search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
    X

    பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    இதை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  முன்னாள் கொறடா ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 

    மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டாவை அனுமதித்தால் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்பதை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும் என சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.

    ‘நோட்டா முறையை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னர் கடந்த 2014-ம்  ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்குச்சீட்டுகளில் நோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

    அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    Next Story
    ×