என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவரசநிலை ஒரு கரும்புள்ளி - மோடி தாக்கு
Byமாலை மலர்26 Jun 2018 9:37 AM GMT (Updated: 26 Jun 2018 9:37 AM GMT)
இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். #Emergency #NarendraModi #Congress
புதுடெல்லி :
நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அவரசநிலை குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளதாவது :-
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதற்காக கருப்பு தினத்தினை (அவசரநிலை) நாம் கடைப்பிடிக்கவில்லை. என்ன நடந்தது என்பதனை பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
ஒரு பிரதமர்(இந்திரா காந்தி) பாராளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் இந்தியா முழுதும் அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அவசரநிலையின் போது சுயநலத்திற்காக எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நாட்டையே சிறைச்சாலையாக காங்கிரஸ் கட்சி மாற்றியது. நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்காத காங்கிரஸ் கட்சியினரால் தற்போது எப்படி அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து பேச முடிகிறது ?.
இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது.
பாராளுமன்றத்தில் 400 மக்களவை இடங்களை பெற்ற நிலையில் இருந்து 44 என்ற நிலைக்கு வந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். ஆனால், கர்நாடகா தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்து அவர்கள் கேள்வி கேட்பது இல்லை.
மேலும், ஊழல் வழக்குகளை ஜாமீனில் வெளியே வந்து எதிர்கொள்வது பற்றி அவர்கள்(காங்கிரஸ் தலைமை) கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்ற நீதிபதி மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் அவர்கள் முடிவு செய்தனர்.
வெறும் புத்தகம் மட்டுமே அல்லாமல் ஒவ்வொரு சாமானியனின் ஆசைகளையும் கனவையும் நனவாக்குவது அரசியலமைப்பு சட்டம் ஆகும். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Emergency #NarendraModi #Congress
நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அவரசநிலை குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளதாவது :-
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதற்காக கருப்பு தினத்தினை (அவசரநிலை) நாம் கடைப்பிடிக்கவில்லை. என்ன நடந்தது என்பதனை பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
ஒரு பிரதமர்(இந்திரா காந்தி) பாராளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் இந்தியா முழுதும் அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அவசரநிலையின் போது சுயநலத்திற்காக எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நாட்டையே சிறைச்சாலையாக காங்கிரஸ் கட்சி மாற்றியது. நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்காத காங்கிரஸ் கட்சியினரால் தற்போது எப்படி அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து பேச முடிகிறது ?.
இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது.
பாராளுமன்றத்தில் 400 மக்களவை இடங்களை பெற்ற நிலையில் இருந்து 44 என்ற நிலைக்கு வந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். ஆனால், கர்நாடகா தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்து அவர்கள் கேள்வி கேட்பது இல்லை.
மேலும், ஊழல் வழக்குகளை ஜாமீனில் வெளியே வந்து எதிர்கொள்வது பற்றி அவர்கள்(காங்கிரஸ் தலைமை) கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்ற நீதிபதி மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் அவர்கள் முடிவு செய்தனர்.
வெறும் புத்தகம் மட்டுமே அல்லாமல் ஒவ்வொரு சாமானியனின் ஆசைகளையும் கனவையும் நனவாக்குவது அரசியலமைப்பு சட்டம் ஆகும். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Emergency #NarendraModi #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X