search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPS officer"

    ஐஏஎஸ் தேர்வில் புளூ டூத் வைத்து காப்பியடித்து கைது செய்யப்பட்ட தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #SafeersKarim
    சென்னை:

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎஸ், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் புளூ டூத் வைத்து காப்பி அடித்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் கையும் களவுமாக பிடிபட்டார். சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். கேரளாவில் அவரது பெயரில் அவருடைய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நடத்துகிறார்.



    காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சபீர் கபீர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணைய  விசாரணைக்கு பின், சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் வரலாற்றில் பதவிநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை ஆகும். #SafeersKarim
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாதியாக மாறி, ஆயுதங்களுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ஷம்சுல் ஹக் என்பவர் கடந்த மே மாதம் காணாமல் போனாதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷம்சுல் ஹக்கை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தபடி, ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் ஷம்சுல் ஹக் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஷம்சுல் ஹக், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் மே மாதம் 22-ம் தேதி இணைந்ததாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இயல்பான ஒன்றாக கருதப்பட்டாலும், ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இளம் பெண்கள் கிரக்கம் கொள்வது போல, ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கிய பெண் ஒருவர் அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்துள்ளார்.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் சச்சின் அதுல்கர். 34 வயதான இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். நல்ல உடற்கட்டுடன் காணப்படும் இவரது புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகமாயினர்.

    சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், பெட்டியை கட்டி 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என ஒற்றக்காலில் நின்ற அந்த பெண்ணை, போலீசார் ரெயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரெயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

    ஆனால், போகும் வழியில் ரெயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, போலீசார் பின்வாங்கினர். என்ன சொல்லியும் அந்த பெண் சமாதானம் ஆக மறுக்கிறார். மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என உள்ளூர் போலீசார் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், “பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும்” என கூறியுள்ளார்.
    ×