search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband wife"

    • இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.
    • வீட்டு வேலைகளில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் அவசியம்.

    திருமண பந்தத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உண்டாகும் ஏமாற்றம், தம்பதிகளை பிரிவு வரை கொண்டு செல்கிறது. இதைத் தவிர்க்க, மணவாழ்க்கையில் இணையப்போகும் இருவரும், திருமணத்திற்கு முன்பே சில விஷயங்களைக் கலந்து பேசி முடிவு செய்து கொள்வது அவசியம். அதில், சிலவற்றை இங்கே காணலாம்.

    குழந்தைகள்: திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் குழந்தைகளை எப்போது பெற்றுக்கொள்வது என்பதில் எந்த முடிவை எடுத்தாலும், அதை தம்பதியாகப் போகும் இருவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களை எப்படி வளர்ப்பது, நெறிப்படுத்துவது? என்பதைப் பற்றிப் பேசி, முடிவு செய்ய வேண்டும். இதில், வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான கருத்து இருவருக்கும் வேண்டும். திருமணத்திற்கு முன்பு இது குறித்து விவாதிப்பது, எதிர்காலத்தை இனிமையாக்கும்.

    நிதி சார்ந்தது:குடும்பத்தின் வளர்ச்சிக்கு பணம் அவசியம். ஒருவரைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவரது பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அதை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் கலந்தாலோசித்து செயல்படலாம்.

    வேலை சார்ந்தது: வீட்டு வேலைகளில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் அவசியம். குடும்பப் பொறுப்புகளைப் பிரித்து செயல்படுவதற்கு இருவரும் தயாராக இருக்க வேண்டும். இதுபற்றி முன்கூட்டியே ஆலோசித்து முடிவு செய்வது, திருமணத்துக்கு பின்பு வாழ்க்கை சுலபமாக செல்வதற்கு வழிவகுக்கும்.

    பழக்கவழக்கம்: இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், அவற்றில் நன்மை தருபவை, இருவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை, எதிர்மறையான பழக்கங்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என அனைத்தையும் பேசி முடிவு செய்ய வேண்டும். இது குறித்து எதிர்காலத்தில் இருவருக்கும் பாதிப்பு வராமல் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும்.

    விருப்பு, வெறுப்புகள்: இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் திருமணத்துக்கு பின்பு ஏற்படும் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.

    அந்தரங்கம்: தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் தனிப்பட்டது. இதில் பிறரின் தலையீடு எப்போதும் இருக்கக்கூடாது. கணவன்-மனைவி இருவருக்குமான தனிப்பட்ட விஷயங்களில் வேறு எந்த நபரையும் நுழைய விடாமல் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இது குறித்து முன்கூட்டியே பேசி முடிவு செய்வது சிறந்தது.

    • கணவன் - மனைவி இடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது.
    • தனி மனித சுதந்திரம், சுய மரியாதை, உரிமை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    கணவன் - மனைவி இடையேயான பரஸ்பர புரிதலை பொறுத்தே திருமண பந்தம் வலுப்படும். இன்பம், துன்பம், துக்கம், சுகம், வெற்றி, தோல்வி போன்ற கலவையான சூழல்களை எப்படி கையாள் கிறார்கள் என்பதை பொறுத்தும் இருவருக்குமிடையேயான உறவு பிணைப்பு கட்டமைக்கப்படும். ஜாதக பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை விட இருவருக்குமிடையே மன பொருத்தம் எப்படி அமைந்திருக்கிறது என்பதில்தான் இல்லறத்தின் இனிமை அடங்கி இருக்கிறது. இருவருடைய குணாதிசயங்களும் ஒத்திருக்க வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் பரிவு, அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தனி மனித சுதந்திரம், சுய மரியாதை, உரிமை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப கணவன் - மனைவி இருவரின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

    மகிழ்ச்சியான தருணமே இல்லறத்திற்கு இனிமை சேர்க்கும். திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்பாராதவிதமாக மகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தால் அதனை இருவரும் உணர்வுப்பூர்வமாக ரசித்து மகிழலாம். அப்போது இந்த மகிழ்ச்சிக்கு யார் காரணம்? என்பது பற்றி விவாதிப்பதில் தவறில்லை. ஆனால் தான் மட்டுமே அதற்கு காரணம் என்ற கர்வம் இருவருக்கும் எழுந்துவிடக்கூடாது. மகிழ்ச்சியான தருணத்தை இருவரும் மன நிறைவோடு அனுபவித்தாலே உறவு வலுப்படத்தொடங்கிவிடும். அதைவிடுத்து, 'தன்னால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது' என்ற எண்ணம் உறவை சிதைத்துவிடும்.

    குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகளைத்தான் தேட வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைக்கு யார் காரணம் என்று சிந்திக்கக்கூடாது. சம்பந்தப்பட்டவரிடம், 'நீ தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். உன்னால்தான் என் நிம்மதியே கெட்டுப்போகிறது' என்று குற்றம் சாட்டுவது கூடாது. அது ஒட்டுமொத்த குடும்ப நிம்மதியையுமே சீர்குலைத்துவிடும்.

    உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது. மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேச வேண்டும். உணர்வுகளை நேர்மையாக வெளிப் படுத்தவும் வேண்டும். அதுதான் துணை மீது நம்பிக்கையை வளர்த்தெடுக்கும். கணவன் - மனைவி இடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது.

    கணவன் - மனைவி இருவரில் யாரேனும் மன குழப்பத்துடனோ, ஏதேனும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்புடனோ இருக்கும்போது ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உடன் இருந்து உதவிகரமாக செயல்பட வேண்டும். இந்த குணாதிசயம்தான் உறவு பாலத்தை வலுவாக்க உதவும்.

    கணவன் - மனைவி இருவருக்குள் 'நான் பெரியவன். நீ சாதாரணமானவன்' என்ற எண்ணம் ஒருபோதும் எழக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், மரியாதை கொடுத்தல் என அனைத்திலும் சமமாக நடந்துகொள்ள வேண்டும். தன்னை மதிப்பு, மரியாதையுடன் நடத்துகிறார் என்ற எண்ணம் துணையின் ஆழ் மனதில் பதிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப கணவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.

    தம்பதியருக்குள் எந்தவொரு சூழலிலும் கருத்து மோதல் எழுந்துவிடக்கூடாது. அன்பும், அக்கறையும், அரவணைப்பும் எப்போதும் பின்தொடர வேண்டும். அவை எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாததாகவும் அமைந்திருக்க வேண்டும். அதுவே உறவை வலுப்படுத்தும்.

    குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போதும், முக்கியமான முடிவுகளை எடுக்கும்போதும் அதில் இருவரின் பங்கீடும் இருக்க வேண்டும். அப்போதுதான் தனக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற எண்ணம் துணையிடம் நிலைத்திருக்கும். இருவரும் சமமாக மகிழ்ச்சியை உணர முடியும். அதைவிடுத்து 'எல்லாமே என்னால்தான் நடக்கிறது. நீ எதுவுமே செய்யவில்லை' என்று கூறுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல உறவையும் சிதைக்க ஆரம்பித்துவிடும்.

    ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தவறு நடப்பது இயல்புதான். அப்படி தவறு நிகழும் பட்சத்தில் அதனை ஒப்புக்கொள்ளும் பக்குவம் இருவரிடமுமே இருக்க வேண்டும். அதுதான் இருவருக்குமிடையே சரியான புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    வீட்டில் மட்டுமல்ல பொது இடங்கள், உறவுகள் கூடும் இடங்களில் துணைக்கு உரிய மதிப்பு, மரியாதையை கொடுக்க வேண்டும். எங்கும் சம உரிமை கொடுப்பதன் மூலம் துணை மீதான மதிப்பும் உயரத்தான் செய்யும். அதனை நினைவில் கொள்ள வேண்டும்.

    வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் ஒரே விதமான மனோ பாவத்துடன் அணுகும் பக்குவம் கொண்டவர்களாக இருவரும் இருக்க வேண்டும். இந்த குணாதிசயம் வாழ்க்கையில் எப்போதும் நிம்மதியை தழைத்தோங்க செய்யும்.

    அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். ஆனால் இரு மனங்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இங்குள்ள வாழ்வியல் முறையும், கலாசாரமும் வேறு வேறு. இங்கே பல்வேறு இனங்கள், பல்வேறு வாழ்க்கை முறையைக் கையாளுகிறார்கள்.

    இவர்கள் பேசும் மொழிகளும் தனித்தனியாக வழங்கி வருகிறது. இந்தியாவில் விடுதலைக்கு முன்பு பலதார மணம் வழக்கமாக இருந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் செய்துகொள்ளவும், சொத்திற்காக வயதானவருக்கு சிறுமியைப் பூப்பெய்தும் முன்பே திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது. அதை தவிர்க்க அரசாங்கம் பெண்களுக்குத் திருமண வயதை பதிநான்காகவும், ஆண்களுக்கு பதினெட்டாகவும் இருந்து நாளடைவில் பெண்ணுக்கு திருமண வயது பதினெட்டாகவும், ஆணுக்கு இருபத்தொன்றாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சமூக அமைப்பைப் பொறுத்தவரை விடுதலைக்கு முன்பு பெண்களுக்கு சமூக உரிமைகள், ஓட்டுரிமை எதுவும் கிடையாது. அதைப்போல கல்வியும் அவர்களுக்கு மறுக்கப் பட்டது. ஆனால் படிப்பிலும், வேலையிலும் பெண்கள் வெகுவாக முன்னேறி சம நிலையை எட்டும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தில் சம படிப்பும், வேலையும் பெண்களுக்கு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. உலகமயமாக்கல் கொள்கை மூலம் அன்னிய வியாபாரிகளை நுழைய வழி கொடுத்துவிட்டதால், மேலை நாட்டுக் கலாசாரத்தை இந்திய கலாசாரம் சுவீகரிக்க ஆரம்பித்தது. தவிரவும் கல்வி கற்று வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அந்தக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு சுயமிழக்கின்றனர்.

    ஆனால் திருமணம் என்று வரும்போது மட்டும் தாய் நாடு, குடும்பம் ஆகியவற்றை முன்னிறுத்தி மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்கின்றனர். மணமான தம்பதியினர் மேலை நாட்டுக் கலாசாரத்தை விரும்ப, இடையே ஏற்படும் முரண் பிரச்சினையாகிறது. பெண்களைச் சமமாக ஏற்க தயங்கும் சமூகத்தில் அவர்கள் படித்ததால் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும், உரிமை கோருகிறார்கள் அல்லது எடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு பழமையில் இருந்து மாறுவதால் வாழ்வில் நெருடலை உண்டாக்குகிறது. அதனால் மணமக்கள் சட்டப்படி பிரிய நினைக்கிறார்கள்.

    விவாகரத்து சட்டத்தின்படி விருப்பமில்லா தம்பதியரை பிரிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சேர்ந்து வாழ சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராயக் கால அவகாசமும், உளவியல் கலந்தாய்வும், சமரச தீர்வு மையமும் அனுப்பி தீர்வாகாத பட்சத்தில் இருவரும் சம்மதித்தால் சேர்ந்து வாழவும், விருப்பமில்லா விட்டால் பிரியவும் தீர்வு செய்யப்படுகிறது. மற்ற சட்டங்களைப் போல விவாகரத்தை கடுமையாக பின்பற்ற இயலாது. காரணம், இதில் மனம் சம்பந்தப்பட்டதால், உறவு சம்பந்தப்பட்ட பந்தமும் தொடர்கிறது குழந்தைகள் வடிவில். குழந்தைகளின் எதிர்காலம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மனப்பிரிவை மேற்கொள்ள இயலும்.



    தம்பதியினரிடையே மனப் பிரிவு ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. மன நோய், பால் வினை நோய், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், முறையற்ற தொடர்பு எனப் பலவகை இருந்தாலும் அண்மைக் காலமாக செல்போன்களின் அசுர வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

    செல்போன் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அதில் வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வழியே எளிதாகப் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவையெல்லாமே முகமறியா மனிதர்களுடன் தொடர்புகொள்ளவும் நட்புகொள்ளவும் வசதி இருக்கிறது. அதில் நிறைய போலி கணக்குகளைத் தொடங்கி நட்பு ஏற்படுத்தி தவறான எண்ணத்துடன் வர வாய்ப்புண்டு. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் தம்பதியர் கவனக்குறைவு ஏற்பட்டால் மூன்றாவது நபர் இடையில் புகுந்து தம்பதியருக்கு குறுக்குச் சுவராய் அமையலாம். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம்.

    கணவன், மனைவிக்கு இடையே சமூக ஊடகங்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். போலி முகங்களால் பிரச்சினை வரலாம். தம்பதிகள் இருவரும் பணிபுரிபவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். செல்போனை எடுத்துக்கொண்டு தனித்தனியாக அமர்ந்து கனவுலகில் சஞ்சரிக்கிறார்கள். மனதாலும், உடலாலும் இணையும் வாய்ப்பு மிகமிகக் குறைவே.

    ‘செல்பி’ போட்டோ எடுத்து, பகிர்ந்து அதை எத்தனை பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்ற சுயமோகம் தம்பதியினரிடையே பிணக்கை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் ஐயம் ஏற்பட்டுவிட்டால் உள்ள பிணைப்பில் தளர்வு ஏற்பட்டு, ஒருவர் மற்றவரை வேவு பார்க்க ஆரம்பிக்க அது முற்றி ‘பாரநோயா’ என்ற மன நோய்க்கு ஆளாகி விவாகரத்து மட்டுமல்ல, தற்கொலை, கொலை செய்யும் அளவுக்குப்போகும். இதற்கான தீர்வை அந்த தம்பதிகளே தான் காணவேண்டும்.

    மனக்கசப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவர்களுக்குள்ளாகவே பேசித் தீர்த்துக்கொள்ளலாம். வழக்கு என்பது ஒரு சட்டபூர்வமான விடுவிப்பு. சமூக பந்தங்களிலிருந்தும், சொத்துரிமை போன்ற உரிமைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவே பயன்படும். அதனால் மருந்து நம் கைவசமே உள்ளது. அதை அளவாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை ருசிக்கும்; இல்லையெனில் கசக்கும்.

    வாழ்க்கையென்பது நம் கலாசாரப்படி ஒரு வாழும் கலை. அதைச் சிதறாது கட்டுக்கோப்பாக கொண்டு செல்வது தம்பதியினரின் கடமை. குடும்ப வாழ்வில் ஒளிவுமறைவின்றி மனம்விட்டுப் பேசுவதும், ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்வதும் தான் வாழ்க்கை எனத் தெளிந்து குடும்பங்களைப் பராமரிப்போம், நற்செல்வங்களைப் பெற்றெடுப்போம்.

    கே.சுப்ரமணியன், வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.

    துணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
    துணையின் தகாத உறவு தெரிய வருவதும், அதை எதிர்கொள்வதும் படு பயங்கரமான அனுபவம். உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்கிற அனுபவமும் கூட துணைக்கு அப்படியொரு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அது உண்மையா, பொய்யா என்கிற மனப்போராட்டத்துக்கு விடை காண்பதே மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும்.

    சிலரது தகாத உறவானது ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடும். அதை உறுதிப்படுத்துகிற ஆதாரங்களும் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த உறவானது துணைக்குத் தெரியாமலே ரகசியமாகத் தொடரும். பத்து, பதினைந்து வருடங்கள் கடந்தும் கூட அது தெரியாமல் வைத்திருக்கப்படுகிற குடும்பங்களும் உள்ளன. அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி துணையிடம் காணப்படுகிற திடீர் நடத்தை மாறுபாடுகள், அவரது பழக்க வழக்கங்களில் தென்படுகிற திடீர் மாற்றங்கள் மற்றும் உறவுகளிடமிருந்தும், விட்டுச் சூழலில் இருந்தும் தனித்து விலகி இருக்கிற மனப்பான்மை போன்றவையே தகாத உறவுக்கான முதல் அறிகுறிகளாக அமையும்.

    கணவன் - மனைவி இருவருமே பிஸியான வேலையில் இருப்பார்கள் என்றாலோ, வேலை அல்லது பிசினஸீக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தாலோ ஒருவருக்கு ஏற்பட்ட தகாத உறவை இன்னோருவரால் அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

    ஒரு சில பெண்களுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்ததும், கணவனுக்கான நேரமும் கவனிப்பும் குறைந்து, மொத்த கவனமும் குழந்தைகள் பக்கம் திரும்பும். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பொறுப்பில், கணவரின் மீதான கவனம் சற்றே பின்னுக்குப் போவதும் இயல்புதான். அந்த மாதிரியான
    சந்தர்ப்பங்களிலும் அவர்களால் கணவருக்குத் திடீரென முளைத்த தேவையற்ற உறவு பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போகலாம்.

    பல நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டார், நண்பர்கள், உடன் வேலை செய்கிறவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என மூன்றாம் நபர்கள் மூலமும் துணையின் தகாத உறவு தெரிய வரும். இதெல்லாம் இருந்தாலும் துணையின் தப்பான உறவைக் காட்டிக் கொடுப்பதில் கணவரின் பேன்ட், ஷர்ட் பாக்கெட்டுகளுக்கும், மனைவியின் ஹேண்ட்பேகுக்குமே முதலிடம் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இ மெயில், அழிக்கப்படாத செல்போன் எஸ்.எம்.எஸ்.., அடிக்கடி ஒரே எண்ணிலிருந்து வந்த போன தொலைபேசி எண்கள் போன்றவையும் இந்த விஷயத்தில் முக்கிய சாட்சிகளாக அமைகின்றன.
    போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான் என்று அதற்கு தீர்வும் கீதை தருகிறது.
    ஒரு முனிவரைப் பார்க்க ஒரு பெண் அழுதுகொண்டே வந்தார். முனிவர் அந்த பெண்ணின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த பெண் “சுவாமி! எனது வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், அதிக துன்பங்கள். அதனால் வாழ்க்கை கஷ்டமாக உள்ளது. எனவே நான் மகிழ்ச்சியாக வாழ வழி கூறுங்கள்” என்றார். அதற்கு முனிவர், ஆகட்டும்! அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்றார் முனிவர். பெண்ணும் சரி என்று தலையசைத்து என்ன நிபந்தனை? என்றார். ஒரு காகிதத்தில் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் எழுதி, அதை இந்த பானைக்குள் போடுங்கள்.

    பிறகு, இந்தப் பானைக்குள் இருக்கிற ஏதாவது ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களைப்போன்றவர்கள் எழுதியிருக்கும் பிரச்சினைகள் இருக்கும். அதை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அந்த பிரச்சினைகளை எளிதில் தீர்த்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றார். உடனே, அந்த பெண் தனது பிரச்சினைகளை எழுதி அந்த பானைக்குள் போட்டுவிட்டு உள்ளே இருந்து மற்றொரு காகிதத்தை எடுத்தார். அதில் பிரச்சினைகள் மிக அதிகமாக இருந்தன. இது வேண்டாமென்று மற்றொரு காகிதத்தை எடுத்தார்.

    அதிலிருந்து பிரச்சினைகள் இவரால் தீர்க்க முடியாததாக இருந்தது. இப்படி தொடர்ந்து அவர் எடுத்துக்கொண்டே வந்தார். ஒவ்வொரு காகிதத்தில் இருந்த பிரச்சினைகளெல்லாம், இவரது பிரச்சினைகளை விட பெரியதாகவும் சிக்கலாகவும் இருந்தது. கடைசியில் மற்றவர்களின் பிரச்சினைகளைவிட தனது பிரச்சினைகளைத் தீர்ப்பதே மேல் என்று நம்பினார். முனிவரிடம் சுவாமி! நான் எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பினார்.

    பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை, இந்த உலகில் இல்லை. பிரச்சினைகள் தான் வாழ்வின் சுவாரசியம். ஒரு மனிதனின் சரியான திறமை பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருக்கிறது. உண்மையான மகிழ்ச்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்தான் உள்ளது.

    ஒரு சிறு பிரச்சினையை கூட, கண்ணுக்கு அருகே வைத்துப் பார்த்தால் அது பெரிதாகத் தெரியும். பிரச்சினைகளை சற்று தூரத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் தெளிவு உண்டாகும். பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தங்களை மாய்த்துக்கொள்வதும், குடும்பத்தோடு தற்கொலை செய்வதும், வாழ்க்கை முழுவதும் வருந்திக்கொண்டே இருப்பதும் என வாழ்க்கையை பலரும் பாழாக்குவது கண்கூடு. குழந்தைகள் படிக்க ஆரம்பிக்கும்போது அவர்களுடைய மொழிப்பாடம் எளிதாக இருக்கும். தீர்வு காணவேண்டிய கணித பாடங்கள் சற்று கடினமாக இருக்கும். கணக்கு கடினம் என்பதற்காக படிக்காமல் விடுவது எத்தகைய அறிவின்மையை தருமோ, அதுபோல பிரச்சினைகளை கையாளவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை நிர்மூலமாக்கிக் கொள்வதும் முட்டாள்தனமே.

    “மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போகச்செய்யும் காலச்சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள் இவையெல்லாம் மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள்” என்கிறது பகவத்கீதை. இதுபோன்ற போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான் என்று அதற்கு தீர்வும் கீதை தருகிறது.

    முதலில் பிரச்சினைகளை அடையாளம் காணவேண்டும். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அதைப் பகுத்தாய்ந்து சிறுசிறு கூறுகளாக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து, அதற்கு சரியான இடம், காலம், ஆள் பார்த்து கொடுத்துவிட்டால், பிரச்சினைகள் எவரிடமும் துவண்டு போகும். எந்தச் சூழ்நிலையிலும் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் பிரச்சினைகளை அணுகுபவர்கள் மனித வாழ்க்கையில் அழகானவர்கள், அற்புதமானவர்கள்.

    நாளிதழ்களில் வருகின்ற புதிர் போட்டிகள், எளிய புதிர் கணக்குகள், குறுக்கெழுத்துப் போட்டிகள், புதிர் விளையாட்டுகள் இவை அனைத்தும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பிரச்சினைகளை தீர்வுகாணும் யுக்தியை கற்றுத்தரும். அந்த புதிர் விளையாட்டுகளை யார் ஒருவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறாரோ, அந்த புதிர்களுக்கு விடை காண்கிறாரோ அவர் வெற்றியாளராக பரிணமிக்கின்றார். சிறிய புதிர்களை கூட கண்டுபிடிப்பதற்கு சலிப்பு கொள்பவர்கள்; அல்லது புதிர் என்றதுமே பயந்து ஓடுபவர்கள் எல்லோரும் பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

    தீர்க்கப்படாத தீர்வுகளே இந்த உலகில் இல்லை. முடிவுகள் தெரியாத பிரச்சினைகள் இந்த உலகில் இல்லை. பிரச்சினைகளைக் கையாளுகின்ற பொழுது, அனைத்து பிரச்சினைக்கும் நடந்த பிரச்சினை இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் இயல்பானது என்ற மனநிலை கொண்டிருந்தால் பிரச்சினைகள் விலகிப்போகும். நமக்கு மட்டும் தான் பிரச்சினைகள் வருகிறது என்று நினைத்தால், பிரச்சினைகள் நம்மை துரத்த ஆரம்பிக்கும்.

    ஒரு திரைப்படத்தின் முடிவினை முன்னரே தெரிந்திருந்தால் அத்தகைய படத்தை பார்க்க யாரும் விரும்புவதில்லை, ஆனால், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சிந்துபாத் கதைகள் அனைவருக்கும் பிடித்துப்போகும். காரணம், அக்கதையில் பல தீர்வுகளைக்காண கதாநாயகன் முற்படுவதால்தான். தனக்குள்ள வாழ்க்கையில், சின்னச் சின்ன முடிச்சுகளோடு சில பிரச்சினைகள் இருக்கவேண்டும். அந்த முடிச்சுகளை அவிழ்க்கத் தெரிந்த மனிதனால்தான் நம்பிக்கையோடு பெரிய சவால்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

    பிரச்சினைகளைச் சமாளித்தால் மனிதன்!! பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டால் தீரன்!!

    ஆர்.திருநாவுக்கரசு,

    துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு
    குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
    குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

    உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

    உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.

    உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.

    முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.

    வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.

    மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.

    ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

    மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.

    கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

    மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

    மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.

    எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

    சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.

    திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.
    கணவன் -மனைவி இடையேயான பிரச்சனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. தம்பதிகளிடையே சரியான புரிதல் இல்லாததே இதற்கெல்லாம் காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.

    திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் வருவது இயல்பு. காரணம், இருவருக்குமான எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக இருக்கும். அவர்கள் இருவரது கனவுகளும் மாறுபட்டதாக இருக்கும். மேலும், வயது குறைவு என்பதால் அனுபவமற்றவர்களாக இருப்பார்கள். இத்தகைய காலகட்டத்தில் இருவரது ஆசையும், எதிர்பார்ப்பும் முழுமையாகப் பூர்த்தியாகும் என்று சொல்லமுடியாது.

    தம்பதிகள் 40 வயதை அடைந்தால் அவர்கள் முதிர்ச்சியடைவதுடன் பக்குவத்துக்கும் வந்துவிடுவார்கள். அதனால், அவர்களிடையே எழும் சிக்கல்களும் குறைந்துபோகும். அதன்பிறகு குழந்தை வளர்ப்பு போன்ற புதிய பொறுப்பு உணர்ச்சிகள் வந்துவிடும். பொறுப்புகள் அதிகமாகும்போது சகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதனால், அந்த நேரத்தில் எழும் பிரச்னைகள் ஆரம்பகாலத்தைவிட ஆழமானதாக இருக்கும்.

    அதன் விளைவாக ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வது அதிகரிக்கும். இந்த மனப்பான்மையால் சிக்கல்கள் இன்னும் தீவிரமாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில் இருவருக்கும் இடையேயான பரஸ்பர புரிதலும், அன்பும் அவசியமாகிறது. அது இல்லாதபோது இதுபோன்ற சிக்கல்கள் தீர்க்க முடியாததாக மாறிவிடும். இதுபோன்ற சூழலில் உளவியல் ஆலோசனை பெறுவதில் தவறில்லை.  

    திருமணமான புதிதில் தம்பதிக்குள் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கும். அங்கே தாம்பத்தியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்போது பிரச்னைகள் இருந்தாலும் தாம்பத்தியம் அதைத் தீர்த்துவிடும். ஆனால், 40 வயதுக்குமேல் முதிர்ச்சி பெற்றுவிடுவதால் தாம்பத்தியம் அதைச் சரிசெய்துவிடும் என்று சொல்லமுடியாது. பலருக்குத் தீவிர சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. இப்போதைய சூழலில் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் தேவைப்படும்.

    இல்லறத்தில் சிக்கல் ஏதும் ஏற்படாமலிருக்கத் தம்பதியருக்கான சில ஆலோசனைகள் அவசியமாகும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

    * தம்பதிக்கிடையே சிக்கல் வந்தால், ஒருவர் மற்றவர் மீது பழிபோட்டு, திருப்தியடையக் கூடாது.  

    *  எந்தவொரு பிரச்னையையும் தம்பதிகள் உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது. அதை அறிவுபூர்வமாக அணுகும் பக்குவத்தையே இருவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    * ஒரு சிக்கல் மற்றொருவரால்தான் வருகிறது என்ற மனப்பான்மை வரக்கூடாது. அதற்கு இருவருமே காரணமாக இருக்கலாம் என்பதை அறியவேண்டியது அவசியம்.

    * சிக்கல்கள் வரும்போது, தான் எந்த வகையில் காரணம் என்பதையும், அதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இருவருமே திறந்த மனதுடன் அணுகவேண்டும்.

    * தம்பதிக்கிடையே எத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டாலும் இருவருக்குமிடையே அன்பும், புரிதலும் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்.

    * இன்றைய சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு அவரது (கணவனோ/மனைவியோ) கேரக்டர் காரணமல்ல, சூழல் காரணமாக அது நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பிரச்னையைப் பொதுமைப்படுத்திப் பேசக்கூடாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும்போது தம்பதியர் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
    கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    மனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    கருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.

    பொதுவாக தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.

    ‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல! அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்!’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேசிய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.

    குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.

    கணவன்- மனைவி இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.

    கணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

    இப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

    - படுக்கை அறை பிரச்சினைகள்.

    - தனிப்பட்ட பலகீனங்கள்.

    - கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.

    - இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.

    - மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.

    - பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.

    - மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.

    இப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.

    முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

    இந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

    மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் இருப்பதற்கு எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...
    மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...

    சைலன்ஸ் என்பது இருமுனை கத்தி போல. சில சமயம் பல சண்டைகள் உண்டாகாமல் தடுக்க காரணமும் சைலன்ஸ் தான். பல சமயம் சண்டைகள் பெரிதாக காரணமாக இருப்பதும் சைலன்ஸ் தான்.

    பெண்கள் வெளியே செல்லும் வேலைகளில் ரெடியாக சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வார்கள். எனவே, அவர்கள் ரெடியாகிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சென்று முடிஞ்சதா? இன்னுமா ரெடி ஆகுற? லேட் ஆகுது என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். காரணம், நீங்கள் கேள்வி, கேட்க, கேட்க பெண்கள் ரெடியாகும் நேரம் மட்டுமல்ல, உங்கள் மீதான க்ரைம் ரெட் கூடிக் கொண்டே போகும்.

    முடிந்த வரை உங்கள் துணையின் அந்த மூன்று நாட்கள் மாதத்தின் எந்த நாளில் வர சாத்தியம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் புருஷ லட்சணம் தான். அல்லது, சென்ற மாதத்தில் உங்கள் மனைவிக்கு எந்த நாளில் பீரியட் ஸ்டார்ட் ஆனது என்பதையாவது மறக்காமல் இருக்க வேண்டும். சிலசமயம் அவர்களே இதை மறக்க வாய்ப்பிருக்கிறது. இது எதுவும் தெரிந்துக் வைத்துக் கொள்ளாமல், திடீரென ஒரு நாள் சென்று அந்த நாள் குறித்த குழப்பமான கேள்விகள் கேட்டால்... நிச்சயம் ஒரு ருத்ரதாண்டவதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.



    எக்காரணம் கொண்டும்... தெரிந்தோ தெரியாமலோ மற்றொரு பெண்ணின் உடல் வாகினை பற்றி புகழ்ந்து பேசுவதோ, விமர்சிப்பதோ வேண்டாம். அது வேறு பெண்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை... உங்கள் துணையின் தோழி, சகோதரி என யாராக இருந்தாலும் சரி... அதனால் வெளிப்படும் கோபம், தாக்கம், விளைவுகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.

    உங்கள் துணைக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது என்றாலோ, அல்லது அவர் சாப்பிட போகும் உணவில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது..., அது அதிகம் சாப்பிட்டால் அது வரும், என்று அவர்கள் ஆசையாக சாப்பிட செல்லும் போது சொல்ல வேண்டாம். சாப்பிட்டு முடித்த பின்னர் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை எடுத்துக் கூறுங்கள்.

    சில சமயம் ஆண்களிடம் வெளிப்படும் கெட்ட பழக்கமே ஒப்பிடுவது தான். ஏதாவது ஆசையாக சமைத்து கொண்டு வந்து கொடுத்தால் நன்றி கூறி சாப்பிட்டு விடுங்கள். அதைவிட்டு... என் அத்தை பொண்ணு நல்லா பண்ணுவா... அம்மா சூப்பரா சமைப்பாங்க... அந்த பிரெண்ட் இதுல எக்ஸ்பர்ட் என்றெல்லாம் வேறு யாருடனாவது ஒப்பீடு செய்தால்.. நாளப்பின்ன உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. ஒருசில நாள் இரவும் பட்டினி போடப்படலாம்.

    கணவன் - மனைவி உறவுல நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு தவறு தான். ஆனா, சின்ன சின்ன எதிர்பார்ப்புகள கூட, இதெல்லாம் நீயே பண்ணிக்க மாட்டியா என்று தட்டி கழிப்பது... அதைவிட பெரும் தவறு. பிறகு எதற்கு காதலன் - காதலி ; கணவன் - மனைவி என்ற உறவு. உண்மையில் நமது உறவினை இணைத்து வைத்திருக்கும் பாலத்தின் ஆரோக்கியம் இந்த சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தான் அடங்கி இருக்கிறது. இதை நாம் செய்ய மறந்துவிட்டால், தவறிவிட்டால்.. அந்த பாலத்தில் நிச்சயம் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு.
    எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
    எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் எத்தனை சதவீதம் தெரியுமா? 91 சதவீதம்!

    ஆண்கள் மீதான பற்று பெண்களுக்கு குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 15 சதவீதம்தான்.

    தங்கள் மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தரவேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம்பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அளவு 94 சதவீதம்.

    கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 35 சதவீதம் மட்டுமே!

    குறைந்தது 6 மாதமாவதுபழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தரவேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். பார்த்ததும் திருமணம், பின்பு அவசர அவசரமாக தேனிலவு போன்றவைகளில் பெண்களுக்கு விருப்பம் இல்லை.

    பழைய காலத்து மாடல் பெண் பார்க்கும் சடங்கில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், ‘இவர்தான் உன் வருங்கால கணவர்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பெரும்பாலான இளம் பெண்கள் சொல்கிறார்கள்.

    தனக்கான வரனை பெற்றோரே முடிவு செய்துவிடக்கூடாது என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள் வரனின் வேலை, சம்பளம், குடும்பம், சொத்து இவைகளைத்தான் பார்க்கிறார்கள். அவைகள் திருப்திபட்டால், அந்த மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்லி விடுகிறார்கள். அவர் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வருவார் என்பது தங்களுக்குத்தான் தெரியும் என்று இளம் பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று, 78 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள்.

    18 சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.



    திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர்கள் விளக்கமாக பதில்சொல்ல முன்வரவில்லை.

    கணவருக்கு வேறு பெண்களோடு இருந்த தொடர்பு பற்றி கேள்வி எழுப்பமாட்டோம் என்று 22 சதவீத பெண்கள் சொல்வது அதிர்ச்சிகலந்த உண்மை.

    பெரும்பாலான பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் திரு மணம் செய்துகொண்டால் போதும் என்று கருத்து தெரிவி்க்கிறார்கள்.

    திருமணத்தில் ஆர்வம் இல்லாத பெண்கள்கூட, ‘திரு மணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம்’ என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    ‘அதுக்கு எதுக்கு ஆடம்பரம்’ என்று என்று சொல்லும் 40 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

    திருமணம் முடிந்த மறுநாளே தூக்கிவீசப்படும் அழைப்பிதழுக்காக நிறைய பணத்தை செலவிடவேண்டியதில்லை. அது ரொம்ப சிம்பிளாக இருந்தால் போதும் என்று 81 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    ‘நீ கன்னித்தன்மை கொண்டவள்தானா?’ என்று வருங்கால கணவர் கேட்டால், பதிலுக்கு அவரிடம் அதே கேள்வியை திரும்பகேட்போம் என்று 14 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். ‘அப்படிப்பட்ட பழமைவாதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று 65 சதவீத பெண்கள் சொல்கிறார்கள்.

    தங்கள் கணவர் சினிமா கதாநாயகன்போல் அழகாக இருக்கவேண்டியதில்லை என்று 64 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

    மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். அளவோடு மது அருந்துபவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று 3 சதவீத பெண்களே சொல்கிறார்கள். இது அருந்துபவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள் என்ற பயம், 93 சதவீத பெண்களிடம் இருக்கிறது.

    (தனியார் நிறுவனம் ஒன்று எடுத்திருக்கும் கருத்துக்கணிப்பு இது)

    காலம் மட்டுமல்ல, காலத்திற்கு ஏற்ப பெண்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களிடம் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றங்களை சமூகம்தான் சரியாக புரிந்துகொள்வதில்லை. திருமணம் இன்னும் பழைய பாணியிலே இருந்துகொண்டிருந்தாலும், திருமணத்தின் கதாநாயகிகளான பெண்களின் மனோநிலை புதிதாக இருக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு, அவர்களது வித்தியாசமான ஆசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
    காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம். #ValentinesDay
    இன்று (பிப்ரவரி 14-ந் தேதி) உலக காதலர் தினம்.

    காதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை காதலைப் பற்றி எழுதப்படாத இலக்கியங்கள் இல்லை. திருக்குறளின் இன்பத்துப்பாலை விட யாரால் காதலை உயர்வாகச் சொல்லிவிட முடியும்?

    தலைவன் தலைவியைப் பார்த்து, யான் நோக்கும் போது நிலம் நோக்குகிறாய், நான் நோக்காத போது நீ எனை நோக்குகிறாய் என்று சொன்னார் வள்ளுவர். அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றாகக் கலப்பதை செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல என்று குறுந்தொகை இலக்கியம் முன்வைத்தது. மகாகவி பாரதி, “உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று சொல்லி, “காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்” என்று பாடினார்.

    சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியாரின் அற்புத வரிகள் தமிழ்க் காதலின் சான்றுகள், தமிழின் அடையாளமாகத் திகழும் தொல்காப்பியம், தமிழரின் வாழ்வை களவு வாழ்க்கை என்றும், கற்பு வாழ்க்கை என்றும் அழகாகப் பிரித்துக்காட்டுகிறது. ஆனால் இன்று காதல் அதே உன்னதத்தோடு இருக்கிறதா? அன்பர்கள் தினம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பிப்ரவரி 14-ந் தேதியை வேலன்டைன் தினம் எனும் காதலர் தினமாக உலகநாடுகள் கொண்டாடத் தொடங்கின. உலகநாடுகள் முழுக்க வாழ்த்து அட்டைகளால் தங்கள் அன்பைத் தெரியப்படுத்தியதைப் பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. வெளிநாடுகளைப் பார்த்து எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், எது உண்மைக் காதல் என்று வரையறுக்காமல் காதலர் தினத்தையும் அப்படியே இறக்குமதி செய்துகொண்டோம்.

    கண்டதும் காதல், வாட்ஸ்-அப் காதல், முகநூல் காதல், டுவிட்டர் காதல், பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு காதல்களாய் உருப்பெற்று ஒரு பிப்ரவரியில் மலர்ந்து, அடுத்த பிப்ரவரியில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று விவாகரத்து மனுவைத் தந்துகொண்டிருக்கும் நிலையைக் கண்டுகொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழும் காதல், வேறுவேறு வடிவங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்து நம் குடும்பங்களைக் கண் எதிரே குலைத்துக் கொண்டிருப்பதை அன்றாடச் செய்தித்தாள்களின் செய்திகளிலிருந்து கண்கூடாய்க் கண்டுகொண்டிருக்கிறோம்.

    இருவரின் மனம் தொடர்பான காதல் இன்று சமூகத்தின் போக்கால் மடைமாற்றம் செய்யப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்படும் கொண்டாட்டச் செய்தியாய் மாறியுள்ளது. தங்க ஊசி கையில் இருக்கிறது என்பதற்காக நம் கண்களைக் குத்திக்கொள்ள முடியுமா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின் பருவத்து பிள்ளைகள் காதலர் தினம் என்ற பெயரில் படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    வீக்கத்தை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள இயலுமா? எது காதல்? எது காதல் இல்லை என்பது பெரும்பாலும் வாழ்வைத் தொலைத்த பின் தான் இருபாலருக்கும் தெரிகிறது. காதல் தோல்விகள் இளையோரின் உயிரைக் குடிக்கும் செயலாக மாறும்போது சமூகம் சங்கடப்படுகிறது. ஒன்றுபட்ட அன்புடைய இரு உள்ளங்கள் கலப்பதை சங்கத்தமிழர்கள் அகம் என்று சொன்னார்கள், அதாவது இருவரின் உள்ளம் சார்ந்த செயல் என்று சொன்னார்கள். ஆனால் காதல் என்ற பெயரில், சம்பந்தமே இல்லாத பெண்களின் வாழ்வில் விளையாடும் கொடூரங்களைக் கண்டபின்னும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இனியும் நம் தமிழ் மண்ணில் நிகழவேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது.



    உலகம் வாழ்த்து அட்டைகளால் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன்னால், தமிழ் மண்ணில் காதலே பூக்கவில்லையா? எல்லாவற்றையும் இலைமறை காயாய் கற்றுத்தந்த மண் தமிழ்மண். எல்லாருக்கும் தெரிய வெளிப்படையாகச் சொல்வதா காதல்? பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன், “பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா! பட்டிக்காட்டுக் காதலுக்குக் கெட்டியான உருவமப்பா” என்று பாடியதை மனம் நினைத்துப் பார்க்கிறது.

    எல்லோர் முன்னிலையிலும் விரும்பவில்லை என்று சொன்னதற்காக முகத்தில் அமிலம் வீசிக் கொல்லப்பட்ட இளம்பெண்களின் வரலாறுகள், தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாள் என்பதற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்களின் இறப்புகள் நம்மை வெகுவாகச் சங்கடப்படுத்துகின்றன. ஏதோவொரு திரைப்படத்தில் வந்துவிட்டது என்பதற்காகத் திரைப்படத்தின் மாய பிம்பங்களைப் போல் தன்னையும் மாற்றிக்கொண்டு தொடர்பே இல்லாத அப்பாவிப் பிள்ளைகளின் வாழ்வை அவர்களின் எதிர்காலத்தை நசுக்கிப் போடுவோரை காதலர் தினம் என்ற பெயரில் ஏன் நாம் கொண்டாடவேண்டும்?

    எதிர்பாலினத்தைக் காதலுக்குரிய பிம்பமாக மட்டும் அறிவார்ந்த சமூகம் பார்க்கவேண்டுமா? ஆண்,பெண் அன்பின் உன்னத அடையாளமாய் திகழ்ந்த காதல் இன்று தடம்மாறி சமூகத்தின் குடும்ப உறவுகளைக் குலைக்கும் அளவு செல்லும் நாளில் அதை நேர்வழிப்படுத்துவது கடமையாகும்.

    மிக நளினமாக இலைமறை காயாய் வெளிப்படுத்தப்பட்ட காதல் இன்று அப்பட்டமாய் பொதுவெளியில் வெளிப்படையாக வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளத்தின் அன்பு காதல், மாசுமருவற்ற பாசம் காதல், எதிர்பாலினத்தை மதிப்பது காதல், செய்யும் தொழிலை நேசிப்பது காதல், அழகு பார்த்து மட்டும் வருவதல்ல காதல், மனதின் உண்மை முகம் பார்த்து வருவதுதான் உண்மைக் காதல்.

    கண்டதே காதல் கொண்டதே கோலம் என்பதல்ல காதல், ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின் வருவதே உண்மைக்காதல். மோதலில் தொடங்கி காதலில் நிறைவுற வாழ்க்கை ஒன்றும் மூன்று மணிநேரத் திரைப்படம் இல்லை. காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உயர்ந்த இல்லறத்தின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம்.

    முனைவர் சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
    கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி சந்தோஷமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. கணவனும்- மனைவியும் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் அந்த சண்டையை அர்த்தத்தோடு போட்டால் அதுவும் சந்தோஷம் தரத்தான் செய்யும். அப்படி சந்தோஷத்திற்காக சண்டைபோடுவது எப்படி என்று பார்ப்போமா!

    சண்டைபோடும்போது இருவருமே உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது. உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் நியாயமான முறையில் அந்த சண்டை நடக்கும். அப்போது வார்த்தைகள் தடித்துப்போகாமல் தரமானதாக இருக்கும். தரமான வார்த்தை களால் சண்டைபோடும்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் கோபதாபங்கள் எல்லாம் வார்த்தைகளில் வெளியேறி, மனம் இலகுவாகிவிடும். அது பின்பு இருவரும் அதிக மகிழ்ச்சியோடு கூடிக்களிக்கும் சூழலை உருவாக்கும்.

    ஆனால் உண்மையில் 95 சதவீத தம்பதிகளுக்கு சரியான முறையில் சண்டைபோடத் தெரிவதில்லை. சண்டை என்றாலே தன்னிலை மறந்து கண்டபடி வார்த்தைகளை பிரயோகித்துவிடுகிறார்கள். அது ஆபத்தான, அபத்தமான சண்டையாகி உறவுகளை பாதிக்கும் நிலைக்குசென்றுவிடும்.

    சண்டை நமக்கு புதிதில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பத்தில் யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்குப் பிடிக்காத யாரேனும் நம்மை ஏதாவது சொன்னால் உடனே கொந்தளித்து, அவரைப் பழிக்குப்பழி பேசித் தீர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். அப்படியொரு நேரம் வரும்போது கண்டபடி பேசி, பழியைத் தீர்த்துவிடுவோம். இந்த வழியை சிறுவயதில் இருந்தே கடைப்பிடித்து பழக்கப்பட்டுவிட்ட நம்மில் பலர் திருமணத்திற்கு பிறகும் அதே வழிமுறையைத்தான் தொடர்கிறோம். சிலர் தொடர்ந்து சண்டையிட்டு, கோபத்திற்கே அடிமையாகிவிடுகிறார்கள். குடிக்கு அடிமையானவர்கள் சிறிதளவாவது குடித்தால்தான் மன அமைதி அடைவார்கள். அதுபோல் சண்டைக்கு அடிமையானவர்கள் தினமும் யாரிடமாவது, சிறிது நேரமாவது சண்டையிட்டால்தான் மன அமைதிபெறுவார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு அமைதியாக இருப்பதுதான் நல்லது.

    கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

    * சண்டையின்போது உணர்ச்சிவசப்படாதீர்கள். நிதானமாக நீங்கள் சொல்ல நினைக்கிற விஷயங்களை துணையை குற்றம்சாட்டாமல் சொல்லுங்கள்.

    * சண்டையின் அனைத்து அம்சங்களுக்கும் துணைதான் காரணம் என்று முடிவுசெய்துவிட்டு கோபங்களை கொட்டவேண்டாம். அப்படி யாராவது ஒருவரை முடிவுசெய்துவிட்டு சண்டைபோட்டால், அந்த சண்டை மேலும் சிக்கலாக்கிவிடும். எப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்துவிடவேண்டாம்.

    * சண்டை தொடங்கும்போது அந்த சூழலை கருத்தில்கொள்ளுங்கள். நிதானமில்லாமல் உணர்ச்சிவசப் பட்டுவிடுவோம் என்று நினைத்தால், அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள். உங்கள் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடங்கும்வரை காத்திருங்கள். அமைதியான பிறகு பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். ஆனால், தம்பதியர் பலருக்கும் பிரச்சினையை ஆறப்போட மனதே வராது. உடனுக்குடன் உண்டு இல்லை என ஒரு கை பார்த்தால் தான் அடுத்த வேலையே ஓடும். இதனால் உங்கள் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன், வாக்குவாதத்தில் உங்கள் உறவுகளும் நடத்தையும் கூட கொச்சைப்படுத்திப் பேசப்படலாம். இதுதான் சண்டையின் மிக மோசமான கட்டமாகும்.



    * எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது என்ற மன நிலையில் இருந்து மாறுங்கள். அது உங்களை மட்டுமல்ல, உங்கள் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும்.

    * பிரச்சினை அதிகரித்து விவாகரத்து செய்துகொண்டவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியை வாக்குவாதம் செய்தே கழித்திருப்பார்கள். சாதாரண விஷயத்தைக்கூட பூதாகரமாக்கி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியபடியே வாழ்ந்திருப்பார்கள். விவாகரத்து ஆன பின்பும் ஒருவரை ஒருவர் விமர் சித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

    * சண்டை ஆரம்பித்ததும் பதிலுக்கு பதில் என்ற மனோ பாவத்தில் இருக்கவேண்டாம். அந்த மனோபாவத்தில் இருந்தால் வார்த்தைப்போர் வெடித்து தீர்க்க முடியாத நெருக்கடியில் கொண்டுபோய்விட்டுவிடும்.

    * சண்டையை மனைவி ஆரம்பித்தால், அவரது மனோநிலையில் இருந்து அதை பாருங்கள். அவர் தரப்பு நியாயம், கோபம் என எல்லாவற்றையும் அவரது இடத்தில் இருந்து யோசித்தால், சண்டைக்கான பின்னணி புரியும். சண்டை உடனே நின்று சமாதானமாகிவிடவும் வாய்ப்பு உண்டு.

    * நல்ல சண்டை என்பது எப்போதாவது தான் நடக்கும். அது உறவுகளைக் கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ செய்யாது. அது பிரச்சினைகளை தீர்க்கப்பயன்படும்.

    * நல்ல சண்டையில் பக்குவம் இருக்கும். அதில் உங்கள் உணர்வுகளை முன்னிறுத்திப் பேசுவீர்கள். அதுவே மோசமான சண்டை என்றால், ‘நடந்த எல்லாவற்றுக்கும் நீதானே காரணம். உன்னால்தான் எனக்கு இத்தனை பிரச்சினை...நீ மோசம்...உன் போக்கே சரியில்லை’ என துணையின் மீது குற்றங்களை அடுக்குவீர்கள். அது பிரச்சினையை கூடுதலாக்கிவிடும்.

    * நல்ல சண்டையில் நிம்மதி கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயம் இருக்கும். மோசமான சண்டை அழுகை, கத்துதல், வீட்டைவிட்டு வெளியேறுதல்.. போன்று மோசமான சூழலை உருவாக்கும்.

    * கணவன்- மனைவி இருவரும் முடிந்த அளவுக்கு சண்டைகளில் இருந்து விலகி இருக்கப்பாருங்கள். அடிக்கடி எந்த விஷயங்களுக்குச் சண்டைகள் வருகின்றன என யோசியுங்கள். கோபமில்லாமல் அவைகளை பற்றி பேசி திருத்தப்பாருங்கள். சண்டை போட்டாலும், அதை மறந்துவிட்டு சமாதானம் பேச முன்வாருங்கள். அன்பை போட்டிப்போட்டு வழங்க, அதிலும் சண்டையிட்டால் அதுதான் நல்ல சண்டை.
    ×