search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anand Shankar"

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நோட்டா' படத்தின் விமர்சனம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர். அவரது மகன் விஜய் தேவரகொண்டா, அரசியலில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாட்டில் வீடியோ கேம் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறு வயதிலேயே தாயை இழந்த விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு, இந்தியா வந்து தனது அம்மா பெயரில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆசிரமத்தை சத்யராஜ் நிர்வகித்து வருகிறார். அவரது மகளான மெஹ்ரின் பிர்சாடா பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறார்.



    இப்படி இருக்க, தனது பிறந்தநாளுக்காக இந்தியா வரும் விஜய் தேவரகொண்டா, தனது பிறந்தநாளை கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்துடன் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், நாசர் அழைப்பின் பேரில் அவசரமாக அழைத்துச் செல்லப்படும் விஜய் தேவரகொண்டா இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.

    நாசர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எண்ணிய நாசர், சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனையே முதலமைச்சராக்குகிறார். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை விஜய் தேவரகொண்டா வெளியில் வரவேண்டாம் என்றும் நாசர் அறிவுறுத்துகிறார்.

    இந்த நிலையில், நாசருக்கு எதிராக அந்த வழக்கின் பின்னணி திரும்ப, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாசர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் கலவரம் மூள்கிறது. அந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்டுகிறது. இந்த நிலையில், செய்வதறியாது தவிக்கும் விஜய், மக்களை சந்திக்க வெளியில் வருகிறார்.



    அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆக்ரோஷமாக பேசும் விஜய், கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது ஆக்ரோஷமான உத்தரவு அவருக்கு ரவுடி முதலமைச்சர் என்ற பெயரை வாங்கிக் கொடுக்கிறது. எதிர்கட்சி தலைவரின் மகளான சஞ்சனா நடராஜன், கல்லூரியில் படிக்கும் போதே விஜய் ரவுடி தான் என்று பிரசாரம் செய்து, அவருக்கு எதிராக சில சதிதிட்டங்களையும் தீட்டுகிறார்.

    இதற்கிடையே ஜாமீனில் வெளியில் வரும் நாசர், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைந்து தற்போது மக்களுக்காக உழைக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கவனம் செலுத்துகிறார் விஜய். அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டம்மியான ஒருவரை பதவியில் உட்கார வைக்க நாசர் முடிவு செய்கிறார். ஒருகட்டத்தில் இது அப்பா, மகன் அரசியல் சண்டையாக மாறுகிறது.



    கடைசியில், அப்பா, மகனுக்கு இடையே நடந்த அரசியல் போரில் யார் வெற்றி பெற்றார்? தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா? முதலமைச்சராக நீடித்தாரா? தனது பழைய வாழ்க்கைக்கே திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். முதலமைச்சர் பதவி பற்றி எந்த அனுபவமுமின்றி வேண்டா வெறுப்பாக அதில் உட்காரும் அவர், தனக்கு எதிராக வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் காட்சிகளிலும், தமிழ் வசனங்களை பேசும் போதும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லும்படியாக பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான சஞ்சனா நடராஜன் அரசியல் களத்தில் தீயை பற்றவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    படத்திற்கு முக்கிய பலம் சத்யராஜ் மற்றும் நாசரின் நடிப்பு. சத்யராஜ் அவரது உண்மையான தோற்றத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் நாசர் முக்கிய பங்காற்றுகிறார். அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.

    பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை கையில் எடுப்பதில்லை. அப்படி கையில் எடுத்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறமுடியாது. அந்த வகையில் தைரியமாக அரசியல் கதையை இயக்கியுள்ள ஆனந்த் சங்கருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதி கொஞ்சம் நீளமாகவும் இருக்கிறது. திரைக்கதையில் இரண்டாவது பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

    சாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகம் தான். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `நோட்டா' ஒருமுறை வாக்களிக்கலாம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் நோட்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ், தனது லொள்ளு பேச்சால் அரங்கில் இருப்பவர்களை சிரிப்பலையில் மூழ்கடித்தார். #NOTA #Sathyaraj
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் நாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசும் போது,

    “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் டப்பிங் பேசுவது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, அழகான தமிழ் உச்சரிப்புடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டு பிரமித்து போனேன். 



    நான் இந்த படத்தில் ஜாலியாக நடித்திருக்கிறேன் என்று நாசர் சொன்னார். என்னுடைய 41 வருட சினிமா வாழ்க்கையில், சின்ன மேக்கப் கூட இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது தான். விக் இல்லாமல் கூட நடித்திருக்கிறேன். ஆனால், ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர். #NOTA #Sathyaraj #VijayDevarakonda

    சத்யராஜ் பேசிய வீடியோவை பார்க்க:

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்திற்காக நானும் மரண வெயிட்டிங் என்று கூறினார். #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

    சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம். இந்தப்படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என என்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்” என்றார்.



    நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித் துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

    இந்தப்படம் வரும் அக்-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #NOTA #VijayDevarakonda

    விஜய் தேவரகொண்டா பேசிய வீடியோவை பார்க்க:

    அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 4-ல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada
    அர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. 

    ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன்விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்காக தனது பிரசாரத்தை இன்று முதல் துவங்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 4-ல் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருகிறது. 

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada

    ×