search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "travels"

    • அவசரமாக எனக்கு ரூ.5 ஆயிரம் தேவைப்படுகிறது.
    • தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 35).

    டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் பேராவூரணி பகுதியை சேர்ந்த நிஷாந்தினி (30) என்பவர் நான் ஒரு டாக்டர்.

    சென்னைக்கு அவசரமாக செல்ல வேண்டியுள்ளது.

    கார் வாடகைக்கு வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து யோகராஜ் காரில் மேரிஸ் கார்னரில் இருந்து நிசாந்தினியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

    அப்போது நிஷாந்தினி முதலில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார் .

    அதன்படி யோகராஜ் காரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். அங்கு காரை விட்டு இறங்கிய நிஷாந்தினி எனக்கு தெரிந்தவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    அவசரமாக எனக்கு ரூ.5000 தேவைப்படுகிறது.

    அவரை பார்த்துவிட்டு உடனே வந்து விடுவேன்.

    அதன் பிறகு சென்னைக்கு செல்லலாம்.

    செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு செல்போன் செயலி மூலம் உங்களது எண்ணுக்கு பணத்தை திருப்பித் அனுப்பி விடுகிறேன் என யோகராஜிடம் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.

    அதை வாங்கிக் கொண்டு நிசாந்தினி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வது போல் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த யோகராஜ் பல இடங்களில் தேடிப் பார்த்தார்.

    கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்ப ட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இது குறித்த அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நிசாந்தினியை கைது செய்து விசாரித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் நிஷாந்தினி டாக்டர் கிடையாது என்பதும், திருச்சியிலும் ஒருவரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் வேறு எங்காவது இது போல் நூதன முறையில் பண மோசடிகளில் ஈடுபட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இளம் பெண்கள் கிரக்கம் கொள்வது போல, ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கிய பெண் ஒருவர் அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்துள்ளார்.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் சச்சின் அதுல்கர். 34 வயதான இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். நல்ல உடற்கட்டுடன் காணப்படும் இவரது புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகமாயினர்.

    சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், பெட்டியை கட்டி 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என ஒற்றக்காலில் நின்ற அந்த பெண்ணை, போலீசார் ரெயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரெயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

    ஆனால், போகும் வழியில் ரெயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, போலீசார் பின்வாங்கினர். என்ன சொல்லியும் அந்த பெண் சமாதானம் ஆக மறுக்கிறார். மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என உள்ளூர் போலீசார் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், “பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும்” என கூறியுள்ளார்.
    ×