search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kuladeivam"

    • ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும்.

    ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. தினம்தோறும் இஷ்ட தெய்வத்தை வேண்டி வழிபட்டாலும், குலதெய்வத்தின் நாமத்தை ஒரு முறையாவது உச்சரித்து, தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.

    குலதெய்வத்தை வியாழக்கிழமை அன்று, இந்த முறைப்படி விரதமிருந்து வழிபடும் போது, நீங்கள் என்ன நினைத்து விரதத்தை தொடங்குகிறீர்களோ, அந்த வேண்டுதலானது 14வது வாரம் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    வியாழக்கிழமை காலையிலேயே வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிடுங்கள். அதன் பின்பு குளித்து முடித்துவிட்டு, இறைவனுக்கு பூக்களை அணிவித்து, ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து, உங்களின் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, உங்களுடைய வேண்டுதலை சொல்லி உங்களது விரதத்தை தொடங்க வேண்டும். சில பேருக்கெல்லாம் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத கஷ்டம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று கூட, வேண்டுதலை வைக்கலாம். 14 வாரமும் அந்த வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும். வேண்டுதலை மாற்றக்கூடாது.

    காலையில் உங்களது விரதத்தை தொடங்கலாம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், அந்த நாள் முழுவதும் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும், குறிப்பாக நாட்டு பசும்பாலால் செய்யப்பட்ட தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது கோடி புண்ணியத்தை உங்கள் குலத்திற்கே தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் இன்னும் உத்தமம். பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.

    வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களாக இருந்தால், இந்த வியாழக்கிழமை நாள் முழுவதுமே குலதெய்வத்தை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அதாவது நீங்கள் வேலை செய்தது போக மீதம் இருக்கும் நேரத்தில். மாலை நேரம் வழக்கம் போல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளிக்கிண்ணமாக இருந்தாலும் சரி, அல்லது பித்தளை பாத்திரமாக இருந்தாலும் சரி. கண்ணாடிக் கிண்ணமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.

    அந்த சிறிய கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சொல்லி, மனமுருகி, மாலையும் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மாலை தீபம் ஏற்றிவைத்து உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். அதனால் இரவு நிச்சயம் சாப்பிடக் கூடாது. ஒரு வேலை தயிர் சாதம் சாப்பிடுவதோடு மட்டும் விரதம் இருக்கலாம்.

    14வது வாரம் உங்களது விரதம் முடியும்போது, அந்த ஒரு ரூபாய் நாணயங்களை குலதெய்வக் கோவில்களில் கொண்டுபோய் செலுத்திவிடலாம். குலதெய்வக் கோயில் தூரமாக உள்ளவர்கள், ஒரு மஞ்சள் துணியை எடுத்து, அந்த நாணயங்களை, முடிந்து வைத்து விடுங்கள். எப்போது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ, அப்போது அந்த நாணயங்களை குலதெய்வ கோயிலில் சேர்த்து விடுங்கள்.

    வாரம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று, மேல் சொல்லப்பட்ட முறைப்படி சுலபமான முறையில் குலதெய்வ வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் போதும். 14வது வாரம் வியாழக்கிழமை அன்று, உங்களது இந்த விரதம் முடியும் போது, உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிரார்த்தனை வைத்து குல தெய்வத்தை வேண்டி தான் பாருங்களேன்! ரொம்ப நாளா உங்க வீட்ல இருக்கிற பிரச்சினை கூட விரைவில் ஒரு முடிவுக்கு வரும். இந்த விரதத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, உங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்பு தான், உங்களால் உணர முடியும். ஆனால், நீங்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதற்கான முயற்சியை, நீங்கள்தான், இடைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்துடாதீங்க! உங்களை கைதூக்கி விடும் ஒரு ஊன்றுகோல் தான் உங்கள் குலதெய்வம்.

    • குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
    • குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும்.

    ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

    ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும்.

    பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது இலந்தைகுளம் என்ற கிராமம்.
    • இந்த குலதெய்வத்தை வழிபடும் மக்கள் வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள்.

    முன்னோர் ஏற்படுத்திய பல பழக்கவழக்கங்களை பல நூறு ஆண்டுகளாக தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்துள்ளோம். ஆனால், அவற்றில் பலவற்றை காலப்போக்கில் பலரும் மறந்துவிடுகிறோம். இருப்பினும் ஆங்காங்கே பழமையான பழக்க வழக்கங்களை மறக்காமல் பின்பற்றுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் சிறுதெய்வ வாக்கினை பின்பற்றும் வகையில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள், பல நூறு ஆண்டுகளாக ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதுபற்றிய சுவாரசியமான தகவலை இங்கே பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது, இலந்தைகுளம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், பல தலைமுறைகளாக வெள்ளை உடைகளை மட்டுமே உடுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள்தான் வெள்ளை ஆடையை அணிவார்கள் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இப்போது வெகுவாக மாறியிருக்கிறது.

    ஆனால் இலந்தைகுளம் கிராமத்தில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் மற்றும் குழந்தைகளும் கூட தங்களின் வாழ்நாள் முழுவதும் வெள்ளை நிற ஆடைகளையே அணிந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் கூறும்போது, "பல தலை முறைகளுக்கு முன்பு பொம்மியம்மாள் என்ற பெண், தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்துள்ளார். அவரை எங்களின் மூதாதையர்களும் அவர்களைத் தொடர்ந்து நாங்களும் தெய்வமாக வணங்கி வருகிறோம்.

    அந்த பொம்மியம்மாள், 'என்னை நினைத்து வெள்ளை உடை உடுத்தி தொடர்ந்து வணங்குபவர்களை, சகல வசதிகளையும், நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்' என்று கூறியுள்ளார். அவரது வாக்கின்படி, பல தலைமுறைகளாக நாங்கள் வெள்ளை உடைகளை உடுத்தி, அவரை வணங்கி வருகிறோம்" என்றார்.

    பொம்மியம்மாளுக்கு, சேடபட்டி சின்னக்கட்டளை பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. அழகர் மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் கள்ளழகரின் தங்கைதான் பொம்மியம்மாள் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவின்போது, இலந்தைகுளம் கிராமத்தில் உள்ளவர்கள், பொம்மியம்மாளை சின்னக்கட்டளையில் உள்ள அவரது பீடத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இலந்தைகுளத்தில் இருப்பவர்கள் பொம்மியம்மாளை நினைத்து வெள்ளை நிற ஆடை அணிவதைப் போல, பல்வேறு கிராமங்களில் இருந்தபடி அந்த குலதெய்வத்தை வழிபடும் மக்களும் கூட அங்கு வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள். பொம்மியம்மாளை குலதெய்வமாக வழிபடுபவர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு அரைஞாண் கயிறைக் கூட, வெள்ளை துணியில்தான் கட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் துணிகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கின்றன.

    பள்ளிக்கூடம் செல்வதற்கு சீருடை அவசியம் என்பதால் அந்த நேரத்தில் மட்டும், பள்ளி செல்லும் பிள்ளைகள் சீருடை அணிகிறார்கள். பள்ளி முடிந்து வந்ததும், அவர்களும் வெள்ளை நிற ஆடைக்கு மாறிவிடுகிறார்கள். பொம்மியம்மாளை வணங்கும் பெண்கள், பூ, பொட்டு, நகை அணிகிறார்கள். ஆனால் வீட்டில் இருந்தாலும், வேலைக்குச் சென்றாலும், விசேஷ நிகழ்வுகளுக்குச் சென்றாலும் வெள்ளை நிற ஆடைதான் அவர்கள் மகிழ்வுடன் அணியும் ஆடையாக இருக்கிறது.

    குலதெய்வம் என்பது ஆண்கள் வழியில் வரும் வழிபாடு என்பதால், இங்கிருந்து திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும் பெண்கள், புகுந்த வீட்டின் பழக்க வழக்கப்படி இருக்கலாம். அவர்களுக்கு இந்த வெள்ளை நிற ஆடை கட்டுப்பாடு கிடையாது. அதே நேரம், வேறு ஒரு இடத்தில் இருந்து திருமணாகி பொம்மியம்மாளை குலதெய்வமாக ஏற்று வரும் பெண்கள், வெள்ளை நிற ஆடையை அணிந்துதான் ஆக வேண்டும் என்பது அவர்களது குல வழக்கமாக இருக்கிறது.

    வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
    ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.

    குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள், வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும்.
    குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
    குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

    “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ‘குலதெய்வம்’ ஆகும். முன்னோர்கள் என்றால், தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள்தான் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்படாமல் வாழ்க்கை பாதையை அவர்கள் அமைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், பரம்பரையானது சங்கிலி போல ஒரே சகோதரத்துவ தொடர்ச்சியாக அமைந்து இருக்கும். இது ஒரு முக்கியமான சமூக உளவியல் ஒழுங்குமுறை சார்ந்த விஷயமாகும்.

    அவர்கள் அனைவருமே கோத்திர வழி மாறாதபடி, குலதெய்வம் என்னும் தெய்வ சக்தியை வழி வழியாக பிரார்த்தனை செய்திருப்பார்கள். தலைமுடி எடுப்பது, காது குத்துவது போன்ற நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருந்தாலும், குலதெய்வக் கோவிலுக்கு சின்ன வயதிலேயே அனைவரையும், தாய்- தந்தையர் அழைத்துச் சென்று வழிபடக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதன்படி குல தெய்வ கோவிலில் நிற்கும்போது, குறிப்பிட்ட ஒருவரது பரம்பரை வரிசையில் அவர் நிற்பதாக ஐதீகம். அந்த வரிசை முறையிலான தொடர்பை வேறு எந்த விதத்திலும் அமைத்துக்கொள்ள இயலாது.”
    தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர்.
    ஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது.

    தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர். ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்றும் சொல்வார்கள்.

    ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள், எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம்.

    பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக விரதம் இருந்து வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
    யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.
    உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை விரதம் இருந்து மனதார வழிபடுவார்கள்.

    சமீப காலமாக விரதம் இருந்து சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

    இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குலதெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.

    குலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குலதெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

    அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ‘‘குலதெய்வ வழிபாடு’’ செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் 9-ந்தேதி (ஞாயிறு) வருகிறது.

    அன்று குலதெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குலதெய்வத்தை அவசியம் வழிபடுங்கள்.

    யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    சாதி, சமய வேறுபாடின்றி குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர திருநாளில் குடும்பத்தோடு சென்று வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு பரம்பரையாக தொடர்கிறது.
    தமிழக மக்களின் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது சாஸ்தா வழிபாடாகும். குடும்பம் மற்றும் குல விருத்திக்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. சாதி, சமய வேறுபாடின்றி குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர திருநாளில் குடும்பத்தோடு சென்று வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு பரம்பரையாக தொடர்கிறது.

    பக்தர்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட பல இடங்களில் சாஸ்தாவும், ஐயனாரும் அவதரித்தனர். கலியுகத்தில் ஐயப்பன் அவதாரம் எடுத்து கேரள மாநிலம் பந்தள மன்னர் அரண்மனையில் வாழ்ந்து, பின்னர் அரக்கனை வதம் பண்ணி சாஸ்தாவாக உருவானதாக வரலாறு.

    சாஸ்தாவின் அம்சமாக கருதப்படும் ஐயப்பன் எங்கிருந்தார். அவர் எந்த பகுதியில் திரிந்தார். இளவயதில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள காரையாரில் அவர் வீர விளையாட்டுகளை கற்றதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அங்கு முதன் முதலில் சாஸ்தா கோயில் எழுந்ததாகவும், அக்கோயிலே சொரிமுத்து ஐயனார் கோயில் என்று, அதுவே ஐயப்பனின் மூல ஆதாரம் எனவும் அழைக்கிறார்கள். இக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. சாதி, சமய வேறுபாடின்றி குலம் மற்றும் குடும்பத்தை காக்க அவதரித்த தெய்வமாக இவர்கருதப்படுகிறார்.

    திருவனந்தபுரம் மகாராஜாவுக்கு எதிராக போர் மூண்டபோது அவர்களுக்கு உதவச்சென்ற இடத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் இறந்தார். அதற்கு பரிகாரமாக என்ன வேண்டும் என மகாராஜா கேட்டபோது “சுள்ளி ஒடிக்க கொஞ்சம் காடு வேண்டும்” என்று ஜமீன்தாருடன் சென்றவர்கள் சொன்னார்கள். உடனே மகாராஜா 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை பரிசாக கொடுத்தார். அதில் சொரிமுத்து ஐயனார் கோயிலும் அடங்கும். தற்போது இக்கோயிலை சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான முருகதாஸ் தீர்த்தபதி ராஜா நிர்வகித்து வருகிறார்.

    காரையாரை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சாஸ்தா என்றும், மதுரை, விருதுநகர், திருச்சி, சேலம், தஞ்சை மாவட்டங்களில் ஐயனார் என்றும் பல கோயில்கள் உருவாயின. இங்குள்ள சாஸ்தா, ஐயனார் ராஜாவாகவும், காவல் தெய்வமாக விளங்கும் சங்கிலிபூதத்தார், கருப்பண்ணன், கருப்பன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சேனாதிபதியாகவும் அழைக்கப்படுகின்றனர். சங்கலிபூதத்தார் ஆழி எனவும் அழைக்கப்படுகிறார். சாஸ்தா கோயில் முன்பு இந்த ஆழி மிக பிரமாண்டமாக உருட்டும் விழியுடனும், முறுக்கிய மீசையுடனும் பிரமாண்டமான தோற்றத்துடன் நம்மை பயமுறுத்தும்.

    சாஸ்தா கோயில் எது என்று முன்னோர்கள் தனது வாரிசுதாரர்களுக்கு சொல்லாமல் விட்டதால், தாங்களுக்கு எந்த சாஸ்தா என்றே தெரியாதவர்கள் உலகின் முதல் சாஸ்தாவாக கருதப்படும் காரையார் சொரிமுத்து ஐயனார் கோயிலை மூலசாஸ்தா என்றும், குலதெய்வம் என்றும் கருதி வழிபடுகின்றனர். இங்கு வந்து சென்றாலே குலதெய்வ வழிபாடு பூர்த்தியாகிவிடும் என்பது ஆன்றோர்களில் வாக்கு.

    இங்கு பங்குனி உத்திரதிருவிழா மட்டுமில்லாமல், ஆடி அமாவாசை, தை அமாவாசை திருநாளும் விமர்சையாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்றும், ஆடி அமாவாசையன்றும் லட்சகணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து முகாமிட்டு வழிபடுவர். இதுமட்டுமல்ல திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள், குழந்தைகளுக்கு முடிஎடுத்து காதணி விழா, தொழில் மற்றும் குடும்ப விருத்திக்காக கிடா விருந்து உள்ளிட்ட நேர்த்திகடன் பூஜையும் சாஸ்தாவிற்கு நடத்துகின்றனர்.

    திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு முதல் பத்திரிக்கையும், அழைப்பும் சாஸ்தாவிற்குதான். ஆடிமாதத்தில் அடிக்கும் சாரலில் நனைந்த படி, வாடையில்வாடியே படியே குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பல கிலோ மீட்டர் நடந்து வந்தே சொரிமுத்து ஐயனாரை வணங்கி நிற்போர் பலர். இப்படி சாஸ்தா வழிபாடு தொடர்ந்தது.

    தற்போது நமது குல தெய்வ சாஸ்தா எது என்று கண்டுபிடித்து, அதை எப்படியாவது வணங்க வேண்டும் என்று மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு வந்துள்ளது. எனவே தான் அனைவரும் தங்கள் குலதெய்வமான சாஸ்தாவை தேடி அலைகிறார்கள். பிரசன்னம் பார்க்கிறார்கள். அவர் சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து சாஸ்தாவை கண்டுபிடித்து வணங்குகிறார்கள்.

    சரி கண்டுபிடிக்க முடியவில்லை. விட்டுவிடுவோம் என முடங்கி விடாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள் பலர். அதுவரை அவர்கள் பக்கத்தில் உள்ள சாஸ்தா கோயிலுக்கு சென்று வணங்கி வருவார். தங்களுக்கு ஒத்துக்கொண்டபடி சாஸ்தா கிடைத்து விட்டால் அவரை தேடி ஓடோடி செல்கிறார்கள். அந்த அளவுக்கு குலதெய்வம் மீது ஒரு வகையான ஈர்ப்பு. ஒருவர் குலதெய்வம் யார் என தெரியாமல் நெல்லையப்பர் கோயிலில் உள்ள காவல் தெய்வமான சங்கிலிபூதத்தாரை 25 ஆண்டுகளாக வணங்கி வந்துள்ளார். அவரும் குடும்ப கஷ்டங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகி சிலரிடம் முறையிட, நீங்கள் குலதெய்வத்தை வழிபடுங்கள் என்று கூறியுள்ளனர். சங்கிலிபூதத்தாரை நான் வழிபடுகிறேன் என்று கூற, சங்கிலிபூதத்தார் குலதெய்வம் இல்லை. காவல் தெய்வம் என்று அவர்கள் கூற, அவருக்கும் குலதெய்வம் தெரியவந்தது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா, சேரன்மகா தேவியிலிருந்து களக்காடு செல்லும் வழியில் பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிரான்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, பாளை சாந்திநகர் நடுகாடுடையார் சாஸ்தா, சீவலப்பேரி அருகே மலை உச்சியிலிருக்கும் மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, ஆலங்குளம் ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா, ஏர்வாடி வடுகச்சிமதில் பூலியுடையார் சாஸ்தா, நாங்குநேரி சிறுமளஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா, களக்காடு பெருவுடையார் சாஸ்தா, களக்காடு படலையார்குளம் வென்னியுடையார் சாஸ்தா, பத்தமடை மகாலிங்க சாஸ்தா, நளன்குடி மயிலேறும் சாஸ்தா, பேரூர் நரி சாஸ்தா என ஆயிரத்திற்கும் அதிகமான சாஸ்தா கோயில்கள் அமைந்துள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா, ஆதிச்சநல்லூர் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, மலையரசி தீரன் தம்பிரான் சாஸ்தா, திருச்செந்தூர் அம்மன்புரம் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த ஐயனார், குரும்பூர் தேரிகுடியிருப்பு கற்குவேல் ஐயனார், சாத்தான்குளம் மருதமலை ஐயனார், கடம்பாகுளம் பூலுடையார் சாஸ்தா என ஐநூறுக்கும் மேற்பட்ட சாஸ்தா கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளன. தவிர குமரி, விருதுநகர், மதுரை ஆகிய தென்மாவட்டங்களிலும் பலஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா, ஐயனார் கோயில்கள் உருவாயின.

    இதே போல் பல்வேறு சாஸ்தா வரலாறுகள் பல கூறியபடியே தென் பகுதியில் அருள்பாலித்து வருகின்றன. சிறந்த தமிழ் பெயர்களை சுமந்த வண்ணமாகவும் பல சாஸ்தா காணப்படுகின்றன. இராஜவல்லிபுரத்தில் நல்லதம்பி சாஸ்தா, குலசேகரநத்தத்தில் ஸ்ரீ கரும்புளி சாஸ்தா, முத்தாலங்குறிச்சி பூந்தலை உடையார் சாஸ்தா, பொந்தன்பொழி மருதமுடையார் சாஸ்தா, ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா, இருப்பபுரம் பெரும்படை சாஸ்தா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.
    சாஸ்தாவை வணங்க பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு பக்தர்கள் கடந்த காலங்களில் மாட்டு வண்டி கட்டி செல்வர்.

    அவர்கள் தங்கள் குழந்தைகளோடு வண்டியின் அடிவாரத்தில் தொட்டில் கட்டி பாய் விரித்து படுத்த படியே வானத்தை அன்னாந்து பார்த்து நிற்பர். மேகங்கள் திரளவேண்டும். மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் ஐயனே வேண்டிய வரம்வேண்டும் என சாஸ்தாவை வேண்டி நிற்பர். இரவு முழுவதும் வேடிக்கை பார்த்தபடியே, குழந்தைகளை ராட்டினத்தில் ஆட விட்டு மகிழ்வர். சர்பத், சேவியா பாயசத்தினை கண்ணாடி டம்ளரில் வாங்கி குடிப்பர். வகைவகையாக திண்பண்டங்களை வாங்கி கொடுத்து பெருமை படுவர். பெண் குழந்தைகளை கூட்டிச்சென்று பாசி மணிகள் வாங்கி கொடுத்து வளையல் உள்பட பொருள்களை டிசைன் டிசைனாக மணிக்கணக்கில் பார்த்து தேர்வு செய்வர்.

    இரவு முழுவதும் ஐயப்பன் வில்லுபாட்டை கேட்ட படியே ராத்திரி சாமக்கொடையை ரசித்துக்கொண்டே இருப்பர். சில இடங்களில் வன்னிராஜன் போன்ற காவல் தெய்வங்கள் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அதிகாலை சிலர் காவல்தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி, அதை தங்களது மாட்டு வண்டி கூரையில்போட்ட படி, அங்கு விற்கும் ஏணி மிட்டாய் (சீனி மிட்டாய்), காரச்சேவு, மிக்சர் போன்றவற்றை ஓலைப்பெட்டியில் வாங்கி வந்து உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். எத்தனை ஆனந்தம். குடும்பமே குதுகலிக்கும். பௌர்ணமி வெளிச்சத்தில் அக்கம் பக்கத்தில் வந்த உறவு காரர் கும்பலில் நல்லபெண் மாப்பிள்ளை இருக்கிறார்களா என ஒருஅலசு அலசி விடுவார்கள். பெண் மாப்பிள்ளை பிடித்திருந்தால் திருமணத்துக்கு அச்சாரமும் இட்டு கொள்வார்கள்.

    மொத்தத்தில் சாஸ்தா என்னும் குலதெய்வ வழிபாடு மட்டும் இல்லையென்றால் உறவுகள் மேலும் வலுப்பட மற்றுமொரு திருவிழா கிடைக்குமா? என்பது கூட சந்தேகமே. இந்த விழா என்றும் உறவுகள் மேன்படும் விழாவாக அமையவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாகும்.
    பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே இந்த நாளில் குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும்.
    பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் பல கடவுள்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு தான் முக்கியம். குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை நாடிச்சென்று வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை.

    குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக் 100 சதவீத பலன்களை தர வல்லது. அந்த குல தெய்வம்தான் ஒவ்வொருவரையும், அவரது குலத்தையே பாதுகாக்கும். . ஒருவரது குல தெய்வத்தை வைத்து, அவரது பாரம்பரிய சிறப்பையும் உணர்ந்து கொள்ள முடியும்.

    தற்போது பணி நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள், வருடத்துக்கு ஒரு முறையாவது தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று வணக்கி வந்தால் மிகவும் சிறந்தது. அதுவும் பங் குனி உத்திரத்தினம் அன்று வணங் கினால் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குல தெய்வ வழிபாடு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் கிடைக்கவும், இயற்கை செழிக்கவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

    குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடை பெறுகிறது. ஆனால் நமக்கு எந்த வகை வழிபாடு உகந்ததோ அதையே பின்பற்றலாம்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே இந்த நாளில் குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும்.

    மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும். பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் செழிப்பு அடைந்து மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

    அண்ணன் - தம்பி குடும்பத் தினர் எல்லோரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழி பாடு செய்யும்போது குல தெய் வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இத னால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். இது குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தவழச் செய்யும்.

    எனவே குல தெய்வ வழிபாடு என்பது முக்கியம். பங்குனி உத்திரம் அன்று அவரவர்களுடைய குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவது நல்லது.
    கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள்.

    நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரக தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள், அதுபோல வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
    குலதெய்வ வழிபாட்டை முறையாக விரதம் இருந்து செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. ஆகவே குலதெய்வத்தை கண்டுபிடித்து சரணாகதி அடையுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.
    மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும். அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. உலகம் முழுவதும் நவக்கிரகங்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பது நிதர்சனமான உண்மை.

    உளவியல் ரீதியாக ஒரு ஆன்மா, பூமியில் தன் வினைப் பயனை கூட்டவோ, குறைக்கவோ தன் பயணத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறது. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் தன் வினைப் பயனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை உணரும் ஆன்மா, பாக்கிய பலனை அதிகரித்து முக்திக்கு வழி தேடும். அவ்வாறு பாக்கிய பலனை அதிகரிக்க, ஒருவரது 5-ம் பாவம் தொடர்பான வழிபாடு நல்ல பலன் தரும்.

    இங்கே 5-ம் பாவம் என்பது, 5-ம் பாவத்தின் 5-ம் பாவமான 9-ம் பாவம் ஆகும். 9-ம் பாவம் என்பது தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களை குறிப்பதாகும். குலத்தை காக்கவும் தனது வாரிசுகளின் நலனை காக்கவும் முக்தியடைந்த ஆன்மாக்களே குல தெய்வமாக இருந்து ஆசி வழங்குகிறார்கள். தெய்வங்களில் மிகவும் வலிமையானது குல தெய்வமே. அது மற்ற தெய்வங்களின் வழிபாட்டு பலன்களையும் பெற்றுத் தரும் ஆற்றல் மிக்கது.

    குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே இருக்கும். ஆனால் அளவற்ற சக்தியுடையது. இவ்வளவு மகிமை வாய்ந்த குல தெய்வம், பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். தெரிந்தவர்கள் பலரும் அதனை முறையாக விரதம் இருந்து வழிபாடு செய்யாமல் இருக்கலாம். அப்படி தெரிந்தும் வழிபடாமல் இருப்பதால் ‘குலதெய்வ குற்றம்’ ஏற்படும். ஒரு ஜாதகத்தின் 5-ம் பாவத்திற்கான அதிபதி மற்றும் 5-ம் பாவம் குல தெய்வ அருளை காட்டும். ஐந்தாம் பாவத்தை பார்க்கும் அல்லது ஐந்தாம் பாவ அதிபதியுடன் சேரும் கிரகத்தின் தன்மையைக் கொண்டு, ஒருவரது குல தெய்வ அனுக்கிரகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அறியலாம்.

    * ஒரு ஜாதகத்தில் குரு அல்லது 1, 5, 9 ஆகிய இடங்கள் வலிமையாக இருந்தால், அந்த நபரின் குரலுக்கு குல தெய்வம் முன் வந்து நிற்கும்.

    * 1, 5, 9 ஆகிய இடங்களுக்கான அதிபதி அல்லது குரு 5-ம் பாவத்துடன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு குலதெய்வத்தின் அருள் நிச்சயம் உண்டு.

    * 5-ம் பாவ அதிபதியின் மீது, சனி, செவ்வாய், ராகு-கேது பார்வை விழுந்தால், குல தெய்வ வழிபாட்டை தடை செய்யும்.

    * 5-ம் பாவ அதிபதி நீச்சம் அல்லது அஸ்தமனம் அடைந் திருந்தால், அவர்களுக்கு குலதெய்வம் இருந்தும், அதனை வழிபாடு செய்வதில் ஆர்வம் இருக்காது.

    * 5-ம் பாவ அதிபதி 8-ல் மறைந்திருந்தால், குல தெய்வ குற்றம், சாபம் இருக்கிறது என்று பொருள். குலதெய்வ குற்றம், சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய கோவிலை சரியாக பராமரித்து, முறையான அபிஷேக ஆராதனை செய்து, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, உணவு படைக்க வேண்டும். அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது சென்று வழிபட்டு, தான தர்மம் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குலதெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும்.

    * 5-ம் பாவ அதிபதி 12-ல் இருப்பது அல்லது பாதகாதிபதியுடன் சம்பந்தம் பெற்றிருப்பது, குலதெய்வ சாபம் ஆகும். அதோடு சூரியனும், சந்திரனும் சம்பந்தம் பெற்றிருந்தால், அது பரம்பரை பரம்பரையாக தீர்க்கப்படாத சாபமாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்த சாபங்கள், கோவில் சொத்து, வருமானத்தை அபகரிப்பதால் மட்டுமே ஏற்படும். இதன் பலனாக பூர்வீக இடத்தில் குடியிருக்க முடியாத நிலை, பூர்வீகச் சொத்தை இழக்கும் நிலை, கஷ்ட ஜீவனம், நல்ல வேலை மற்றும் தொழில் அமையாத நிலை, தீராத கடன், கர்ம வினை நோய், தொடர் துர்மரணம், ஊனம் உள்ள குழந்தை பிறப்பது போன்ற அசம்பாவிதங்கள் இல்லத்தில் இருக்கும்.



    ஒரு குறிப்பிட்ட ஊரில் உருவாகும் இயற்கை சீற்றத்திற்கும் கூட, குலதெய்வ சாபமே காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. அந்த ஊரில் நடக்கும் தொடர் அசம்பாவிதங்களுக்கு குலதெய்வம் மகிழ்வோடு இருக் கிறதா? இல்லையா? என்பதை காண்பித்து விடும். ஒரு வருக்கு தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதும் கூட, ஒரு வகையில் குலதெய்வ சாபம் தான்.

    குலதெய்வ சாபம் உள்ளவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஜோதிட ரீதியாக 5-ம் பாவ அதிபதி தொடர்பான தெய்வத்தை கண்டறிந்து, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தீபத்தை குலதெய்வமாக பாவித்து, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வாருங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால், குலதெய்வம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

    பெண்கள் அனைவரும் தங்களின் திருமணம் முடிந்த பிறகு, பிறந்த விட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டு குலதெய்வத்தையும் வணங்கி வந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

    விநாயகர், முருகன், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற தெய்வங்கள், ஒருவருக்கு இஷ்ட தெய்வமாக இருக்க முடியுமே தவிர, குல தெய்வமாக இருக்கும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

    குல தெய்வங்கள் கர்ம வினைகளை நீக்க வல்லவை. தென் தமிழ்நாட்டில் சில சமூகத்தினர், குல தெய்வம் தெரியாதவர்களின் வீட்டில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும் அது பயனற்றது தான். குலதெய்வத்தை பலர் மறந்துவிடுகிறார்கள். குலதெய்வ வழிபாட்டை முறையாக விரதம் இருந்து செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. ஆகவே குலதெய்வத்தை கண்டுபிடித்து சரணாகதி அடையுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
    தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த பூஜைகள் விபரம் வருமாறு:-

    மகாலட்சுமி பூஜை- தீபாவளி திருமகளின் அவதார நாள் என்பதால், அன்று மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது. மகாலட்சுமி படத்தினை அலங்கரித்துவைத்து, தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதியுங்கள். மகாலட்சுமி துதிகளைச் சொல்லுங் கள். மனதார வேண்டுங்கள. திருமணம் கைகூடும். மங் களங்கள் சேரும். இதன் பயனாக கூடுதலாக லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

    குபேர பூஜை : செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள். குபேரன் படத்தின் இருபுறமும் விளக்கேற்றி வைத்து, இனிப்பு பலகாரஙகளை நிவேதனம் செய்து வணங்குங்கள். செல்வமகள் உஙகள் இல்லம் தேடி வருவாள்.

    கேதார கவுரி பூஜை : பரமசிவன் பார்வதி படத்தை வைத்து வழிபட வேண்டிய பூஜை அர்த்த நாரீஸ்வரர் படத்துக்கு கூடுதல் சிறப்பு. இதனால் தம்பதியர் ஒற்றுமை கூடும். இல்லற வாழ்வு சிறக்கும்.

    கோ பூஜை : பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.

    சத்யபாமா பூஜை : பூமா தேவியின அம்சமான சத்யபாமாவே கிருஷ்ணருடன் சென்று நரகாசுரனை அழித்தாள். எனவே சத்யபாமாவை வீரலட்சுமியாக பாவித்து வழிபடும் பழக்கம் வட இந்தியாவில் உளளது. வாழ்வில் வரும் தடைகள் யாவும் இந்த பூஜை யால் நீங்கும்.

    ஹரிஹர பூஜை : கிருஷ்ண பட்ச சதுர்த்தி, சிவனுக்குரிய மாத சிவராத்திரி. அன்று இரவு முழுக்க கண்விழித்து இருந்து மறுநாள் நாரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். எனவே சிவ விஷ்ணு வழிபாடு செய்ய ஏற்ற நாளாக தீபாவளி கரு தப்படுகிறது. இந்த வழிபாட்டால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். ஆனந்தம் பெருகும்.

    முன்னோர் வழிபாடு : துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் இல்லத்து இனிமையை இரட்டிப்பாக்கும்.

    குலதெய்வ பூஜை : எத்தனை எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வ வழிபாடே முதன்மையானது. வாழ்வில் நாம் அனைத்து பலன்களையும் பெற குலதெய்வத்தின் ஆசி வேண்டும். எந்த ஒரு பூஜை அல்லது பண்டிகையின் போதும் முதலில் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தைக் கும்பிட வேண்டும்.  குலதெய்வத்தைக் கும்பிட்ட பின் இயன்ற பூஜை, விரதத்தைக் கடைப்பிடியுங்கள். எல்லா நன்மையும் உங்களைத் தேடிவரும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நம் குலதெய்வத்தை எப்படி வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.
    மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.

    வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம். (துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).

    பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.

    வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். கலசத்தில் உள்ளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.

    பூஜைக்குறிய மந்திரம்:-

    ஓம் பவாய நம
    ஓம் சர்வாய நம
    ஓம் ருத்ராய நம
    ஓம் பசுபதே நம
    ஓம் உக்ராய நம
    ஓம் மஹாதேவாய நம
    ஓம் பீமாய நம
    ஓம் ஈசாய நம

    தினமும் 108 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
    ×