search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lands"

    58-ம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரை அடைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
    ஆண்டிப்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பகுதியில் 58 கிராமங்கள் பாசன வசதி பெறுவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் பாசன திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு 33.81 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்துக்கு கடந்த 19.7.1999-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 19 ஆண்டுகள் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி பணி நிறைவு பெற்றது. தற்போது வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் 58 கிராம கால்வாய் திட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து சோதனை ஓட்டம் முறையில் வினாடிக்கு 316 கன அடி வீதம் தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். வைகை அணையில் இருந்து தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயின் நீளம் 27.64 கிலோ மீட்டர் ஆகும்.

    கிளை கால்வாய்களின் நீளம் 22.17 கிலோ மீட்டர் ஆகும். தொட்டி பாலத்தின் நீளம் 26.50 மீட்டர் ஆகும். பாசனத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 33 கண்மாய்கள், 3 ஊரணிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு 2285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையான தெப்பத்துப்பட்டியை வந்தது. நள்ளிரவில் தொட்டி பாலத்தை கடந்து உத்தப்பாநாயக்கனூர் இரட்டை மதகிற்கு சென்றது. தண்ணீர் சீராக சென்றதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு சற்று அதிகரிக்கப்பட்டது.

    அப்போது ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள டி.புதூர் என்ற இடத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிய வரவே ஒன்று கூடினர். விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கரையை பலப்படுத்தும் வகையில் மணல் மூடைகளைக் கொண்டு அடுக்கினர். மேலும் இது குறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எடுத்து கூறுகின்றனர். ஆனால் அது குறித்து அவர்களுக்கு எந்தவித உணர்வும் இருப்பதாக தெரிய வில்லை. 19 ஆண்டுகளாக பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட 58 கிராம கால்வாய் திட்டப்பணி நிறைவடைந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பாக உள்ளதா? என அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை.

    மேலும் ஏதேனும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டால் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தெரியவில்லை. இதன் காரணமாகவே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதியையும், நாங்களே தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளோம். எனவே மீண்டும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர். #tamilnews
    வேலூர் மாவட்டத்தில் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குனர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:- சென்னை, மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக, காட்பாடி தாலுகா முத்தரசி குப்பம் தொடங்கி சேர்க்காடு, திருவலம், ராணிப்பேட்டை, செட்டித்தாங்கல் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 3 மடங்கிற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

    ஒரு தென்னை மரத்தில் ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போல், சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கும் 3 மடங்கும், தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சையில் விவசாயிகளுக்கு நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் நெல் விதை மற்றும் ஏர் கலப்பையை இலவசமாக வழங்க வேண்டும். காட்டு பன்றிகள் தொல்லையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களின் நலன் கருதி மலிவு விலையில் உணவு கிடைக்க அம்மா உணவகம் அமைக்க வேண்டும். 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை விவசாய வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.

    100 நாள் ஊரக வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வரப்பை சரி செய்ய, பாத்தி கட்ட உள்ளிட்ட விவசாய பணிகளை செய்ய 100 நாள் ஊரக திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக, முறைபடி விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
    காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். #AirForceHelicopter #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் நேற்று காலை வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 விமானிகள் மற்றும் 2 பயணிகள் இருந்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் நாதாடாப் என்கிற இடத்தில் தரையிறங்க முயன்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #AirForceHelicopter #JammuKashmir
    பல நாடுகள் உரிமை கோரிவரும் தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. # SChinaSea #Chinaairforce
    பீஜிங்:

    சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ஆனால், ‘‘தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டில் இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குட்பட்ட ஒரு தீவில் சான்ஷா என்ற மாதிரி நகரத்தை சீனா உருவாக்கியது.

    இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக தி ஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.

    தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது.

    இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை நேற்று இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.



    தென் சீனக்கடல் எல்லைக்குட்பட்ட தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் பகுதிகளில் H-6K ரகத்தை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்களின் மூலம் நடைபெற்ற இந்த போர் பயிற்சியின் மூலம் கடல் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SChinaSea #Chinaairforce 
    ×