search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohan Lal"

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 37-வது படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், படக்குழுவில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். #Suriya37
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பலரும் ஒப்பந்தமாகியுள்ளனர். 

    கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேதி பிரச்சனையால் படக்குழுவில் இருந்து விலகுவதாக அல்லு சிரிஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அல்லு சிரிஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

    `தற்போது தெலுங்கில் உருவாகும் ஏபிசிடி படத்தில் நடித்து வருகிறேன். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால் சூர்யா படத்தில் என்னால் இடம்பெற முடியவில்லை. படப்பிடிப்பை வேறு தேதியிலும் மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நானாகவே இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 

    இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு எனது சூழ்நிலை புரியும். அவர் தனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்த குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

    இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #Suriya37 #AlluSirish

    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். #Suriya37 #KVAnand
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் லண்டனில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. படம் அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் திரைக்கு வர இருக்கிறது. #Suriya37 #KVAnand

    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்த்தது குறித்து தலைவர் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal #NadigarSangam
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. சங்க தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் இந்த கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ரம்யா நம்பீசன், பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். அரசியல் கட்சியினரும் திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் சங்கத்தில் மீண்டும் இணைய விரும்பவில்லை என்று திலீப் கூறியபிறகும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

    நடிகர் சங்க புதிய தலைவரான மோகன்லால் தற்போது படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். திலீப் விவகாரம் தொடர்பாக இதுவரை அவர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவந்தார். தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக மோகன்லால் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கமான ‘அம்மா’ நடிகர், நடிகைகள் நலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த சங்கத்தில் 485 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 137 பேர் நடிகைகளாகும். ஏராளமான நடிகர்கள் சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளனர். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது.

    எங்கள் சங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக செயல்பட்டும் அன்று முதல் இன்று வரை அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடிகர் சங்கம் ஒருபோதும் செயல்படவில்லை.

    தற்போது சிலரின் தூண்டுதல் காரணமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. மேலும் நடிகர் சங்கத்தை ‘மாபியா’ போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்? என்று தெரியவில்லை. நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்ப்பது என்பது சங்கத்தை சேர்ந்த பெரும்பான்மை யானவர்களின் விருப்பமாக இருந்ததால் அந்த தீர்மானம் கூட்டத்தில் கொண்டுவரப் பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக ராஜினாமா செய்துள்ள நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

    இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது. இதில் வெளியில் உள்ள மற்றவர்கள் தலையிட என்ன தேவை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #Suriya37 #KVAnand
    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் லண்டனில் நடந்தது. சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருந்த கேவ்மிக் யு அரி வேறு படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அபிநந்தன் ராமானுஜம் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand 

    செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் சூர்யா பிசியாக நடித்து வரும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Suriya37 #KVAnand
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் இன்று துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    சூர்யா விரைவில் லண்டனில் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். 



    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand

    என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. #Suriya37 #Sayyeshaa
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

    இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். 



    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 #Sayyeshaa

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Suriya37
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

    இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யாவின் 37-வது படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Suriya37 #MohanLal
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

    இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், என்.ஜி.கே. படத்தை முடிந்த பிறகு சூர்யா கே.வி.ஆனந்த் படத்தில் இணையவிருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 #MohanLal

    ×