பெற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் சட்டவடிவம் பெறும் இந்த மசோதாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் அரசுக்கு அளித்துவந்த உள்நாட்டு பாதுகாப்பு நிதியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
எனினும், அமெரிக்க அரசின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் திட்டம் கைவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் இந்த சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியில் வழக்கமாக ஆள்சேர்ப்பின்போது பாகிஸ்தானை சேர்ந்த 66 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறும் ஆள்சேர்ப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு நிதி அளிக்க டிரம்ப் அரசு மறுத்து விட்டதாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 66 இடங்களை வேறு நாட்டினருக்கு வழங்க அமெரிக்க ராணுவ தலைமையக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் பிரபல நாளிதழும் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதியும், அதிபருமான பர்வேஸ் முஷரப், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் நவீத் முக்தார் உள்ளிட்ட பலர் அமெரிக்க அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #UScutsmilitarytraining #UScutstrainingprog
இந்தியாவுடன் போர் நடைபெறுவதற்கு இடமில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதேசமயம், அமைதியை விரும்பும் பாகிஸ்தானை பலவீனமாக நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. #PakistanArmy
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரம்ஜான் நோன்பை முன்னிட்டு எல்லையில் தாக்குதலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான் ராணுவம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைமை இயக்குனர் ஆசிப் கபூர் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில் 1077 முறை எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. எங்களுடைய விருப்பம் எல்லாம் அமைதிதான் என்பதற்காக பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய ராணுவம் கடந்த வாரம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை மீறிய போதும் நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை. இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய போதுதான் நாங்கள் தாக்குதலை நடத்தினோம்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் மதிப்பளிக்க விரும்புகிறது. எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்பதை இந்தியர்கள் உணரவேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும். அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போருக்கு இடமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
எல்லையில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்திருப்பதாகவும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanArmy
பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. #AsadDurrani #PakistanArmy
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகள் இடையே பணியாற்றியவர், ஆசாத் துரானி இவர், ‘உளவு வரலாற்றுக் கூறு; ரா, ஐ.எஸ்.ஐ. மற்றும் அமைதியின் மாயை’(தி ஸ்பை குரோனிக்கல்ஸ், ரா, ஐ.எஸ்.ஐ. அண்ட் தி இல்லுயூசன் ஆப் பீஸ்) என்னும் புத்தகத்தை இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வின் முன்னாள் தலைவரான அஸ் துலாத்துடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகம் பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
எதிரி நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் இணைந்து உளவு பார்ப்பது குறித்த தகவல்களை எப்படி புத்தகமாக எழுதி வெளியிடலாம்? என்று இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. அதையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் இது ராணுவ நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை ஆசாத் துரானி மறுத்தார்.இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது. #AsadDurrani #PakistanArmy
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகள் இடையே பணியாற்றியவர், ஆசாத் துரானி இவர், ‘உளவு வரலாற்றுக் கூறு; ரா, ஐ.எஸ்.ஐ. மற்றும் அமைதியின் மாயை’(தி ஸ்பை குரோனிக்கல்ஸ், ரா, ஐ.எஸ்.ஐ. அண்ட் தி இல்லுயூசன் ஆப் பீஸ்) என்னும் புத்தகத்தை இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வின் முன்னாள் தலைவரான அஸ் துலாத்துடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகம் பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
எதிரி நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் இணைந்து உளவு பார்ப்பது குறித்த தகவல்களை எப்படி புத்தகமாக எழுதி வெளியிடலாம்? என்று இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. அதையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் இது ராணுவ நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை ஆசாத் துரானி மறுத்தார்.இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது. #AsadDurrani #PakistanArmy
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். #PakistanArmy #Violate
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் கமால் கூட் பகுதியில் உள்ள வீடுகள் மீது கையெறி குண்டுகளை வீசினர். தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு நேற்று அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanArmy #Violate
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X