search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaiyarasan"

    சர்ஜுன்.கே.எம். இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #Airaa #Nayanthara
    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன்.கே.எம். அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

    கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் டீசர் ஜனவரி 5-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.


    இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

    படம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படம் தவிர்த்து நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’, ‘கொலையுதிர்க்காலம்‘  உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார். #Airaa #Nayanthara #SarjumKM #AiraaTeaser

    ஜெயதேவ் பாலசந்திரன் இயக்கத்தில் கலையரசன் - அனஸ்வரா குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் பட்டினப்பாக்கம் படத்தின் விமர்சனம். #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கலையரசன் தனது அம்மா, தங்கையுடன் சேரி பகுதியில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் கலையரசனுக்கு அந்த பகுதி தாதாவான ஜான் விஜய்யிடம் கடன் வாங்கிவிட்டு அதை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கலையரசனும், பணக்கார வீட்டு பெண்ணான நாயகி அனஸ்வரா குமாரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில், கலையரசனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அம்மாவை காப்பாற்ற லட்சங்கள் செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டு புரோக்கரான சார்லியுடன் ஒரு வீட்டுக்கு செல்கிறார் கலையரசன். வயதான பெண் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் கொள்ளையடித்தால் செட்டில் ஆகி விடலாம் என்று சார்லி விளையாட்டாக சொல்கிறார். இதையடுத்து அந்த வீட்டில் திருட முடிவு செய்து கலையரசன் அந்த வீட்டுக்கு செல்கிறார்.



    இதுஒருபுறம் இருக்க மனோஜ் கே.ஜெயன் தனது மனைவி சாயா சிங்கை கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் மனோஜ் மீது சாயாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் தன்னுடன் பாசமாக பழகும், இளைஞர் ஒருவருடன் சாயா நெருக்கமாகிறார். இதையடுத்து அந்த இளைஞரை ஒருநாள் இரவு தனது அம்மா வீட்டிற்கு வர சொல்கிறார் சாயா. 

    மேலும் வயதானவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்து வரும் சைக்கோ கொலையாளி சாயாவின் அம்மாவை கொல்ல நினைக்கிறான்.



    இவ்வாறாக கலையரசன், சாயா சிங், சைக்கோ கொலையாளி என இவர்கள் சந்திக்கும் போது என்ன நடந்தது? கலையரசன் தனது அம்மாவை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கலையரசன் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞராக சிறப்பாக நடித்தியிருக்கிறார். கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் அவரது நடிப்பு நேர்த்தியானதாக இருந்தது. நாயகி அனஸ்வரா குமாருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். சாயா சிங்குக்கு அழுத்தமான கதாபாத்திரம், அதை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு பாராட்டுக்கள். 

    மற்றபடி மனோஜ் கே.ஜெயன், , ஜான் விஜய், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். யோக் ஜபி, ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.



    இயல்பான நிறைய இடங்களில் கேட்ட, பார்த்த கதை தான் என்றாலும், திரைக்கதையில் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ஜெயதேவ் பாலசந்திரன். எனினும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்தின் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    ராணா ஒளிப்பதிவும், இஷான் தேவ், பிரணவ் தாஸ், ஸ்ரீஜித் மேனன் இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `பட்டினப்பாக்கம்' பார்த்து போங்க. #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கலையரசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Nayanthara #Kalaiyarasan
    நயன்தாரா மாயா, டோரா படங்களை தொடர்ந்து புதிதாக பேய் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை லக்‌ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.

    அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றையும் படக்குழுவினர் சென்னையில் அமைத்து வருகின்றனர்.



    தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதைத் தொடர்ந்து 25 நாட்களுக்கு அந்த பேய் பங்களாவில் நடக்கும் காட்சிகளில் நடிக்க உள்ளார். அதன் பிறகு கடைசி கட்ட படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி செல்ல உள்ளனர். #Nayanthara #Kalaiyarasan

    ×