search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Juventus"

    20 வயது இளைஞனை போன்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உடல் திறனைப் பார்த்து யுவான்டஸ் மருத்துவ அதிகாரிகள் வியந்து போனார்கள். #CR7 #Juventus
    கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். இந்த வருடத்துடன் ரியல் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, புதிதாக யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார்.

    யுவான்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தவற்கு முன் ரொனால்டோவிற்கு யுவான்டஸ் மெடிக்கல் குழு பரிசோதனை செய்தது. அப்போது சில டெஸ்டுகளின் முடிவுகளை பார்த்து அசந்து விட்டனர்.

    ரொனால்டோ பரிசோதனை முடிவுகள் குறித்து இத்தாலியில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிலவற்றில் ரொனால்டோவின் திறன் 13 வயது சிறுவனைவிட சிறந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளது.



    ரொனால்டோவின் உடலில் 7 சதவீதம் கொழுப்பு உள்ளது. ஒரு தொழில்முறை விளையாட்டு வீரரை விட இது 3 சதவீதம் குறைவாகும். சதையின் வலிமை 50 சதவிகிதமாக உள்ளது. இது மற்ற வீரர்களை விட நான்கு சதவிகிதம் ஆகும்.

    உலகக்கோப்பை தொடரின்போது மணிக்கு 21.1 மைல் வேகத்தில் ஓடினார். மருத்துவ பரிசோதனையில் இந்த வேகம் பிரதிபலித்துள்ளது. அவரிடம் 20 வயது இளைஞருக்கான திறன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
    ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவான்டஸ் சென்ற ரொனால்டோவிற்கு இரண்டு பேர் 7-ம் நம்பரை விட்டுக் கொடுத்துள்ளனர். #CR7 #Ronaldo #Juventus
    கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 33 வயதானாலும் அவரது ஆட்டத்தில் சிறிது கூட தொய்வு ஏற்படவில்லை. சமீபத்தில் யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் தொடரில் இவர் இடம்பிடித்திருந்த ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.

    ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறி ரொனால்டோ தற்போது யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அந்த காலத்தில் இருந்தே 7-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார். இது அவருடைய ராசியான நம்பராக இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் அவர் ‘CR7’ என்றே குறிப்பிடுகிறார்.


    கொலம்பியா வீரர்

    யுவான்டஸ் அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த ஜுயான் குவாட்ராடோ விளையாடி வருகிறார். இவர் 7-ம் நம்பர் ஜெர்சியுடன் விளையாடி வந்தார். யுவான்டஸ் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த உடன், ஜுயான் 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்தார். இந்த அணியில் இத்தாலியைச் சேர்ந்த லெயோனார்டோ ஸ்பினாஸ்சோலா இடம்பிடித்துள்ளார். இவர் 2012-ல் இருந்து லோன் மூலம் வெவ்வேறு அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக அட்டாலான்டா அணிக்காக விளையாடினார்.

    தற்போது யுவான்டஸ் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் யுவான்டஸ் அணியில் விளையாடும்போது 7 நம்பர் ஜெர்சியுடன் விளையாடினார். தற்போது இவரும் ரொனால்டோவிற்காக 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் ரொனால்டோவிற்காக இரண்டு பேர் 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்துள்ளனர்.
    யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo
    கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.



    இதோடு ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறினார். இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸில் இணைவதாக தகவல் வெளியானது. பின்னர் 100 மில்லியன் பவுண்டிற்கு ரியல் மாட்ரிட் டிரான்ஸ்பர் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



    இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கும், அதனைத் தொடர்ந்து ரொனால்டோவை அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கும் நிகழ்ச்சியில் யுவான்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக ரொனால்டோ இத்தாலி சென்றுள்ளார். இங்கு சென்ற ரொனால்டோவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர். #CR7 #Juventus #Ronaldo
    இத்தாலி கால்பந்து கிளப்பான யுவான்டஸில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாரத்திற்கு 4.65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறார். #CR7 #Ronaldo
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கலை சேர்ந்த 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வந்தார்.

    இந்த வருடம் யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் ரயில் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரொனால்டோ இத்தாலி கிளப்பான யுவான்டஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி இந்த செய்தியை நேற்று உறுதிப்படுத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியுடன் 2021 வரை ஒப்பந்தம் இருந்த போதிலும் சம்பள பிரச்சனையால்தான் ரொனால்டா வெளியேறினார். ரொனால்டோவிற்காக ரியல் மாட்ரிட் அணிக்கு யவான்டஸ் டிரான்ஸ்பர் தொகையாக 100 மில்லியன் பவுண்டு கொடுக்கிறது.



    ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் ரொனால்டோவின் சம்பளம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

    அவர் யுவான்டஸில் வாரத்திற்கு 5,10,483 பவுண்டு சம்பளமாக பெற இருக்கிறார். இது இந்திய பணமதிப்பில் 4 கோடியே 64 லட்சத்து 90 ஆயிரத்து முன்னூற்று பத்து ரூபாய் ஆகும்.
    ரொனால்டோ யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் இணைகிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது ரியல் மாட்ரிட். #CR7 #Realmadrid #Juventus
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கலை சேர்ந்த 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வந்தார்.

    இந்த வருடம் யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் ரயில் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரொனால்டோ இத்தாலி கிளப்பான யுவான்டஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.



    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி யுவான்டஸ் அணியில் சேர இருப்பதாக தெரிவித்துள்ளது. 103 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக கொடுக்க இத்தாலி கால்பந்து கிளப் அணியான யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், ரியல் மாட்ரிட் அதை ஏற்றுக்  கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார்.
    இத்தாலியைச் சேர்ந்த தலைசிறந்த கோல் கீப்பரான பஃபோன் 17 வருடங்களுக்குக் பிறகு யுவான்டஸ் அணியில் இருந்து பிஎஸ்ஜிக்கு மாறியுள்ளார். #Buffon #PSG #Juventus
    இத்தாலி தேசிய கால்பந்து அணிக்காக 1997-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 21 வருடமாக விளையாடியவர் கோல்கீப்பர் பஃபோன். உலகின் தலைசிறந்த கோல்கீப்பராக கருதப்படும் இவர், இத்தாலிக்காக 176 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இத்தாலி தோல்வியடைந்ததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.



    இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸிற்காக 2001-ல் இருந்து 2018 வரை 17 சீசனில் விளையாடியுள்ளார். 2017-18 சீசனோடு யுவான்டஸ் அணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜியுடன் ஒரு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    ‘‘பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இணைவது சிறந்த உணர்வாக இருக்கிறது. எனது கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இத்தாலியில் இருந்து வெளியேற இருக்கிறேன்’’ என்றார்.
    ரொனால்டோவிற்கான யுவான்டஸின் 800 கோடி ரூபாய் விருப்பத்தை ஏற்க தயாராகி வருகிறது ரியல் மாட்ரிட். #RealMadrid #CR7
    கால்பந்து போட்டியில் சிறந்த வீரராக திகழ்ந்து வருபவர் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2003 முதல் 2009 வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2009-ல் இருந்து தற்போது வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் தொடரை கைப்பற்றியது.

    ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ இதுவரை 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. ரியல் மாட்ரிட் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2021 வரை இருக்கிறது.

    இருந்தாலும் மெஸ்சியின் சம்பளத்தை விட தன்னுடைய சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் சம்பளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று ரியல் மாட்ரிட் அணியிடம் வலியுறுத்தி வந்தார். வருடத்திற்கு 65 மில்லியன் பவுண்டு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டார். ஆனால், ரியல் மாட்ரிட் 30 மில்லியன் பவுண்டு மட்டுமே வழங்க முடியும் என்று கூறியது. இதை ரொனால்டோ மறுத்துவிட்டார்.

    இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குச் செல்லலாம் என்ற செய்தி வெளியாகிக் கொண்டு வருகிறது.



    இந்நிலையில் இத்தாலி கிளப்பான யுவான்டஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்க இருப்பதாகவும், ரொனால்டோவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே 100 மில்லியன் யூரோவிற்கு (சுமார் 800 கோடி ரூபாய்) யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த தொகைக்கு ரியல் மாட்ரிட் சம்மதம் தெரிவிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகுிறது. இதனால் ரொனால்டோ இந்த சீசனில் யுவான்டஸ் அணிக்காக விளையாட இருக்கிறது. 
    இத்தாலியின் தலைசிறந்த கோல் கீப்பரான பஃபோனுக்குப் பதில் மட்டியா பெரினை ஒப்பந்தம் செய்துள்ளது யுவான்டஸ். #SerieA #Juventus
    இத்தாலி கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் பஃபோன். 40 வயதாகும் கோல் கீப்பரான இவர், ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி தகுதி பெறாததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இத்தாலி நாட்டின் கிளப் அணியான யுவான்டஸ் அணிக்காக 2001-ல் இருந்து விளையாடி வந்தார். இந்த சீசனுடன் (2017-18) யுவான்டஸில் இருந்து விலகியுள்ளார். இதனால் யுவான்டஸ் அணி மாற்று கோல்கீப்பரை தேடிவந்தது.



    இந்நிலையில் ஜெனோவா அணிக்காக விளையாடி வந்த மட்டியா பெரினை யுவான்டஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான யுவுான்டஸ் டிரான்ஸ்பர் பீஸாக 14 மில்லியன் டாலரும், போனஸாக 3 மில்லியன் டாலரும் கொடுத்துள்ளது.

    பஃபோன் தலைமையில் ‘செரி ஏ’ கோப்பையை தொடர்ச்சியாக 7 முறை யுவான்டஸ் கைப்பற்றியுள்ளது. அந்த அணிக்காக 509 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    இத்தாலி லீக் டைட்டிலான செரி ஏ-வை 7-வது முறையாக யுவான்டஸ் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. #SerieA #Juventus
    இத்தாலியில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. 2017-18 ‘செரி ஏ’ சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டைட்டிலை தட்டிச் செல்வதில் யுவான்டஸ், நபோலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

    நேற்று நடைபெற்ற 37-வது லீக்கில் யுவான்டஸ் பலமான ரோமா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதேவேளையில் நபோலி 2-0 என சாம்ப்டோரியாவை வீழ்த்தியது. என்றாலும் யுவான்டஸ் 92 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நபோலி 88 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. கடைசி லீக்கில் தோற்றாலும் யுவான்டஸ் அணிக்கு பிரச்சனை இல்லை என்பதால், ‘செரி ஏ’ டைட்டிலை வெல்வது உறுதியாகிவிட்டது.



    இதன்மூலம் யுவான்டஸ் தொடர்ச்சியாக 7-வது முறை ‘செரி ஏ’ டைட்டிலை வென்று சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் இத்தாலியில் நடைபெறும் கால்பந்து கிளப்பிற்கு இடையிலான கோப்பையையும் வென்றது. இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டு கோப்பையையும் நான்கு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் யுவான்டஸ் பெற்றுள்ளது.
    ×