search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couples fight"

    துணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
    துணையின் தகாத உறவு தெரிய வருவதும், அதை எதிர்கொள்வதும் படு பயங்கரமான அனுபவம். உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்கிற அனுபவமும் கூட துணைக்கு அப்படியொரு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அது உண்மையா, பொய்யா என்கிற மனப்போராட்டத்துக்கு விடை காண்பதே மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும்.

    சிலரது தகாத உறவானது ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடும். அதை உறுதிப்படுத்துகிற ஆதாரங்களும் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த உறவானது துணைக்குத் தெரியாமலே ரகசியமாகத் தொடரும். பத்து, பதினைந்து வருடங்கள் கடந்தும் கூட அது தெரியாமல் வைத்திருக்கப்படுகிற குடும்பங்களும் உள்ளன. அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி துணையிடம் காணப்படுகிற திடீர் நடத்தை மாறுபாடுகள், அவரது பழக்க வழக்கங்களில் தென்படுகிற திடீர் மாற்றங்கள் மற்றும் உறவுகளிடமிருந்தும், விட்டுச் சூழலில் இருந்தும் தனித்து விலகி இருக்கிற மனப்பான்மை போன்றவையே தகாத உறவுக்கான முதல் அறிகுறிகளாக அமையும்.

    கணவன் - மனைவி இருவருமே பிஸியான வேலையில் இருப்பார்கள் என்றாலோ, வேலை அல்லது பிசினஸீக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தாலோ ஒருவருக்கு ஏற்பட்ட தகாத உறவை இன்னோருவரால் அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

    ஒரு சில பெண்களுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்ததும், கணவனுக்கான நேரமும் கவனிப்பும் குறைந்து, மொத்த கவனமும் குழந்தைகள் பக்கம் திரும்பும். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பொறுப்பில், கணவரின் மீதான கவனம் சற்றே பின்னுக்குப் போவதும் இயல்புதான். அந்த மாதிரியான
    சந்தர்ப்பங்களிலும் அவர்களால் கணவருக்குத் திடீரென முளைத்த தேவையற்ற உறவு பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போகலாம்.

    பல நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டார், நண்பர்கள், உடன் வேலை செய்கிறவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என மூன்றாம் நபர்கள் மூலமும் துணையின் தகாத உறவு தெரிய வரும். இதெல்லாம் இருந்தாலும் துணையின் தப்பான உறவைக் காட்டிக் கொடுப்பதில் கணவரின் பேன்ட், ஷர்ட் பாக்கெட்டுகளுக்கும், மனைவியின் ஹேண்ட்பேகுக்குமே முதலிடம் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இ மெயில், அழிக்கப்படாத செல்போன் எஸ்.எம்.எஸ்.., அடிக்கடி ஒரே எண்ணிலிருந்து வந்த போன தொலைபேசி எண்கள் போன்றவையும் இந்த விஷயத்தில் முக்கிய சாட்சிகளாக அமைகின்றன.
    குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
    குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

    உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

    உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.

    உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.

    முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.

    வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.

    மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.

    ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

    மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.

    கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

    மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

    மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.

    எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

    சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.

    திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.
    கணவன் -மனைவி இடையேயான பிரச்சனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. தம்பதிகளிடையே சரியான புரிதல் இல்லாததே இதற்கெல்லாம் காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.

    திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் வருவது இயல்பு. காரணம், இருவருக்குமான எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக இருக்கும். அவர்கள் இருவரது கனவுகளும் மாறுபட்டதாக இருக்கும். மேலும், வயது குறைவு என்பதால் அனுபவமற்றவர்களாக இருப்பார்கள். இத்தகைய காலகட்டத்தில் இருவரது ஆசையும், எதிர்பார்ப்பும் முழுமையாகப் பூர்த்தியாகும் என்று சொல்லமுடியாது.

    தம்பதிகள் 40 வயதை அடைந்தால் அவர்கள் முதிர்ச்சியடைவதுடன் பக்குவத்துக்கும் வந்துவிடுவார்கள். அதனால், அவர்களிடையே எழும் சிக்கல்களும் குறைந்துபோகும். அதன்பிறகு குழந்தை வளர்ப்பு போன்ற புதிய பொறுப்பு உணர்ச்சிகள் வந்துவிடும். பொறுப்புகள் அதிகமாகும்போது சகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதனால், அந்த நேரத்தில் எழும் பிரச்னைகள் ஆரம்பகாலத்தைவிட ஆழமானதாக இருக்கும்.

    அதன் விளைவாக ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வது அதிகரிக்கும். இந்த மனப்பான்மையால் சிக்கல்கள் இன்னும் தீவிரமாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில் இருவருக்கும் இடையேயான பரஸ்பர புரிதலும், அன்பும் அவசியமாகிறது. அது இல்லாதபோது இதுபோன்ற சிக்கல்கள் தீர்க்க முடியாததாக மாறிவிடும். இதுபோன்ற சூழலில் உளவியல் ஆலோசனை பெறுவதில் தவறில்லை.  

    திருமணமான புதிதில் தம்பதிக்குள் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கும். அங்கே தாம்பத்தியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்போது பிரச்னைகள் இருந்தாலும் தாம்பத்தியம் அதைத் தீர்த்துவிடும். ஆனால், 40 வயதுக்குமேல் முதிர்ச்சி பெற்றுவிடுவதால் தாம்பத்தியம் அதைச் சரிசெய்துவிடும் என்று சொல்லமுடியாது. பலருக்குத் தீவிர சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. இப்போதைய சூழலில் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் தேவைப்படும்.

    இல்லறத்தில் சிக்கல் ஏதும் ஏற்படாமலிருக்கத் தம்பதியருக்கான சில ஆலோசனைகள் அவசியமாகும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

    * தம்பதிக்கிடையே சிக்கல் வந்தால், ஒருவர் மற்றவர் மீது பழிபோட்டு, திருப்தியடையக் கூடாது.  

    *  எந்தவொரு பிரச்னையையும் தம்பதிகள் உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது. அதை அறிவுபூர்வமாக அணுகும் பக்குவத்தையே இருவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    * ஒரு சிக்கல் மற்றொருவரால்தான் வருகிறது என்ற மனப்பான்மை வரக்கூடாது. அதற்கு இருவருமே காரணமாக இருக்கலாம் என்பதை அறியவேண்டியது அவசியம்.

    * சிக்கல்கள் வரும்போது, தான் எந்த வகையில் காரணம் என்பதையும், அதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இருவருமே திறந்த மனதுடன் அணுகவேண்டும்.

    * தம்பதிக்கிடையே எத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டாலும் இருவருக்குமிடையே அன்பும், புரிதலும் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்.

    * இன்றைய சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு அவரது (கணவனோ/மனைவியோ) கேரக்டர் காரணமல்ல, சூழல் காரணமாக அது நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பிரச்னையைப் பொதுமைப்படுத்திப் பேசக்கூடாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும்போது தம்பதியர் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
    கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    மனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    கருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.

    பொதுவாக தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.

    ‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல! அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்!’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேசிய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.

    குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.

    கணவன்- மனைவி இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.

    கணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

    இப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

    - படுக்கை அறை பிரச்சினைகள்.

    - தனிப்பட்ட பலகீனங்கள்.

    - கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.

    - இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.

    - மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.

    - பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.

    - மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.

    இப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.

    முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

    இந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

    கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி சந்தோஷமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. கணவனும்- மனைவியும் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் அந்த சண்டையை அர்த்தத்தோடு போட்டால் அதுவும் சந்தோஷம் தரத்தான் செய்யும். அப்படி சந்தோஷத்திற்காக சண்டைபோடுவது எப்படி என்று பார்ப்போமா!

    சண்டைபோடும்போது இருவருமே உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது. உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் நியாயமான முறையில் அந்த சண்டை நடக்கும். அப்போது வார்த்தைகள் தடித்துப்போகாமல் தரமானதாக இருக்கும். தரமான வார்த்தை களால் சண்டைபோடும்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் கோபதாபங்கள் எல்லாம் வார்த்தைகளில் வெளியேறி, மனம் இலகுவாகிவிடும். அது பின்பு இருவரும் அதிக மகிழ்ச்சியோடு கூடிக்களிக்கும் சூழலை உருவாக்கும்.

    ஆனால் உண்மையில் 95 சதவீத தம்பதிகளுக்கு சரியான முறையில் சண்டைபோடத் தெரிவதில்லை. சண்டை என்றாலே தன்னிலை மறந்து கண்டபடி வார்த்தைகளை பிரயோகித்துவிடுகிறார்கள். அது ஆபத்தான, அபத்தமான சண்டையாகி உறவுகளை பாதிக்கும் நிலைக்குசென்றுவிடும்.

    சண்டை நமக்கு புதிதில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பத்தில் யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்குப் பிடிக்காத யாரேனும் நம்மை ஏதாவது சொன்னால் உடனே கொந்தளித்து, அவரைப் பழிக்குப்பழி பேசித் தீர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். அப்படியொரு நேரம் வரும்போது கண்டபடி பேசி, பழியைத் தீர்த்துவிடுவோம். இந்த வழியை சிறுவயதில் இருந்தே கடைப்பிடித்து பழக்கப்பட்டுவிட்ட நம்மில் பலர் திருமணத்திற்கு பிறகும் அதே வழிமுறையைத்தான் தொடர்கிறோம். சிலர் தொடர்ந்து சண்டையிட்டு, கோபத்திற்கே அடிமையாகிவிடுகிறார்கள். குடிக்கு அடிமையானவர்கள் சிறிதளவாவது குடித்தால்தான் மன அமைதி அடைவார்கள். அதுபோல் சண்டைக்கு அடிமையானவர்கள் தினமும் யாரிடமாவது, சிறிது நேரமாவது சண்டையிட்டால்தான் மன அமைதிபெறுவார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு அமைதியாக இருப்பதுதான் நல்லது.

    கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

    * சண்டையின்போது உணர்ச்சிவசப்படாதீர்கள். நிதானமாக நீங்கள் சொல்ல நினைக்கிற விஷயங்களை துணையை குற்றம்சாட்டாமல் சொல்லுங்கள்.

    * சண்டையின் அனைத்து அம்சங்களுக்கும் துணைதான் காரணம் என்று முடிவுசெய்துவிட்டு கோபங்களை கொட்டவேண்டாம். அப்படி யாராவது ஒருவரை முடிவுசெய்துவிட்டு சண்டைபோட்டால், அந்த சண்டை மேலும் சிக்கலாக்கிவிடும். எப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்துவிடவேண்டாம்.

    * சண்டை தொடங்கும்போது அந்த சூழலை கருத்தில்கொள்ளுங்கள். நிதானமில்லாமல் உணர்ச்சிவசப் பட்டுவிடுவோம் என்று நினைத்தால், அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள். உங்கள் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடங்கும்வரை காத்திருங்கள். அமைதியான பிறகு பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். ஆனால், தம்பதியர் பலருக்கும் பிரச்சினையை ஆறப்போட மனதே வராது. உடனுக்குடன் உண்டு இல்லை என ஒரு கை பார்த்தால் தான் அடுத்த வேலையே ஓடும். இதனால் உங்கள் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன், வாக்குவாதத்தில் உங்கள் உறவுகளும் நடத்தையும் கூட கொச்சைப்படுத்திப் பேசப்படலாம். இதுதான் சண்டையின் மிக மோசமான கட்டமாகும்.



    * எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது என்ற மன நிலையில் இருந்து மாறுங்கள். அது உங்களை மட்டுமல்ல, உங்கள் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும்.

    * பிரச்சினை அதிகரித்து விவாகரத்து செய்துகொண்டவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியை வாக்குவாதம் செய்தே கழித்திருப்பார்கள். சாதாரண விஷயத்தைக்கூட பூதாகரமாக்கி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியபடியே வாழ்ந்திருப்பார்கள். விவாகரத்து ஆன பின்பும் ஒருவரை ஒருவர் விமர் சித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

    * சண்டை ஆரம்பித்ததும் பதிலுக்கு பதில் என்ற மனோ பாவத்தில் இருக்கவேண்டாம். அந்த மனோபாவத்தில் இருந்தால் வார்த்தைப்போர் வெடித்து தீர்க்க முடியாத நெருக்கடியில் கொண்டுபோய்விட்டுவிடும்.

    * சண்டையை மனைவி ஆரம்பித்தால், அவரது மனோநிலையில் இருந்து அதை பாருங்கள். அவர் தரப்பு நியாயம், கோபம் என எல்லாவற்றையும் அவரது இடத்தில் இருந்து யோசித்தால், சண்டைக்கான பின்னணி புரியும். சண்டை உடனே நின்று சமாதானமாகிவிடவும் வாய்ப்பு உண்டு.

    * நல்ல சண்டை என்பது எப்போதாவது தான் நடக்கும். அது உறவுகளைக் கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ செய்யாது. அது பிரச்சினைகளை தீர்க்கப்பயன்படும்.

    * நல்ல சண்டையில் பக்குவம் இருக்கும். அதில் உங்கள் உணர்வுகளை முன்னிறுத்திப் பேசுவீர்கள். அதுவே மோசமான சண்டை என்றால், ‘நடந்த எல்லாவற்றுக்கும் நீதானே காரணம். உன்னால்தான் எனக்கு இத்தனை பிரச்சினை...நீ மோசம்...உன் போக்கே சரியில்லை’ என துணையின் மீது குற்றங்களை அடுக்குவீர்கள். அது பிரச்சினையை கூடுதலாக்கிவிடும்.

    * நல்ல சண்டையில் நிம்மதி கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயம் இருக்கும். மோசமான சண்டை அழுகை, கத்துதல், வீட்டைவிட்டு வெளியேறுதல்.. போன்று மோசமான சூழலை உருவாக்கும்.

    * கணவன்- மனைவி இருவரும் முடிந்த அளவுக்கு சண்டைகளில் இருந்து விலகி இருக்கப்பாருங்கள். அடிக்கடி எந்த விஷயங்களுக்குச் சண்டைகள் வருகின்றன என யோசியுங்கள். கோபமில்லாமல் அவைகளை பற்றி பேசி திருத்தப்பாருங்கள். சண்டை போட்டாலும், அதை மறந்துவிட்டு சமாதானம் பேச முன்வாருங்கள். அன்பை போட்டிப்போட்டு வழங்க, அதிலும் சண்டையிட்டால் அதுதான் நல்ல சண்டை.
    விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
    பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

    எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

    மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.



    கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

    கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

    பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள். எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கும் தம்பதிகளை பிரித்துவிடுகிறது. இளம் பெண்கள், காதலால் கற்பிழப்பது, தற்கொலை செய்வது, மானபங்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வேடிக்கையாய் வெளியிடும் புகைப்படங்களும், விமர்சனங்களும்கூட கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை வளர்த்து, விவாகரத்து வரை கொண்டுபோய்விடுகிறது.

    அமெரிக்காவில் 20 சதவீத விவாகரத்திற்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது 5 விவாகரத்துகளில் ஒன்று சமூக வலைத்தள பிரச்சினையால் உருவானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் வெளியாவதில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தினால் இந்திய விவாகரத்து சதவீதம் இதையும் மிஞ்சும் என்று கூறலாம்.

    ஏனெனில் இங்கு சமூகவலைத்தளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எவை, எவை அச்சுறுத்தலாக மாறும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சகஜமாக, விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். செல்போன் எண்கள், உண்மையான முகவரி முதல் தங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு பதிவிடுகிறவர்களும் உண்டு. எல்லோரும் தொடர்புகொள்ளும் விதத்தில் இணைய பக்கத்தை வைத்திருப்பவர்கள் தங்களை அறியாமலே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் நுழைவார்கள் என்ற விழிப்புணர்வு கொண்ட பெண்கள்கூட, வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நமக்கு அறிமுகமுள்ள, நம்மை அறிந்தவர்கள்தானே நமது வாட்ஸ் ஆப் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சினையை வரவழைத்துக் கொள்கிறார்கள். புகைப்படங்கள் நண்பர் மூலமாகவோ, பகிர்தல் மூலமாகவோ, குழு மூலமாகவோ மற்றவர்களுக்குச் செல்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    சமூக இணையதளங்கள் வந்ததில் இருந்து அறிமுகமில்லாத புதிய நட்பால் கற்பை இழந்தவர்கள், நகை, பணம் இழந்தவர்கள், மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் என உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதி காவல் நிலையம் செல்லாமல், வலைத்தள கணக்கை மூடிவிட்டு, செல்போன் எண்களை மாற்றிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.



    விவாகரத்திற்கு வழிவகுத்த தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்த சமூக வலைத்தளங்கள் எவை என்பது பற்றி அமெரிக்காவில் ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில் 66 சதவீதம் பேர் பேஸ்புக்கை குறிப்பிட்டுள்ளனர். மை ஸ்பேஸ் தளம் 15 சதவீதமும், டுவிட்டர் 5 சதவீதமும் பாதிப்புக்கு துணையிருந்ததாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கூறி உள்ளனர்.

    மனைவி படுக்கை அறைக்கு வந்தபிறகு, கணவர் தன்னுடைய நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் சமூகவலைத்தளம் வழியாக உரையாடுவது மனைவிமார்களை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. அதே நேரம் மனைவி தனது நெருங்கிய வட்டத்துடன் சமூகவலைத்தளங்களில் உறவாடும்போது, கணவர் இன்னும் ஆக்ரோஷம் காட்டுவதும், சந்தேகம் அடைவதும் அதிகரித்து பிரச்சினைக்கு வழிவகுத்துவிடுகிறது.

    வாட்ஸ் ஆப் வலைத்தளம் வந்தபிறகு இந்த பிரிவுகளும், உறவு மோதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இந்த தளத்தில் ஒருவர் எப்போது செய்தியை பார்த்தார் என்பதை அறிய முடியும் என்பதால் அன்புக்குரியவர், தான் அனுப்பிய தகவலைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பதை கணித்து அதையும் பிரச்சினை யாக்கிவிடுகிறார்கள். ‘ஆன்லைனில் இருந்துகொண்டு தன் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கிறாரே, நீண்ட நேரம் யாருடன் உரையாடிக் கொண்டிருப்பார்?’ என்பது போன்ற கேள்விகளும், சிந்தனைகளும் நிறைய குடும்பங்களில் சந்தேக விதைகளைத் தூவுகின்றன.

    கடைசியாக எப்போது வாட்ஸ் ஆப்பை திறந்தார் என்ற நேரத்தை கணிக்க முடிவதால், இரவு வெகுநேரம் கழித்து இணையத்தை திறக்கும் கணவர் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழலை உருவாக்குகிறது. நாம் தூங்கிய பிறகு யாரிடம் உரையாடினார், என்ன பேசியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், சந்தேகமும் பிரச்சினைக்கு அடித்தளமிடுகிறது.

    நண்பர்கள், தோழிகள், காதலிகளின் புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்தாலோ அல்லது பாராட்டி எழுதினாலோ அதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கும், இவருக்கும் என்ன உறவு? என்ற சந்தேக கண்ணோட்டத்துடன் சிலர் பின்தொடர தொடங்குகிறார்கள். அது மோசமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா சென்றது, விழாக்களில் பங்கேற்றது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் அதுவும் பிற்காலத்தில் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.



    விழாவில் தோழியுடன் எடுத்த படத்தைக் காட்டி அவள் யார்? என்று விசாரிக்கும் மனைவிமார்கள் உண்டு. அடுத்து அவளை எப்போதெல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் காட்டுவார்கள், அல்லது அதையே சந்தேக நோக்குடன் பார்ப்பார்கள். அடுத்து அலுவலக மீட்டிங் என்றோ, விழா என்றோ கூறினால் அந்த தோழியும் இடம்பெறுவாளா என்று நோட்டமிடுவார்கள். இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

    கணவரின் பேஸ்புக், டுவிட்டர் பாஸ்வேர்டுகள் தங்களுக்கும் தெரியவேண்டும் என்று விரும்பும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலும் இணையதள பிரச்சினைகளை அறிந்தவர்கள் கணவரின் கணக்கையே தனது கணக்காக பயன்படுத்துவதும் உண்டு. அப்படியிருக்கும்போது நண்பன் என நினைத்து அவருடைய மனைவியிடம் உறவாடும் ஆண் நண்பர்கள், ரகசியங்களை பகிர்ந்து கொண்டு சிக்கலை கிளப்பியிருக்கிறார்கள். மனைவியின் தோழிகளுடன் நட்பு பாராட்டி, அதனால் மனைவியின் கோபத்துக்கு ஆளான ஆண்களும் இருக்கிறார்கள்.

    வலைத்தளங்களில் ஞாபகப்படுத்தும் விதமாக பழைய புகைப்படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து காண்பிக்கும் வசதி உண்டு. அப்போது பழைய தோழிகள், பழைய ஆண் நண்பர்களைப் பற்றிய புகைப்படத்தை கணவரோ, மனைவியோ பார்க்கும் சூழல் ஏற்பட்டதால், சிலரது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. தற்கால விவாகரத்து வழக்குகளின்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்கள், வலைத்தள புகைப்படங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன. விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கேட்ட பெண்கள், விவாகரத்திற்குப் பிறகு, கணவர் சுற்றுலா சென்றது, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களைக் காட்டி, அதிக சம்பாத்தியம் இருப்பதாக கூறி ஜீவனாம்சத்திற்கும், குழந்தை பராமரிப்பிற்கும் கூடுதல் தொகை கேட்ட முறையீடுகளும் நிகழ்ந்துள்ளன.

    குழந்தைகளை தாங்கள்தான் பராமரிப்போம் என்று கூறி குழந்தையை தன்வசம் வைத்துக் கொண்ட தாய், வேலைக்குச் சென்று தாமதமாக வருவதையும், பார்ட்டிகளில் கலந்து கொண்டதையும், அப்போது மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதையும் வலைத்தளங்களில் அறிந்து கொண்டு, அவற்றை காரணம் காட்டி, குழந்தை மீது அதிக அக்கறை காட்டாதவர் என்று கூறி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டும் மேலைநாடுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    எனவே சாதாரண விஷயங்களும், சமூக வலைத்தளங்களால் பிரச்சினைக்குரியதாக மாறும் அபாயம் நிறைய உண்டு. எனவே திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, விவாகரத்து ஆனாலும் சரி, இணையதளம் என்றால் எச்சரிக்கை அவசியம். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை மற்றவர் ரசிக்கும் வேடிக்கைக் களமாக மாறிவிடும். 
    “வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?...
    “வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?...

    ஆண்கள் எப்போதும் தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் குடும்பத்தினரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் குடும்பத்தில் இருந்துதான் நிராகரிக்கப்பட்டதாக கருதுகிறார்கள். தனிமை உணர்வு அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. இப்படிப்பட்ட மனநிலை எல்லா ஆண்களுக்கும் உண்டு.

    ‘இந்தக் குடும்பத்தின் முக்கிய நிர்வாகி நான்தான். என்னால் தான் குடும்பத்தின் வரவு, செலவு அனைத்தும் நடக்கிறது. இந்த குடும்பத்திற்கே நான் தான் பாதுகாப்பு. நான் தான் தலைவன். அதனால் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த எதிர்பார்ப்பு எல்லை மீறிப் போய்விடக் கூடாது. மற்றவர்கள் வருந்தும்படி அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயங்களை கையாள வேண்டியிருக்கும். அவரவர் வேலையில் தீவிர கவனம் செலுத்தும்போது மற்றவர்கள் நலனில் கவனம் செலுத்த முடியாத சூழல் நேரலாம். குடும்பத் தலைவனும் இதற்கு விதி விலக்கல்ல. அதை சரிவர புரிந்து கொள்ளாமல் மனதை குழப்பிக்கொள்ளக் கூடாது.

    ‘வர வர என்னை யாரும் இந்த வீட்டில் மதிப்பதே இல்லை. கொஞ்சம் கூட என் மேலே யாருக்கும் அக்கறை கிடையாது. என்னை கவனித்துக் கொள்வதை விட என்ன பெரிய வேலை? நான் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்காக மாடாய் உழைக்கிறேன். எனக்காக சின்ன வேலை செய்வது கூட உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் மட்டும் இல்லேன்னா... உங்க நிலைமை என்னவாகும் என்பதை யோசிச்சு பாருங்க’ என்பது போன்ற புலம்பல்கள் பெரும்பாலான குடும்பத் தலைவர்களிடமிருந்து வருவது சகஜம். இது பெண்களை எந்த அளவிற்கு பலவீனப்படுத்துகிறது என்பது அவர்களுக்கே புரிவதில்லை.



    பெரும்பாலான ஆண்கள் வெளி இடங்களில் மற்றவர்களை அதிகாரம் செய்யும் நிலையில் இருப்பார்கள். அதுபோல் வீட்டில் உள்ளவர்கள் தமக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகை மனநிலை. இந்த விஷயத்தில் மற்றவர்கள் சவுகரியம், அசவுகரியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

    “ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது ஆண்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது பெண்களும் வெளியில் சென்று வேலை செய்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். அவா்களை கவனித்துக்கொள்ளவும் வீட்டில் ஆள் தேவை. ஆனால் அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டு மற்றவர்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

    அது பற்றி ஆண்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் விருப்பப்படி எதுவும் நடக்காவிட்டால் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு பெண்களை குறை சொல்ல தொடங்கி விடுவார்கள். இந்த நிலை மாறினால்தான் பெண்களுக்கு கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும். ஆண்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும்” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    தங்களுக்கு வயது அதிகரித்துக் கொண்டிருப்பது போலவே, மனைவிக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் ஆண்கள் மனதில் பதிவதில்லை. நிறைய பேர் திருமணமான புதிதில் வேலை வாங்கியது போலவே எப்போதும் வேலை வாங்கிக் கொண்டிருப்பார்கள். அதில் சிறு தவறு நடந்தாலும், ‘தன்மேல் அக்கறை இல்லை’ என்று மனைவியை குறை சொல்வார்கள். ஆண்களின் இந்த மனநிலை பெண்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, மன அழுத்தத்தில் தள்ளி விடுகிறது. கணவன் வருத்தப்படும்படி தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல உணர்கிறார்கள். அவர்களுடைய இயல்பையும், இயலாமையையும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.



    ஆண்கள் அனுசரணையாக நடந்து கொள்ளும் பட்சத்தில்தான் பெண்களின் உடல்நலனும், மனநலனும் பாதுகாக்கப்படும். கவனிப்பு, பாதுகாப்பு, பராமரிப்பு, உபசரிப்பு என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. தன்னை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் மனைவியால் ஏதோ ஒரு காரணத்தால் முடியாமல் போகும்போது அதனை பெரிதுபடுத்தக்கூடாது. தான் ஏதோ ஒதுக்கப்பட்டதைப் போல மனச்சோர்வு அடையக்கூடாது. மற்றவர் தன்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் ஒன்றும் பலவீனமாகி விடவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் குடும்ப நலனுக்காக பெண்கள் செய்யும் தியாகங்கள் புரியும். அதேவேளையில் ஆண்களால் தங்கள் துணை, தன்னை ஒதுக்குவதற்கான குறைந்தபட்சமாக சில காரணத்தைக் கூட சொல்ல முடியாது.

    குடும்பத்தில் அனைவரும் முக்கியம். அதில் ஒருவரை மட்டும் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது மற்ற வேலைகளை ஒதுக்க வேண்டி இருக்கும். அதனை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காக சில பழக்க வழக்கங்களை பெண்கள் மாற்றிக் கொள்வதுபோல, ஆண்களும் சில விஷயங்களில் மாறித்தான் ஆக வேண்டும்.

    வெளியில் பல பணிகளை செய்து முடித்து வீடு திரும்பும்போது வீட்டில் நிம்மதியும், அக்கறையும் தேவை என்பது நியாயமானது தான். ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமையையும் உத்தேசித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட அதைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான உபசாரங்கள் கிடைக்கவில்லையே என்று கோபிக்கும் ஆண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு மிகவும் அவசியமானது. 
    சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றி பாருங்கள் அன்பு நிலைத்திருக்கும்.
    ‘அதிகம் விவாதிக்கிற, சண்டை போட்டுக் கொள்கிற தம்பதிகளே ஒருவருக்கொருவர் அதீத அன்புடன் இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.

    பிடிக்காத ஒருவர் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும், பிடித்த ஒருவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதும்தான் தம்பதிகளின் சண்டைக்கு முக்கிய காரணம். கருத்து வேறுபாடு இல்லாத காதலர்களே / தம்பதிகளே கிடையாது. அந்த கருத்து வேறுபாட்டை இருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த உறவு தித்திக்கிறது.

    அதனால், சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றுங்கள்.

    1. தன்னுடைய கருத்தை மற்றவரின்மேல் திணிக்கக் கூடாது.
    2. பார்ட்னர் முக்கிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதை திசை திருப்பவோ, புறக்கணிக்கவோ கூடாது.
    3. அடுத்தவர் பேசுவதையும் கவனியுங்கள்.

    4. மற்றவர் நலன் சார்ந்ததாகவே உங்கள் முடிவுகள் இருக்கட்டும்.
    5. கடுமையான வார்த்தைகள் கூடவே கூடாது.
    6. விட்டுக் கொடுப்பதன் மூலம் உறவைப் பாதுகாக்க முடியும்.‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ என்று வள்ளுவர் சொன்னது சரிதான்!
    ×