search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noise"

    • திருவையாறு பகுதி சாலைகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக போக்குவரத்து சரிசெய்ய வேண்டியது அவசியம்.

    திருவையாறு:

    திருவையாறு நகரத்தில் தேசிய- மாநில நெடுஞ்சாலையும் இணைந்து அமைந்துள்ளது.

    இதனால், உள் மாவட்டத்திலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும்,

    உள் வட்டார மணல் குவாரி மற்றும் செங்கல் காலவாய்களிலிருந்தும் மணல் மற்றும் செங்கல் ஏற்றிய கனரக லாரிகளும் அதிகமாக ஓடிக் கொண்டிரு.கின்றன. அனைத்து வகையான வாகனங்களும் காலையிலிருந்து இரவு வரையில் இடைவெளியில்லாமல் பயணிப்பதால் திருவையாறு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே உள்ளது.

    இதனால், பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாயிலிருந்தும் கல்லணை பூம்புகார் மாநில நெடுஞ்சாலையிலிருந்தும் ஒரே நேரத்தில் திருவையாறு நகருக்குள் வாகனங்கள் பயணிக்கும் போது திருவையாறு சாலைகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஸ்தம்பிக்கும் நிலையே தொடர்ந்து காணப்படுகிறது.

    இன்னும் சில நாட்களில் தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து வாகனங்களை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்த வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

    சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை அனுசரித்தும், ஆம்புலன்சுகள் முதலிய அவசர கால ஊர்திகள் போக்குவரத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டும் இச்சாலையருகே அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பாடவகுப்புகளுக்கு இடையூறாக அமையும் வாகன இரைச்சல்களை கட்டுப்படுத்தவும், மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாகவும் போக்குவரத்து சரிசெய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.

    எனவே, திருவையாறு நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள சாலையோர தரைக் கடைகளையும் தள்ளுவண்டிக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தவும், நெருக்கடியான கடைத்தெருச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடைசெய்தும் திருவையாறில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

    • ப்ளூடூத் காலிங் மற்றும் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் AMOLED டிஸ்ப்ளே, 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

    நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது நாய்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எவால்வ் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் யுனிபாடி மற்றும் இரண்டு பட்டன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. நாய்ஸ்பிட் எவால்வ் 3 மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

    நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக், கேமரா கண்ட்ரோல், சமூக வலைதள நோட்டிபிகேஷ்கள், வேக் ஜெஸ்ட்யுர், ஸ்மார்ட் DND போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரை பேக்கப் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் விண்டேஜ் பிரவுன், கார்பன் பிளாக், ஸ்பேஸ் புளூ மற்றும் சில்வர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது.

    நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ப்ளூடூத் மூலம் இயங்கும் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் ஆகும். நாய்ஸ்பிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    புதிய நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்கள் ரியல்மி, ஒன்பிளஸ், போட் மற்றும் இதர பிராண்டு இயர்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஏதுவாக காந்தம் வழங்கப்பட்டு உள்ளது.


    இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் சமீபத்தில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்துடன் தானாக கனெக்ட் ஆகும் வசதி கொண்டது, நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்களில் 10 மில்லிமீட்டர் டிரைவர் உள்ளது. இவை என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. அழைப்புகளின் போது ஏற்படும் வெளிப்புற சத்தத்தை இந்த அம்சம் பெருமளவு குறைத்து விடும்.

    முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் 100+ அதிக மணி நேர பிளேபேக் வழங்கும். இந்த இயர்போன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன் தண்டர் பிளாக், பிலேசிங் பர்பில் மற்றும் ரேஜிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் 5 கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

    நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் HRX உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய நாய்ஸ் X பிட் 2 மாடலில் 1.69 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஏராளமான ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் டிராக்கர்கள் உள்ளன.

    இத்துடன் புதிய X பிட் 2 மாடலில் 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், அலாரம், பைண்ட் மை போன், வானிலை விவரங்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் 30 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது. இதில் 260 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும்.


    இதில் அக்செல்லோமீட்டர், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார் மற்றும் SpO2 டிராக்கர் உள்ளது. இத்துடன் உடலில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டன என்ற விவரங்களை வழங்குவதோடு, ஸ்லீப் மாணிட்டர், ஸ்டெப் டிராக்கர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐஓஎஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான ஓ.எஸ். மற்றும் ஆணட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான ஓ.எஸ். கொண்ட சாதனங்களுடன இணைந்து இயங்கும்.

    புதிய நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே மற்றும் ஸ்பேஸ் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    • இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே, ஆலிவ் கிரீன், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.
    • இது கலர்ஃபிட் பல்ஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும்.

    நாய்ஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், கடந்தாண்டு வெளியிடப்பட்ட கலர்ஃபிட் பல்ஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும். இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விற்பனை தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளது.

    அதன்படி தற்போது ரூ.1,999-க்கு இந்த ஸ்மாட்வாட்ச் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமேசான் மற்றும் நாய்ஸின் இணையதளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை தொடங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே, ஆலிவ் கிரீன், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.


    அம்சங்களை பொருத்தவரை இதில் மிகப்பெரிய டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, 1.8 இன்ச் எல்.சி.டி ஸ்கிரீன், 240 எம்.ஏ.ஹெச் பேட்டரி உள்ளிட்டவை உள்ளன. இதுதவிர இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, மாதவிடாய் சுழற்சி கண்காணிக்கும் வசதி மற்றும் 50க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.

    • ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வருகிறது.
    • பவர் லென்ஸ்களையும் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்கிளாஸ் அனுமதிக்கிறது.

    இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் நாய்ஸ், தற்போது தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்கிளாஸை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்கிளாஸ் தனித்துவமானதாகவும், ஃபேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிய அனுபவத்தை வழங்கும் நோக்கத்தோடும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    நாய்ஸ் i1 ஸ்மார்ட்கிளாஸ் UVA/B 99% பாதுகாப்பு மற்றும் நீல ஒளி வடிகட்டுதலுடன் கூடிய டிரான்ஸ்பரண்ட் லென்ஸ்களை வழங்கும் சாதாரண கண்ணாடி போல் தெரிகிறது. மேலும் பவர் லென்ஸ்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. i1 ஆனது புரட்சிகரமான வழிகாட்டுதல் கொண்ட ஆடியோ வடிவமைப்புடன் வருகிறது.


    இது 16.2mm டிரைவர்கள், MEMS மைக்ரோஃபோன்கள் மற்றும் மல்டி-ஃபங்க்ஸ்னல் டச் கண்ட்ரோல்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உங்கள் செல்போன் அழைப்புகளை நிர்வகிக்கவும், பாடல்களைக் கேட்கவும், ஒலியளவைக் கட்டுப்படுத்தவும், வாய்ஸ் அசிஸ்டண்ட்களை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ முறையில் அணுகவும் உதவுகிறது.

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வருகிறது. கருப்பு நிறத்தில் வரும் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரு வடிவிலான மாடல்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரீன், பிளாக், கிரே, பிங்க், புளூ உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

    ஆடியோ சாதனங்கள் மற்றும் வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் நாய்ஸ், தற்போது தனது புது மாடல் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. கலர்ஃபிட் பல்ஸ் Buzz எனப்படும் அந்த புது ஸ்மார்ட்வாட்ச் ஆனது புளுடூத் காலிங் உள்பட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.

    1.69 இன்ச் TFT LCD தொடு திரை உடன் கூடிய இந்த ஸ்மார்ட் வாட்ச் ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங், ஃபிட்னஸ் உள்ளிட்டவற்றை டிராக் செய்ய 60க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. இதயத் துடிப்பு சீராக உள்ளதா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதியும் இதில் உள்ளது.


    இதுதவிர ஸ்லீப் மானிட்டரிங், வானிலை நிலவரம் உள்பட எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கிரீன், பிளாக், கிரே, பிங்க், புளூ உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.3,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிமுக ஆஃபரில் ரூ.2,499க்கு கிடைக்கிறது.

    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் ஒற்றை பட்டன், சிலிகான் ஸ்டிராப் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 30 கிராம் எடை கொண்டிருக்கிறது. மெட்டல் பினிஷ் கொண்டிருக்கும் நாய்ஸ் எக்ஸ் பிட் 1 மாடலில் எஸ்.பி.ஓ.2 மாணிட்டர் உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். 

     நாய்ஸ் எக்ஸ் பிட் 1

    புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நாய்ஸ் எக்ஸ் பிட்1 சில்வர் மற்றும் பிளாக் மெட்டல் பிரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வைட் மற்றும் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.
    மக்கள் வசிக் கும் குடியிருப்பு பகுதிகளில் 50 முதல் 60 டெசிபல் சத்த அளவுதான் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நம் நகரங்களில் சராசரியாக 90 முதல் 95 டெசிபலும், திருமணம், அரசியல் கூட்டம், கோவில் திருவிழா நேரங்களில் 110 முதல் 120 டெசிபலும், தீபாவளி நேரத்தில் 130 முதல் 140 டெசிபல் வரையிலும் அதிகரிக்கும் இரைச்சல், நமக்கு ஏற்படுத்தும் தீய விளைவுகளை இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது. இதனால் நம் மூளைக்கு கொண்டு செல்லப்படும் ஒலியின் வேகமும், தொனியும் குறைவதால், அதற்கு மறுமொழி சொல்லும் நம் குரலின் தொனியின் அளவும் அதிகமாகிறது. இதனால்தான், அதிக சத்தம் உள்ள இடங்களில் பேசும் மனிதர்கள், தேவையைவிட அதிக சத்தமாக பேசுவது அனிச்சையாக நடைபெறுகிறது.

    நமது இருதயத்தில் இருந்து உடலெங்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் என்ற மெல்லிய நரம்புகள் அதிக சத்தம் மூலம் தளர்வடைந்து விரிகின்றன. இந்த தளர்ச்சி இருதயத்தின் வேலைகளை கடினமாக்கி, நாளடைவில் அதன் செயல்திறனை பாதிக்கிறது. இருதயம் பழுதடைவதால், அதைச் சார்ந்துள்ள நுரையீரல், மூளை, சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்துக்கும் மறைமுகமாக கேடு ஏற்படுவதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன.



    லொபார்டி என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.

    நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம் என்று முன்பு கருதப்பட்ட மும்பை இப்போது மாறியிருக்கிறது. கடந்த 3 வருடங்களாக அங்கு கடைபிடிக்கப்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகள் தினசரி ஒலி அளவை மட்டுமின்றி, இரைச்சல் மிகுந்த விநாயகர் சதுர்த்தி விழா, தாண்டியா என்ற கோலாட்ட விழா ஆகியவற்றின் சத்த அளவுகளையும் குறைத்திருக்கிறது. 5 வருட சிறைவாசம் அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என்ற அளவுக்கு ஒலி மாசுக்கு எதிரான சட்டங்கள் அங்கு உள்ளன. இதே நடைமுறைகள் தமிழகத்துக்கு என்றைக்கு வருமோ?

    ×