search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NOTA"

    அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 4-ல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada
    அர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. 

    ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன்விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்காக தனது பிரசாரத்தை இன்று முதல் துவங்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 4-ல் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருகிறது. 

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    இதை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  முன்னாள் கொறடா ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 

    மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டாவை அனுமதித்தால் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்பதை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும் என சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.

    ‘நோட்டா முறையை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னர் கடந்த 2014-ம்  ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்குச்சீட்டுகளில் நோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

    அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன், தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ரெயிலில் செல்லும் போது அவதிப்பட்டிருக்கிறார். #Mehreen
    நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, ஹன்சிகா, சமந்தா என்று முன்னணி நடிகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதால் சென்னை, ஐதராபாத், மும்பை என்று படப்பிடிப்புகளுக்காக விமானத்திலேயே பறந்தபடி இருக்கிறார்கள்.

    கேரளாவில் நடிகையை காரில் கடத்திய சம்பவத்துக்கு பிறகு கதாநாயகிகளுக்கான பாதுகாப்பில் அக்கறை எடுக்கும்படி நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

    இந்த நிலையில் நடிகை மெஹ்ரீன் ரெயில் பயணத்தில் குடிபோதையில் இருந்த ஒருவரால் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

    மெஹ்ரீன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் தயாராகும் நோட்டா படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். 



    நோட்டா படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து மெஹ்ரீன் சென்னை புறப்பட்டார். ஆனால் அவருக்கு விமானம் கிடைக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணமானார். அப்போது அவரது இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து உட்கார்ந்து இருந்தார். அவர் மது அருந்தி போதையில் இருந்ததால் மெஹ்ரீனுக்கு பயம் ஏற்பட்டது. 

    நீண்டநேரம் ரெயிலில் நின்று கொண்டே பயணித்தார். பின்னர் தனது இயக்குனருக்கு போன் செய்து நிலைமையை விளக்கினார். அந்த இயக்குனர் காருடன் ரசிகர்களையும் அனுப்பி வைத்தார். அந்த ரசிகர்கள் மெஹ்ரீனை காரில் ஏற்றி சென்னை வரை வந்து பத்திரமாக இறக்கி விட்டு சென்றனர்.
    ×