search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passengers Safe"

    குவைத்திலிருந்து இன்று ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென தீப்பிடித்தது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினர். #JazeeraAirways #HyderabadAirport #AircraftCatchesFire
    ஐதராபாத்:

    குவைத்திலிருந்து நேற்று இரவு ஐதராபாத் நோக்கி ஜசீரா விமானம் (ஜே9 608) புறப்பட்டு வந்தது. அதில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் இன்று அதிகாலை 1.33 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.



    விமான நிலையத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. தீப்பிடித்ததை கவனித்த விமான ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். என்ஜினும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

    பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். குறித்த நேரத்திற்குள் தீயை கட்டுப்படுத்தியதால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #JazeeraAirways #HyderabadAirport #AircraftCatchesFire





    காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். #AirForceHelicopter #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் நேற்று காலை வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 விமானிகள் மற்றும் 2 பயணிகள் இருந்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் நாதாடாப் என்கிற இடத்தில் தரையிறங்க முயன்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #AirForceHelicopter #JammuKashmir
    ×