என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Monkeypox"
- ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.
- நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்.
குரங்கு அம்மை நோய் தற்போது 55 நாடுகளில் பரவி உள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நபர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தார், நண்பர்கள் என நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேரிடம் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை நோயால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
குரங்கு அமைப்பு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் பாதிப்பு திறனை மதிப்பீடு செய்வதற்கும், நோய் பாதிப்பு தடுப்பு திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், இங்கிருந்து ஒரு கார் மூலம் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு சென்றுள்ளார்.
- வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
உலகை மிரட்டிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.
இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ் நோயான குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தற்போது 55 நாடுகளில் இந்த நோய் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்க்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குரங்கு அம்மை நோய் பற்றிய விபரங்கள் வெளியானதும், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
அதன்படி அனைத்து மாநிலங்களும் குரங்கு அம்மை நோய் பாதிப்பை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது. இதில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரின் ரத்தம், சிறுநீர் ஆகியவை பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்.
பாதிப்புக்கு ஆளான நபர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், இங்கிருந்து ஒரு கார் மூலம் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.
தற்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகி இருப்பதால் அந்த டிரைவர்கள் இருவருக்கும் நோய் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல அந்த நபரின் குடும்பத்தாரும் அவரது நண்பர்கள் என நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதில் யாருக்காவது நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.
இதுபோல நோய் பாதித்தவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம்.
குரங்கு அம்மை நோய் மற்றவர்களுக்கு பரவும் சாத்திய கூறுகள் மிகமிக குறைவு. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக அளவில் 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
ஜெனீவா:
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என தெரிவித்தார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது.
சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.
தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உள்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்பட 20க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
பெய்ரூட்:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்