search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NarendraModi"

    இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். #Emergency #NarendraModi #Congress
    புதுடெல்லி :

    நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அவரசநிலை குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளதாவது :-

    காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதற்காக கருப்பு தினத்தினை (அவசரநிலை) நாம் கடைப்பிடிக்கவில்லை. என்ன நடந்தது என்பதனை பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  

    ஒரு பிரதமர்(இந்திரா காந்தி) பாராளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் இந்தியா முழுதும் அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

    அவசரநிலையின் போது சுயநலத்திற்காக எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நாட்டையே சிறைச்சாலையாக காங்கிரஸ் கட்சி மாற்றியது. நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்காத காங்கிரஸ் கட்சியினரால் தற்போது எப்படி அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து பேச முடிகிறது ?.

    இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது.

    பாராளுமன்றத்தில் 400 மக்களவை இடங்களை பெற்ற நிலையில் இருந்து 44 என்ற நிலைக்கு வந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். ஆனால், கர்நாடகா தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்து அவர்கள் கேள்வி கேட்பது இல்லை.

    மேலும், ஊழல் வழக்குகளை ஜாமீனில் வெளியே வந்து எதிர்கொள்வது பற்றி அவர்கள்(காங்கிரஸ் தலைமை) கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்ற நீதிபதி மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் அவர்கள் முடிவு செய்தனர்.

    வெறும் புத்தகம் மட்டுமே அல்லாமல் ஒவ்வொரு சாமானியனின் ஆசைகளையும் கனவையும் நனவாக்குவது அரசியலமைப்பு சட்டம் ஆகும். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Emergency #NarendraModi #Congress
    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க நாளை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ளார். #VisvaBharati University #NarendraModi #MamataBanarjee
    புதுடெல்லி :

    வங்காளதேசம் விடுதலை போரின் போது இந்தியா மற்றும் வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேசம் பவன் என்ற பெயரில் புதிய ஆய்வகம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் சிந்திரி பகுதிக்கு பயணம் செய்யும் மோடி அங்கு அங்கு சிந்திரி உரம் தொழிற்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை, தியோகர் விமான நிலைய விரிவாக்க திட்டம், பட்ராடு அனல் மின் நிலையம், ராஞ்சியில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் அம்மாநில மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள கலந்துரையாடல் நிகழ்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #VisvaBharati University  #Shiekh Hasina #Bangladesh Bhawan #NarendraModi #MamataBanarjee
    ×