search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரா"

    ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி அடுத்ததாக 2 கதாநாயகிகளுடன் நடித்து வருகிறார். #Umapathy
    வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ். தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ்.

    ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா - யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார். 

    மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். 



    இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைக்கதை.  

    மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர். ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    சர்ஜூன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஐரா' படத்தின் விமர்சனம். #Airaa #AiraaReview #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
    பத்திரிகையாளரான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான ஜெயப்பிரகாஷ் - மீரா கிருஷ்ணன் முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார்.

    கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு சிறுவன் ஒருவனையும் நயன்தாரா சந்திக்கிறார். தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார்.



    மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. இதில் கலையரசனுக்கு சம்பந்தப்பட்ட ஒருவரும் இறந்துவிட, இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார்.

    கடைசியில், மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா
     அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். ஒரு தோற்றத்தில் நகரத்து சாயலிலும், மற்றொரு தோற்றத்தில் கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கலையரசன் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

    எச்சரிக்கை படத்திற்கு பிறகு ஒரு முழு நீள த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜூன். முதல் பாதி காமெடி கலந்த திகிலாகவும், இரண்டாவது பாதி திகில் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளாகவும் இருக்கிறது. பொழுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தாலும், படம் முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் காட்சிகளுக்கு சுந்தரமூர்த்தியின் இசை உயிர்ப்பாக அமைந்திருக்கிறது.



    சுந்தரமூர்த்தி.கே.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பு போன்ற மெல்லிய இசை திகிலை கூட்டுகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `ஐரா' திகில்.

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின் அதிகாலை 5 மணி காட்சி மூலம் தனது ரசிகர்களை காண வருகிறார். #Nayanthara #Airaa
    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படம் வருகிற 28-ந்தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு சென்னையில் காலை 5 மணி காட்சி போடப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஜே.ஜே.ஆர் புரொடக்‌‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

    சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சர்ஜுன். இவரது இரண்டாவது படம்தான் ‘ஐரா’. நயன்தாரா, இதில் பவானி மற்றும் யமுனா என்னும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.



    மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 29ந்தேதி விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ‘ஐரா’ படம் வெளியாகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    பெரிய ஹீரோக்களின் படங்களைத் தான் அதிகாலை 5 மணிக்கு திரையிடுவார்கள். சிறிய பட்ஜெட் படங்களுக்கும், சிறிய நடிகர்கள் படங்களுக்கு அதிகாலை 5 மணி காட்சி திரையிடுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ படம் காலை 5 மணி காட்சி திரையிடப்பட்டது. இதற்காக விஷ்ணு விஷாலும், ஆர்.ஜே.பாலாஜியும் டுவிட்டரில் காரசாரமாக மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ‘ஐரா’ படமும் காலை 5 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது.
    ஐரா படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும் என்று நயன்தாரா பேசும் வசனம் வைரலாகி வருகிறது. #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் நயன்தாரா பேசும் ‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லனும்’ வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இப்படம் மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28
    சர்ஜூன். கே.எம். இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐரா' படத்தின் முன்னோட்டம். #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
    கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஐரா'.

    நயன்தாரா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சுதர்சன் சீனிவாசன், இசை - சுந்தரமூர்த்தி கே.எஸ்., படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், கலை - சிவசங்கர், ஸ்டண்ட்ஸ் - மிராக்கிள் மைக்கேல் ராஜ், ஆடை வடிவமைப்பாளர் - பிரீத்தி நெடுமாறன், நடனம் - விஜி சதீஷ், பாடல்கள் - தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக், ஆடியோகிராஃபி - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் - கோட்டபாடி ஜே.ராஜேஷ், கதை, திரைக்கதை - பிரியங்கா ரவீந்திரன், இயக்கம் - சர்ஜூன். கே.எம்.



    படம் பற்றி இயக்குநர் சர்ஜூன் பேசும் போது,

    ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். நயன்தாராவின் 63-வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    ஐரா மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28 🦋

    ஐரா டிரைலர்:

    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Airaa #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தை மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Airaa #Nayanthara 
    நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஐரா படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். #Airaa #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் வெளியாகியுள்ளது.



    சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐரா’ படத்தின் கதை லீக்காகியுள்ளது. #Airaa #Nayanthara
    நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார்.

    இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ என்றதும் ‘என்னது மறுபடியுமா’ என்று ஒரு பெண் பதறுவதுபோல் பேசுகிறார்.

    “என் தலையெழுத்த யாருன்னே தெரியாத ஆறுபேர் கிறுக்கி எழுதி இருக்காங்க” “உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல” என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. பெண்சிசு கொலையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. ஒரு நயன்தாராவுக்காக இன்னொரு நயன்தாரா பழிவாங்குவது கதை என்று தெரிகிறது.



    நயன்தாரா மேக்கப் போடாமல் கருத்த முகத்தோடு இதில் வருகிறார். அவரது விழிகளில் கண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்னொரு நயன்தாரா மாடர்ன் உடையில் காட்சியளிக்கிறார். கருப்பு நயன்தாரா பேய் வேடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
    சர்ஜுன்.கே.எம். இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #Airaa #Nayanthara
    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன்.கே.எம். அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

    கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் டீசர் ஜனவரி 5-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.


    இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

    படம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படம் தவிர்த்து நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’, ‘கொலையுதிர்க்காலம்‘  உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார். #Airaa #Nayanthara #SarjumKM #AiraaTeaser

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாரா தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் இயக்குநர் மீது கோபத்தில் உள்ளாராம். #Nayanthara #SarjumKM
    நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’ உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார்.

    மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘ஐரா’, ‘கொலையுதிர்க்காலம்‘ படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். கொலையுதிர் காலம் ஜனவரி மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல ஐரா படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்“ திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என தெரிகிறது.



    இயக்குனர் சர்ஜுன் மிக தாமதமாகவே இப்படத்தை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க இயக்குனர் தாமதம் செய்து வருவதால் நயன்தாரா கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பிரச்சினைகளை தீர்த்து ஐரா படத்தின் கிளமாக்ஸ் காட்சியை விரைவில் எடுக்க தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. #Nayanthara #SarjumKM

    நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #Nayanthara
    ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’.

    இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

    தற்போது, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனத்துக்கு பதிலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

    அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி மாதம்தான் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். #Nayanthara
    விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக படத்திற்காக முதல்முறையாக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். #Nayanthara
    `லட்சுமி', `மா' குறும்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சர்ஜுன்.கே.எம் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை `கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்டப்பாடி.ராஜேஷ் தயாரிக்கிறார். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக கலையரசன் நடிக்கிறார்.

    இப்படத்திற்கு ‘ஐரா’ என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.



    இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றை அமைத்து படக்குழுவினர் சென்னையில் படமாக்கி வருகின்றனர். ஹாரர் மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. #Nayanthara
    ×