என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madurai airport
நீங்கள் தேடியது "Madurai airport"
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விஷமத்தனம் செய்வதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #MKStalin
அவனியாபுரம்:
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த அன்றைய சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் போகவில்லை என்பது தவறுதான். ஆனால் இப்போது செல்வதை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு.
மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் இதனை ஊதிப் பெரிதாக்குவது தவறு. அங்கு பொதுமக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல. யார் சுடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது? என்பதை மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் சுட்டிக்காட்டினாலே போதும்.
மீண்டும், மீண்டும் தமிழகத்தை போராட்டம் என்ற பெயரில் சுடுகாடாக சீமான் மற்றும் மு.க.ஸ்டாலின் மாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முந்தைய ஐக்கிய முன்னணி அரசுக்கு இந்த ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பு தெரியாதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார், மு.க.ஸ்டாலின். அவர் ஆட்சிக் கட்டிலில் அமர இது போன்ற விஷம செயல்களில் ஈடுபடுகிறார்.
பயங்கரவாத நிகழ்வு எங்கே நடந்தாலும் அதை கட்டுப்படுத்த வேண்டும். 40 ஆயிரம் பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்றால் அதுவரை உளவுத்துறை என்ன செய்தது?
மக்கள் போராட்டங்களை மக்களே நடத்த வேண்டுமே தவிர இடையில் வேறு யாரும் புகுந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #MKStalin
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த அன்றைய சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் போகவில்லை என்பது தவறுதான். ஆனால் இப்போது செல்வதை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு.
மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் இதனை ஊதிப் பெரிதாக்குவது தவறு. அங்கு பொதுமக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல. யார் சுடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது? என்பதை மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் சுட்டிக்காட்டினாலே போதும்.
மீண்டும், மீண்டும் தமிழகத்தை போராட்டம் என்ற பெயரில் சுடுகாடாக சீமான் மற்றும் மு.க.ஸ்டாலின் மாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு இப்போது போராடக்கூடிய தி.மு.க. அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?
பயங்கரவாத நிகழ்வு எங்கே நடந்தாலும் அதை கட்டுப்படுத்த வேண்டும். 40 ஆயிரம் பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்றால் அதுவரை உளவுத்துறை என்ன செய்தது?
மக்கள் போராட்டங்களை மக்களே நடத்த வேண்டுமே தவிர இடையில் வேறு யாரும் புகுந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #MKStalin
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Sarathkumar
அவனியாபுரம்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களை பிடித்துள்ள கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.
கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
கர்நாடக தேர்தலில் முன் கூட்டியே சரியான கூட்டணி அமைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
வருங்காலத்தில் தண்ணீருக்காக போர் ஏற்படும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் குறையிருந்தால் அதனை சமத்துவ மக்கள் கட்சி தைரியமாக சுட்டிக்காட்டும்.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Sarathkumar
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களை பிடித்துள்ள கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.
கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
கர்நாடக தேர்தலில் முன் கூட்டியே சரியான கூட்டணி அமைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
தற்போது தமிழகம் முழுவதும் மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. இதனால் மண்வளம், நீர்வளம் பாதிக்கப்பட்டு உள்ளன. தண்ணீர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Sarathkumar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X