search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishna temple"

    கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் உள்ளது கிருஷ்ணர் கோவில். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் அதிகாலையில் நடை திறந்ததும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவருக்கு தொடக்க கால பூஜை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், அதிகாலை பூஜை எதுவும் நடைபெறாமல், நடை திறந்ததும் முதலில் இறைவனுக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தல வரலாறு :
     
    பாலகனாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அந்த இயலாமையால் வருத்தமும், கோபமும் கொண்ட கம்சன், கிருஷ்ணனையும், பலராமனையும் மல்யுத்தப் போட்டிக்கு வரச்செய்து கொல்வதென்று முடிவு செய்தான். அவர்கள் இருவரையும் அழைத்து வரும் பணியை, அக்ரூரர் என்பவரிடம் கம்சன் ஒப்படைத்தான்.

    மன்னரின் கட்டளையை மீற முடியாத அக்ரூரர், பிருந்தாவனத்திற்குச் சென்று, மல்யுத்தத்தைக் காண மதுராவிற்கு வரும்படி கிருஷ்ணன் மற்றும் பலராமனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதற்கிடையே கம்சன், மதுராபுரிக்கு வரும் இருவரையும் வலிமை மிகுந்த ‘குவாலயபீடம்’ என்னும் யானையைக் கொண்டு கொல்ல வேண்டுமென்று யானைப்பாகனிடம் சொல்லி வைத்தான்.

    அந்த யானையிடம் தப்பித்தால், மதுராபுரியில் இருந்த சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் என்கிற வலிமையான மல்யுத்த வீரர்களிடம், கிருஷ்ணன் மற்றும் பலராமனை எப்படியாவது மல்யுத்தத்திற்கு வரச்செய்து கொன்றுவிட வேண்டுமென்று அறிவுறுத்தினான்.

    மல்யுத்தத்தைக் காண மதுராபுரிக்கு நுழைந்த கிருஷ்ணன் மற்றும் பலராமனை வழிமறித்த யானை பாகன், அவர்கள் இருவரையும் கொல்ல யானையை ஏவினான். ஆனால், கிருஷ்ணர் அந்த யானையையும், யானை பாகனையும் கொன்றுவிட்டு, மல்யுத்தக் களத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் இருவரையும், மல்யுத்தத்திற்கு வரும்படி, கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்கள் அழைத்தனர். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் சிறுவர்கள் என்றும், பெரியவர்களான தங்களுடன் மல்யுத்தம் செய்வது யுத்த தர்மத்திற்கு புறம்பானது என்றும் வாதாடினர்.

    ஆனால் மல்யுத்த வீரர்கள், அவர்கள் இருவரையும் ஏளனமாகப் பேசிப் போட்டிக்கு வர வைத்தனர். மல்யுத்த வீரர்களில் சாணுரனைக் கிருஷ்ணனும், முஷ்டிகனைப் பலராமனும் கொன்றனர். பின்னர் தங்களுடன் போட்டியிட்ட அனைத்து மல்யுத்த வீரர்களையும் கொன்று குவித்தனர். இதனைக் கண்டு அதிர்ந்து போனான், கம்சன்.

    ஆவேசத்தில், கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லும்படி ஆணையிட்டான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அரசவையில் வீற்றிருந்த கம்சனை அங்கிருந்து, மல்யுத்தக் களத்திற்கு இழுத்து வந்து கொன்றான். கம்சனுக்கு ஆதரவாக வந்த கம்சனின் எட்டு சகோதரர்களையும் பலராமன் கொன்றான்.

    நீண்ட நேரமாக மல்யுத்தம் செய்து, கம்சனையும் கொன்ற கிருஷ்ணர் அதிகாலை வேளையில், தன்னைப் பெற்ற தாய் தேவகியைச் சந்தித்தார். தாயிடம் தனக்குப் பசிப்பதாகச் சொல்லி, அவர் தந்த உணவை வாங்கிச் சாப்பிட்டார்.

    மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை, காட்டிற்குள் தவமியற்றி வந்த சாம்பர முனிவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர், அங்கு கம்ச வதம் செய்து திரும்பிய கிருஷ்ணரின் உருவச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார் என்றும், பிற்காலத்தில் பரசுராமர் அங்கு கோவில் அமைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார் என்றும் ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    காளி கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு:

    இந்த ஆலயத்தின் கரு வறையில் கம்ச வதத்திற்குப் பின்பான கிருஷ்ணர், சிறிது சினத்துடன் வலது கரத்தில் சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வெள்ளியாலான மேலாடை அணிவிக்கப்பட்டிருக்கிறது.

    இங்கு விசாகச் சேனனுக்குத் தெற்கு பார்த்த நிலையில் தனிச் சன்னிதி இருக்கிறது. இக்கோவில் வளாகத்தில் தவமியற்றும் நிலையில் சாம்பர முனிவர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. ஆலய வளாகத்தில் இருக்கும் மூன்று குளங்களில், ஒரு குளத்தின் நடுவில் காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் மகாபாரதக் கதையில் வரும் பல்வேறு காட்சிகள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் மரச்சிற்பங்கள் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன.

    இந்தத் திருக்கோவிலில் மலையாள நாட்காட்டியின் படி கும்பம் (மாசி) மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மீனம் (பங்குனி) மாதம் 6-ந் தேதி வரை நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ எனும் நிகழ்வுடன் நிறைவடையும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் ஒரு விழாவாகும்.

    இந்தத் திருவிழாவின் போது, மழூர் என்னும் இடத்தில் இருக்கும் தருமிக்குளங்கரா ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்படும் பலராமர் சிலை, திருச்சம்பரம் கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் திருச்சம்பரம் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூக்கோத் நடா எனுமிடத்தில் கிருஷ்ணர், பலராமர் தொடர்பான மகாபாரதக் காட்சிகளை ஆடிக் காண்பிக்கும் ‘திடம்பு நிருத்தம்’ எனும் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    யானை இல்லாத திருவிழா :


    * இந்தக் கோவில், கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. இதனை ‘வடக்கு குருவாயூர்’ என்றும் அழைக்கிறார்கள்.

    * ஆலயம் அமைந்திருக்கும் பகுதி, இங்கு தவமியற்றிய சாம்பர முனிவரது பெயரைக் கொண்டு, ‘திருச்சம்பரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    * இங்கு தினமும் அதிகாலையில் கோவில் கருவறைக் கதவு திறந்ததும், மற்ற கோவில்களில் நடத்தப்பெறும் நிர்மால்ய பூஜை, ஆராதனை எதுவும் செய்யப்படுவதில்லை. முதலில் கிருஷ்ணருக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. கம்சனை வதம் செய்த கிருஷ்ணர், தன் பசியைப் போக்க அதிகாலை வேளையில் தாய் தேவகியிடம் உணவு பெற்றுச் சாப்பிட்டதை நினைவில் கொள்ளும் விதமாக, பச்சரிசி சாதம் படைக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

    * பொதுவாக கேரளக் கோவில் விழாக்களில் யானை களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இங்கு தரப்படுவதில்லை. கிருஷ்ணரும், பலராமரும் மல்யுத்தப் போட்டியைக் காண மதுராபுரி வந்த போது, கம்சன் தூண்டுதலால் குவாலயபீடம் எனும் யானை கிருஷ்ணரைக் கொல்ல முயன்றது. அந்த யானையைக் கிருஷ்ணர் கொன்று விட்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆலய விழாக்களின் போது, யானைகளை பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.

    * இக்கோவில் திருவிழாவின் கடைசி நாளில் நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ நிகழ்விற்கு, ஆயிரம் அப்பம் எனும் சிறப்பு இனிப்பு வகை தயாரித்து, இறைவனுக்குப் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தளிப்பிரம்பா எனும் ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சம்பரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல கண்ணூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பத்து என்ற பகுதியில் உள்ளது இந்த ஆலயம்.
    அழகிய முன் முகப்புடன் கூடிய கோவில்பத்து கோதண்டராமர் ஆலயம் சாலையின் விளிம்பிலேயே உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நீண்ட பிரகாரமும் உள்ளது. இடதுபுறம் தனி சன்னிதியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ‘ஸ்ரீதருநேத்ரதசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயர்’ என்பது இவர் பெயர். ஆம்! இந்த ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் அருள்பாலிப்பது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

    இவர் ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார். நேர் எதிரே ஆஞ்சநேயராகவும், இடதுபுறம் நரசிம்மராகவும், வலதுபுறம் வராக மூர்த்தியாகவும், பின்புறம் கருடாழ்வாராகவும், மேல்பகுதி ஹயக்ரீவராகவும் காட்சி தரும் இவர், நின்ற கோலத்தில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    அனுமன் ஜெயந்தி அன்று இந்த ஆஞ்சநேயர் சன்னிதி முன்பாக ‘மூல மந்திரயாகம்’ என்ற யாகம் நடத்தப்படுகிறது. பூஜை மற்றும் யாகப் பொருட்களுடன் நவதானியமும் யாகத்தில் இடப்படும். சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்டு பயன் பெறும் இந்த யாகம் நடக்கும் அன்று, ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் பக்தர்களுக்கு வடை, புளிசாதம், சர்க்கரைப் பொங்கல் முதலியன பிரசாதமாகத் தரப்படுகிறது.

    கல்வி செல்வம் வேண்டியும், திருமணத் தடை விலகவும், விரைந்து திருமணம் நடக்கவும் வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதல் விரைந்து பலிப்பதாக கூறுகின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் அவர்கள் ஆஞ்சநேயருக்கு புத்தாடை அணிவித்து, அர்ச்சனை செய்து வெற்றிலை மாலை, கொய்யாப்பழ மாலை, வாழைப்பழ மாலை, எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    ஆஞ்சநேயர் சன்னிதியை அடுத்து மகாமண்டபமும், கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. மகா மண்டப நுழைவு வாசலின் இடது புறம் நாகர் மற்றும் வலதுபுறம் தும்பிக்கை ஆழ்வார் திருமேனிகளும் உள்ளன.


    ஞ்சமுக ஆஞ்சநேயர், சந்தான கிருஷ்ணன்

    உள்ளே கருவறையில் மூலவராக வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன் உற்சவர் கோதண்டராமர், சீதாப் பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். அருகே நம்மாழ்வாரின் திருமேனியும் உள்ளது.

    இங்கு நடைபெறும் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. பங்குனி மாதம் ராமநவமி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்தின் தெற்கு திருச்சுற்றில் ஒரு மண்டபம் உள்ளது. ராமநவமியின் 10-ம் நாள் உற்சவமாக இந்த மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இறைவன்- இறைவிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு நடைபெறும் கண்ணாடி சேவை மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுவர். மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.

    குழந்தை பேறு வேண்டுவோர் இந்த ஆலயம் வருகின்றனர். கருவறையில், கையில் தூக்கக் கூடிய வடிவில் சந்தானகிருஷ்ணன் உலோகச்சிலை ஒன்று உள்ளது. அர்ச்சகர் அந்தச் சிலையை பிரார்த்தனை செய்பவர் கரத்தில் சில நிமிடங்கள் தந்து விட்டு திரும்ப வாங்கிக்கொள்வார். அந்தப் பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் விரைந்து கிடைக்கும் என உறுதியாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

    பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஊர் மக்களின் சுப காரியங்கள் நடைபெறுகின்றன. திரு மணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற மங்கல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    வில்லேந்திய ராமபிரானையும், சீதாப்பிராட்டியாரையும் தரிசிக்க நாமும் ஒருமுறை இந்த ஆலயம் சென்று வரலாமே. 
    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. #Pakistan #KrishnaTemple
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அறக்கட்டளை சொத்து வாரியத்தின் முதன்மை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், ‘கிருஷ்ணா கோவிலை புதுப்பிக்க வேண்டி, மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கோவில் புணரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வர இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #KrishnaTemple 
    ×