search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமிநாதன்"

    அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பனுஸ்ரீ மேஹ்ரா - பிரேம்ஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிம்பா' படத்தின் விமர்சனம். #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi
    வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பரத், பிரபல நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். போதைக்கு அடிமையான பரத்தின் தாத்தாவின் இறப்புக்கு பிறகு, பரத்தும் போதைக்கு அடிமையாகிறார். தனிவீட்டில் வசித்து வரும் இவர் யாருடனும் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை, தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில், பரத் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிறுக்கும் நாயகி பனுஸ்ரீ மேஹ்ரா, தனது நாயை பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் செல்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் பரத்துக்கு நாய், நாய் மாதிரி இல்லாமல் பிரேம்ஜியாக தெரிகிறது. இவர் பிரேம்ஜியுடன் பேசி நட்பாகிறார்.



    பனுஸ்ரீ மேஹ்ராவும் அடிக்கடி பரத் வீட்டிற்கு வந்து செல்ல பரத் பனுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். தனது காதலுக்கு உதவும்படி பரத், பிரேம்ஜியிடம் கேட்கிறார். இதுஒருபுறம் இருக்க பனுஸ்ரீயுடன் ஒன்றாக பணிபுரியும் ரமணாவும் பனுஸ்ரீயை காதலிக்கிறார்.

    இதில் யார் காதல் வெற்றி பெற்றது? பரத்துக்கு பிரேம்ஜியாக தோன்றும் நாய் அவரது காதலுக்கு உதவியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இதுவரை இல்லாத ஒரு வித்தாயசமான கதாபாத்திரத்தில் பரத் நடித்திருக்கிறார். போதை ஆசாமியாகவே படம் முழுக்க வந்து போதைக்காரர்களின் உலகத்தை காட்டிச் செல்கிறார். பனுஸ்ரீ மேஹ்ரா அலட்டல் இல்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் தலைப்பாக சிம்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். காமெடியில் கலகலக்கியிருக்கும் பிரேம்ஜி, படத்தின் கதை ஓட்டத்திற்கு காரணமாகிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்கள்.

    போதைக்கு அடிமையான ஒருவரின் உலகம், அவரது பார்வை எப்படி இருக்கும் என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு கதையாக்கி இருக்கிறார் அரவிந்த் ஸ்ரீதர். படத்தில் நாயாக வரும் பிரேம்ஜியின் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். வித்தியாசமான முயற்சிக்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். அச்சு விஜயனின் படத்தொகுப்பு படத்தை போதை உலகத்திற்கு கொண்டு செல்கிறது.



    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `சிம்பா' நன்றியுள்ளது. #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi

    அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சிம்பா' படத்தின் முன்னோட்டம். #Simba #Bharath #BhanuSriMehra #PremgiAmaran
    மேஜிக் சேர் பிலிம்ஸ் சார்பில் கே.சிவனேஸ்வரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சிம்பா'.

    பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், பவர்ஸ்டார் சீனிவாசன், சுவாமிநாதன், சுவாதி தீகித் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - சினு சித்தார்த், படத்தொகுப்பு - அச்சு விஜயன், கலை இயக்குநர் - வினோத் ராஜ்குமார் & அந்தோணி, சண்டைப்பயிற்சி - பில்லா ஜெகன், ஆடை வடிவமைப்பு - அசோக் குமார், தயாரிப்பாளர் - கே.சிவனேஸ்வரன், தயாரிப்பு நிறுவனம் - மேஜிக் சேர் பிலிம்ஸ், சினிரமா ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஸ்ரீதர்.



    படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சிம்பா டிரைலர்:

    ஜெயதேவ் பாலசந்திரன் இயக்கத்தில் கலையரசன் - அனஸ்வரா குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் பட்டினப்பாக்கம் படத்தின் விமர்சனம். #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கலையரசன் தனது அம்மா, தங்கையுடன் சேரி பகுதியில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் கலையரசனுக்கு அந்த பகுதி தாதாவான ஜான் விஜய்யிடம் கடன் வாங்கிவிட்டு அதை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கலையரசனும், பணக்கார வீட்டு பெண்ணான நாயகி அனஸ்வரா குமாரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில், கலையரசனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அம்மாவை காப்பாற்ற லட்சங்கள் செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டு புரோக்கரான சார்லியுடன் ஒரு வீட்டுக்கு செல்கிறார் கலையரசன். வயதான பெண் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் கொள்ளையடித்தால் செட்டில் ஆகி விடலாம் என்று சார்லி விளையாட்டாக சொல்கிறார். இதையடுத்து அந்த வீட்டில் திருட முடிவு செய்து கலையரசன் அந்த வீட்டுக்கு செல்கிறார்.



    இதுஒருபுறம் இருக்க மனோஜ் கே.ஜெயன் தனது மனைவி சாயா சிங்கை கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் மனோஜ் மீது சாயாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் தன்னுடன் பாசமாக பழகும், இளைஞர் ஒருவருடன் சாயா நெருக்கமாகிறார். இதையடுத்து அந்த இளைஞரை ஒருநாள் இரவு தனது அம்மா வீட்டிற்கு வர சொல்கிறார் சாயா. 

    மேலும் வயதானவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்து வரும் சைக்கோ கொலையாளி சாயாவின் அம்மாவை கொல்ல நினைக்கிறான்.



    இவ்வாறாக கலையரசன், சாயா சிங், சைக்கோ கொலையாளி என இவர்கள் சந்திக்கும் போது என்ன நடந்தது? கலையரசன் தனது அம்மாவை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கலையரசன் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞராக சிறப்பாக நடித்தியிருக்கிறார். கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் அவரது நடிப்பு நேர்த்தியானதாக இருந்தது. நாயகி அனஸ்வரா குமாருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். சாயா சிங்குக்கு அழுத்தமான கதாபாத்திரம், அதை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு பாராட்டுக்கள். 

    மற்றபடி மனோஜ் கே.ஜெயன், , ஜான் விஜய், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். யோக் ஜபி, ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.



    இயல்பான நிறைய இடங்களில் கேட்ட, பார்த்த கதை தான் என்றாலும், திரைக்கதையில் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ஜெயதேவ் பாலசந்திரன். எனினும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்தின் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    ராணா ஒளிப்பதிவும், இஷான் தேவ், பிரணவ் தாஸ், ஸ்ரீஜித் மேனன் இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `பட்டினப்பாக்கம்' பார்த்து போங்க. #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar

    ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்தது. #MyDearLisa #VijayVasanth
    விஜய் வசந்த் - லீசா நடிப்பில் உருவாகி வரும் படம் `மை டியர் லிசா'. ரஞ்சன் கிருஷ்ண தேவன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரியாஸ் கான், சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சண்டைக் காட்சியின் போது நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    சண்டைக் காட்சியில், விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த் கால் தவறி பள்ளத்தில் சிக்கியதால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 



    சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #MyDearLisa #VijayVasanth

    ×