என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » homam
நீங்கள் தேடியது "homam"
குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
ஆலமர சமித்தைக் கொண்டு சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும். பால், நெய், சர்க்கரைப் பொங்கல் இவற்றை இந்த சமித்து மூலம் எடுத்து அக்னியில் விட்டு ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக நான்காயிரம் தடவை செய்யவேண்டும்.
இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
ஜாதகத்தில் 6, 8, 12-ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.
இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
ஜாதகத்தில் 6, 8, 12-ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்.
ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவ ராசியும் தன் வினைகளுக்கு உரிய பலன்களை அனுபவித்துதான் தீர வேண்டும். என்றாலும், ஹோமங்கள் செய்வதன் மூலமும், பிற இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதன் மூலமும் விசேஷ நற்பலன்களைப் பெற முடியும்.
வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டு மானால், அதற்குரிய ஹோமத்தை செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து - என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும்.
என்ன ஒன்று... நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது. இன்றைக்கு ஹோமங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான ஹோமங்கள் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், வாஸ்து ஹோமம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும் ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு விதமான பலனை நமக்கு அருளுகின்றன.
தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
எல்லா ஹோமங்களையும் நாம் வசித்து வரும் வீடுகளில் செய்ய முடியாது. வீட்டில்தான் ஹோமங்கள் அனைத்தையும் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை (வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் தங்களால் வீட்டில் ஹோமம் செய்ய முடியவில்லையே என்று ஏங்க வேண்டாம். அத்தகையவர்கள் தங்களால் முடிந்த வழிபாட்டை மனபூர்வமாக இறைவனுக்கு செய்தாலே போதும்).
தேச நன்மை கருதியும், நாம் வசிக்கும் ஊரின் நலன் கருதியும் ஆலயங்கள், மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பிரமாண்ட அளவில் ஹோமங்கள் நடக்கும்போது நம் சக்திக்கு முடிந்த வழிபாட்டுப் பொருட்களை வாங்கி அங்கே அர்ப்பணிக்க வேண்டும்.
எதுவுமே வாங்கித் தர முடியாதவர்கள், தங்களால் முடிந்த உடல் உழைப்பைக் கொடுக்க லாம். அதற்கு ஈடு இணை இல்லை. ஆலயம் மற்றும் பொது இடங்களில் ஹோமங்கள் நடத்தப்படும்போது அதன் பலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹோமத்தின் சங்கல்பதாரர் என்று ஒருவர் இருந்தாலும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே அதற்குண்டான பலன் கிடைக்கிறது.
வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டு மானால், அதற்குரிய ஹோமத்தை செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து - என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும்.
என்ன ஒன்று... நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது. இன்றைக்கு ஹோமங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான ஹோமங்கள் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், வாஸ்து ஹோமம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும் ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு விதமான பலனை நமக்கு அருளுகின்றன.
தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
எல்லா ஹோமங்களையும் நாம் வசித்து வரும் வீடுகளில் செய்ய முடியாது. வீட்டில்தான் ஹோமங்கள் அனைத்தையும் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை (வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் தங்களால் வீட்டில் ஹோமம் செய்ய முடியவில்லையே என்று ஏங்க வேண்டாம். அத்தகையவர்கள் தங்களால் முடிந்த வழிபாட்டை மனபூர்வமாக இறைவனுக்கு செய்தாலே போதும்).
தேச நன்மை கருதியும், நாம் வசிக்கும் ஊரின் நலன் கருதியும் ஆலயங்கள், மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பிரமாண்ட அளவில் ஹோமங்கள் நடக்கும்போது நம் சக்திக்கு முடிந்த வழிபாட்டுப் பொருட்களை வாங்கி அங்கே அர்ப்பணிக்க வேண்டும்.
எதுவுமே வாங்கித் தர முடியாதவர்கள், தங்களால் முடிந்த உடல் உழைப்பைக் கொடுக்க லாம். அதற்கு ஈடு இணை இல்லை. ஆலயம் மற்றும் பொது இடங்களில் ஹோமங்கள் நடத்தப்படும்போது அதன் பலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹோமத்தின் சங்கல்பதாரர் என்று ஒருவர் இருந்தாலும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே அதற்குண்டான பலன் கிடைக்கிறது.
தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலை பள்ளியக்கிரஹாரம் பகுதியில் சிறைகாத்த அய்யனார் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா சன்னதி, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலில் உள்ள சாமிகளை, பள்ளிக்கிரஹாரம் மட்டுமின்றி தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் வந்து தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டுவருகின்றனர்.
இவ்வாறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்துவருகின்றனர்.
இந்தநிலையில், கோவிலில் தடைபட்ட காரியங்கள் மற்றும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவிலில் மகா கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து மாலையில் கலச பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன.
நேற்று காலை சிறைகாத்த அய்யனார் சன்னதி முன்பாக பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 வகையான ஹோமப்பொருட்களை தட்டில் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்தனர். பின்னர், சாமிக்கு கலசாபிஷேகமும் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி, காமாட்சி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் வழிபாட்டு குழுவினர், பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் உள்ள சாமிகளை, பள்ளிக்கிரஹாரம் மட்டுமின்றி தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் வந்து தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டுவருகின்றனர்.
இவ்வாறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்துவருகின்றனர்.
இந்தநிலையில், கோவிலில் தடைபட்ட காரியங்கள் மற்றும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவிலில் மகா கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து மாலையில் கலச பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன.
நேற்று காலை சிறைகாத்த அய்யனார் சன்னதி முன்பாக பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 வகையான ஹோமப்பொருட்களை தட்டில் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்தனர். பின்னர், சாமிக்கு கலசாபிஷேகமும் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி, காமாட்சி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் வழிபாட்டு குழுவினர், பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X