search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka rain"

    தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

    கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் பருவமழை வெளுத்து வாங்குவதால், காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 124.80 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 90.20 அடியாக உயர்ந்தது. இன்று இது 94.50 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரத்து 383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 416 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாளை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் எனவும், இன்னும் 10 நாட்களுக்குள் அணை முழுமையாக நிரம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 487 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று அல்லது நாளை கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணை நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு பகல் 1 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மாலை 6 மணி முதல் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டன.

    கபினி அணைக்கு இன்று 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு முதல் கபினி அணையில் இருந்து நீர்திறப்பு 35ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேராக தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை நோக்கி சீறிபாய்ந்து வருகிறது.

    கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைய 48 மணிநேரமும், மேட்டூர் அணைக்கு வந்து சேர 60 முதல் 62 மணிநேரம் வரை ஆகும்.

    இதனால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு இந்த தண்ணீர் வந்து சேரும்.

    காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணிநேரமும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று இது 1,100 கனஅடியாக குறைந்தது. நாளை இரவு 35ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் வரும்போது அங்குள்ள அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்ட இருப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும். தொடர்ந்து 24 மணிநேரம் மேட்டூர் அணைக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ச்சியாக வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒருஅடி உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிபாய்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும்.

    கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில், அந்த அணையில் இருந்தும் காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் ஒருசேர காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் குறுவை சாகுபடியை எதிர்நோக்கி காத்திருக்கும், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கர்நாடகா கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் வருகிற 19-ந்தேதி வரை மிக பலத்தமழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை கொட்ட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்புவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    குடகு:

    கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அங்கு இடைவிடாது கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்த நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் குடகு மாவட்டமே ஸ்தம்பித்து உள்ளது. இந்த நிலையில் நேற்றும் குடகு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அப்பி மல்லலி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதற்கிடையே சில இடங்களில் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள சில கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் கரையோர மக்களை அரசு அதிகாரிகள் மீட்டு, பள்ளிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    மேலும், ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

    சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் நாசமடைந்தன. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தொடர் மழையால் குடகு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்திலும் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவினகொம்பே உள்பட 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி அணை தனது முழுகொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 7 அடியே உள்ளது.

    அணைக்கு தற்போது வினாடிக்கு 22,000 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையை சென்றடையும் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது.



    மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 39.96 அடி. அணைக்கு 743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  #metturdam #cauveryriver #kabinidam
    கர்நாடகாவில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #KarnatakaRain #PMModi

    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

    மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி நேற்றிரவு ஆய்வு செய்தார். மேலும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து மீட்புப்பணிகளையும் முடிக்கி விட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.” என மோடி கூறியுள்ளார்.



    தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaRain #PMModi
    ×