search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala gold smuggling"

    • ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
    • ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.

    கொச்சி:

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

    இந்நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    • எதிர்கட்சியினர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கருப்பு முககவசம் அணிந்து சென்ற பத்திரிக்கையாளர்களின் முககவசங்கள் அகற்றப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி, மகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எதிர்கட்சியினர் கடந்த 5 நாட்களாக பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆங்காங்கே முதல்-மந்திரி செல்லும் இடங்களில் சாலை மறியல், கருப்பு கொடி காட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று கொச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து வந்த திருநங்கைகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அதேபோல் கருப்பு முககவசம் அணிந்து சென்ற பத்திரிக்கையாளர்களின் முககவசங்கள் அகற்றப்பட்டன. முதல்-மந்திரி கலந்து கொள்ளும் விழாக்களில் கருப்பு முக கவசம் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் வழிநெடுக பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
    • பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து தனக்கு மிரட்டல் வருவதாக ஸ்வப்னா புகார் கூறினார். மேலும் வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என ஷாஜி கிரன் என்பவர் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    ஷாஜி கிரன், முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என தெரிவித்த ஸ்வப்னா, தன்னுடன் ஷாஜி கிரன், டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்த ஆடியோவை நேற்று மாலை ஸ்வப்னா வெளியிட்டார். அதில் ஸ்வப்னாவிடம் பேசும் நபர், தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதை சகித்து கொள்ள முடியாது.

    இந்த பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியிருந்தார். இதுபோல மேலும் பல தகவல்கள் ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆடியோ பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்பவ்னா பேசும் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, என்றார்.

    இதற்கும் ஸ்பவ்னா பதில் அளித்தார். அவர் கூறும்போது, ஆடியோ பதிவை வெளியிட்டதால் என்னை பற்றிய ஆபாச வீடியோவை வெளியிட போவதாக மிரட்டுகிறார்கள். ஆபாச வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வீட்டின் படுக்கை அறையில் அல்லது குளியல் அறையில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து எடுத்தார்களா? என தெரியவில்லை.

    பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை. அந்த வகையில் எனக்கும் இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளது. என்னை பற்றிய ஆபாச வீடியோக்களை வெளியிட்டால், அதனை அனைவரும் பார்த்து அதில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 100 சதவீதம் உண்மைதானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் இந்த பிரச்சினையை நான் சும்மா விடப்போவதில்லை. இதுபற்றியும் வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாக சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பினராயி விஜயன் பதவி விலக கோரி காங்கிரசார் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பும் மூண்டது. கல்வீச்சும் நடந்தது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. 4-வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

    • ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
    • ஸ்வப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்ததில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தங்கம் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் கூட்டு சதித்திட்டம் தீட்டியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் மீது முன்னாள் மந்திரி ஜலீல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.

    அதை தொடர்ந்து, பாலக்காட்டில் ஸ்வப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு ஷாஜி கிரண் மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். ஷாஜி கிரண் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், இருவரும் பேசிய உரையாடல்களை ஸ்வப்னா சுரேஷ் நேற்று வெளியிட்டார். அதை மறுத்த ஷாஜி கிரண் உரையாடல்களில் மாறுதல் செய்து வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

    அதே சமயம் ஸ்வப்னா சுரேஷின் ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக ஷாஜி கிரண் கூறியதாக வெளியான தகவலால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
    • ஸ்வப்னாவின் புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே ஸ்வப்னா மீது கேரள முன்னாள் மந்திரி ஜலீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோர்ட்டு, ஸ்வப்னா மீது ஜாமீனில் வரத்தக்க வழக்கே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

    மனு தள்ளுபடியானதும், ஸ்வப்னா, இன்னொரு பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

    வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

    இது தொடர்பான ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும், அதனை இன்று வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். ஸ்வப்னாவின் இந்த புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    • தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.
    • தன் மீதான குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு கடந்த 2 நாட்களாக கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார்.

    அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மீதும், ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சுமத்தினார். வெளிநாடுகளில் இருந்து கரன்சி கடத்தப்படுவது அவருக்கு தெரியும் என ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.

    இந்தநிலையில் அவரது குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், பா.ஜ.க. மற்றும் யு.டி.எப். சதி என்றும் அவர் கூறினார். மேலும் தற்போதைய அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த சதி குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகாரும் அளித்துள்ளார். சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற பொய்யான செய்திகளை ஸ்வப்னா சுரேஷ் பரப்பி வருகிறார்.

    அரசியல் நோக்கத்துடன் அவதூறு செய்திகளை பரப்பி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பாக துணை இயக்குனரின் சட்ட ஆலோசனையின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்வப்னா சுரேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புகாரை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பேன். ஊடகங்களை கண்டு ஒழியமாட்டேன் என்று ஜாமீனில் விடுதலையான ஸ்வப்னா கூறினார்.
    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தங்க கடத்தல் விவகாரத்தில் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரித்தது.

    கடத்தப்பட்ட தங்கம்

    ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்த ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தில் தாயாருடன் தங்கி உள்ள அவர், நேற்று கொச்சி சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பேன். ஊடகங்களை கண்டு ஒளியமாட்டேன்.

    தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுக்கிறேன். வக்கீலை பார்ப்பதற்காகவே கொச்சி வந்தேன், என்றார்.


    கேரள ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் உறுதி பத்திரம் கொடுத்த ஸ்வப்னா சுரேசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 2020-ம் ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார், சந்திப்நாயர் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 16 மாதங்களாக அவர் சிறையில் இருந்தார். உபா சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கேரளா ஐகோர்ட்

    கேரள ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் உறுதி பத்திரம் கொடுத்த ஸ்வப்னா சுரேசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று (6-ந் தேதி) திருவனந்தபுரம் அட்டா குளங்கரா மகளிர் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார்.

    இதையும் படியுங்கள்...மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது- ராகுல் காந்தி விளாசல்

    ×