என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் பெண்"

    • மெக்சிகோவை ஆபத்தான வழியில் கடந்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
    • விமானத்தில் எல்சல்வடார் சென்று அங்கிருந்து குவாத்தமாலாவுக்கு ஆபத்தான முறையில் நடந்தே சென்றோம்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

    இந்தியாவை சேர்ந்த 104 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதில் பஞ்சாப்பை சேர்ந்த பெண்ணும் ஒருவர். அவரது பெயர் லவ் பிரீத் கவுர் (வயது30) பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் போலாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக லவ்பிரீத் கவுர் முடிவு செய்தார். இதற்காக இடைத்தரகர் ஒருவர் மூலம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி தனது 10 வயது மகனுடன் சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றார்.

    இதையடுத்து அவர் மகனுடன் அமெரிக்கா சென்ற 25 நாட்களுக்குள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் லவ் பிரீத் கவுர் அதிர்ச்சி அடைந்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது.

    எங்களை அமெரிக்காவுக்கு நேரடியாக அழைத்து செல்வதாக இடைத்தரகர் ஒருவர் தெரிவித்தார். இதை நம்பி நாங்கள் அவரிடம் ரூ. 1 கோடி கொடுத்தோம். எனது கணவர் பணம் அனுப்பி இருந்தார். மேலும் விவசாய நிலத்தை குடும்பத்தினர் அடமானம் வைத்து இந்த பணத்தை திரட்டி கொடுத்தோம்.

    இடைத்தரகர் சொன்னபடி நானும், எனது மகனும் அமெரிக்காவுக்கு புறப்பட்டோம். முதலில் நாங்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றோம். அப்போது எல்லையில் இருந்த அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் விமானம் மூலம் கொலம்பியா அழைத்து செல்லப்பட்டோம். அங்கு 2 வாரங்கள் தங்க வைக்கப்பட்டோம். அதன் பிறகு விமானத்தில் எல்சல்வடார் சென்று அங்கிருந்து குவாத்தமாலாவுக்கு ஆபத்தான முறையில் நடந்தே சென்றோம்.

    அமெரிக்கா சென்ற போது என்னிடம் சிம்கார்டு, காதணிகள், மற்றும் வளையல் போன்ற சிறிய ஆபரணங்களை கூட அதிகாரிகள் கழற்ற சொன்னார்கள்.

    5 நாட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம். எங்களை இடுப்பில் இருந்து கால்கள் வரை சங்கிலியால் கட்டி வைத்து இருந்தனர். கைகளில் விலங்கு போட்டனர். பின்னர் எங்களை எங்கு அழைத்து செல்கிறோம் என எதையும் சொல்லாமல் விமானத்தில் ஏற்றி விட்டனர்.

    இறுதியாக இந்தியாவுக்கு வந்து இறங்கிய போது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இந்தியா வந்து விட்டதாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அறிவித்தனர். இதை கேட்டு என் கனவுகள் எல்லாம் ஒரே நொடியில் நொறுங்கி போனது போல உணர்ந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லவ் பிரீத் கவுர் போல அரியானா மாநிலம் கர்னாலை சேர்ந்த 20 வயது ஆகாஷ் என்பவர் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல ரூ. 72 லட்சம் செலவழித்ததாக கூறி உள்ளார். மெக்சிகோவை ஆபத்தான வழியில் கடந்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இளம் பெண்கள் கிரக்கம் கொள்வது போல, ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கிய பெண் ஒருவர் அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்துள்ளார்.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் சச்சின் அதுல்கர். 34 வயதான இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். நல்ல உடற்கட்டுடன் காணப்படும் இவரது புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகமாயினர்.

    சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், பெட்டியை கட்டி 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என ஒற்றக்காலில் நின்ற அந்த பெண்ணை, போலீசார் ரெயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரெயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

    ஆனால், போகும் வழியில் ரெயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, போலீசார் பின்வாங்கினர். என்ன சொல்லியும் அந்த பெண் சமாதானம் ஆக மறுக்கிறார். மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என உள்ளூர் போலீசார் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், “பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும்” என கூறியுள்ளார்.
    ×