என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » indian economy
நீங்கள் தேடியது "Indian Economy"
உலகின் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #pmmodi #Indianeconomy
புதுடெல்லி:
‘முன்னேறு’ (MOVE) என்னும் தலைப்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் உலகளாவிய முதல் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
‘இந்தியா முன்னேறுகிறது. நமது பொருளாதாரம் முன்னேறுகிறது. உலகின் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறுகிறது. நமது பெருநகரங்களும், நகரங்களும் முன்னேறுகின்றன.
நாம் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கி வருகிறோம். நமது உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேறுகின்றன. துறைமுகங்கள், ரெயில் பாதைகள், விமான நிலையங்கள், சாலைகள் போன்றவற்றை நாம் அதிவேகமாக அமைத்து வருகிறோம்.
பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதிகள் அதிமுக்கியமானது. போக்குவரத்துக்கான வசதிகள் மூலமாக பயணம் செய்யும் சிரமங்களும், சரக்கு போக்குவரத்தில் உள்ள இடையூறுகளும் குறைந்து, பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது.
ஜி.எஸ்.டி. மூலம் நமது சரக்கு போக்குவரத்து மற்றும் பண்டகச்சாலைகளை முறைப்படுத்த முடிகிறது. நமது சரக்குகளும் முன்னேறி கொண்டிருக்கின்றன. நமது சீர்திருத்தங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. தொழில் செய்வதற்கு உகந்த இடமாக இந்தியாவை மாற்றியுள்ளோம். நமது வாழ்க்கை முன்னேறுகிறது.
வீடுகள், கழிப்பறைகள், சமையல் எரிவாயு, வங்கி கணக்குகள் மற்றும் வங்கிக்கடன்கள் மக்களுக்கு கிடைத்து வருகின்றன' என தனது உரையின்போது மோடி குறிப்பிட்டார். #pmmodi #Indianeconomy
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
புதுடெல்லி:
2016-ம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
2016-ம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைவதாக கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டிலிருந்து அது தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேசியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியதாவது:-
இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்ட போதிலும், 2014 ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது.
மக்களிடையே நிலவும் பொருளாதார சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள் என கூறினார்.
2017-18ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Indianeconomy #GDP
புதுடெல்லி :
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும்.
ஆனால், கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான (ஜனவரி- முதல் மார்ச் வரை) ஜிடிபி 7.7 சதவிகிதமாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ப்ளூம்பர்க் நிதி நிறுவனம் கணித்த 7.4 என்ற ஆளவை விட 0.3 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் ஜிடிபி முறையே 5.6 %, 6.3 %, 7.0% என இருந்தது.
கடந்த நிதியாண்டில் நாட்டின், விவசாயம் 4.5 %, உற்பத்தி 9.1 % மற்றும் கட்டுமான துறைகள் 11.5 % என சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதர வளர்ச்சியில் இந்த மூன்று துறைகளும் முக்கிய பங்காற்றியுள்ளதாக புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றம், அலுமினியம் மற்றும் எக்கு பொருட்களுக்கு அமெரிக்க அதிகளவு வரி விதிப்பு, மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 % குறைந்துள்ளது. #Indianeconomy #GDP
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X