search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyanar temple"

    • அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
    • புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இங்கு கரடி கருப்பர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு சமுதாய மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், கரடி கருப்பர் சாமிக்கு பக்தர்கள் கரடி வேடத்தில் புரவிகள் எடுத்து வழிபாடுவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரடி அமைப்பில் மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் எடுத்து வினோத வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி யின்றி வாழவும் மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் புரவிகளை செய்வதற்கு பிடிமண் கொடுத்து அவர்கள் செய்து வைத்திருந்த கரடி மற்றும் குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பார அய்யனார் கோவிலுக்கு தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய சூழ்நிலையில் நேர்த்திக்கடன் செய்த காட்சிகள் மனதை கவரும் விதமாக அமைந்திருந்தது.

    • அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை நடந்தது.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி சாத்தங்குடியைச் சேர்ந்த பாண்டி(வயது 57) பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சாமி சன்னதியின் கதவை உடைத்து உள்ளே இருந்த பாரம்பரியான மரப் பெட் டியில் வைக்கப்பட்டிருந்த 6 பித்தளை மணி, பூர்ண கலா கவசம், அய்யனார் சாமி கவசம் மற்றும் பூஜை பொரு ட்களை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 21 ஆயிரம் ஆகும்.

    மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி சன்னதி கதவு உடைக்கப்பட்டு பொ ருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட் டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    விழா கடந்த ஜூன் 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட 2 அரண்மனை புரவிகள் உட்பட 282 புரவிகள் சாமி யாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடந்தது.

    நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 282 புரவிகள் ஊர்வலம் நடந்தது.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றார். இதில் நகரத்தார் தலைவர் மாதவன் கணே சன், சிவசுப்பிரமணியன், வெள்ளையப்பன், வெங்கடாசலம் காந்திமதி சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. தர்மர் எம்.பி., தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை ல் வகித்தனர். நிர்வாகிகள் செல்லமணி, சுந்தரமுர்த்தி , கனேசன், முத்துராமலிங்கம், கால்நடை மருத்துவர் சுந்தர முர்த்தி, தமிழ் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் மதுராந்தகி நாச்சியார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தா னத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.

    கடந்த 30-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதை யொட்டி 4 ஆயிரம் சதுரடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் ஸ்ரீசேவுகப் பெருமாள் அய்யனாருக்கு மட்டும் தனியாக 33 குண்டங்களும், பரிவார தேவதைகளுக்கு 8 குண்டங்களும் என 41 குண்டங்கள், 91 சிவாச்சாரியார்களை கொண்டு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன. இன்று காலை மங்கள இசை, தமிழ் திருமறை மண்டப சாந்தி,பிம்பசுத்தி,லட்சுமி பூஜை,கோ பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி ஸபர்ஷாகுதி நாடி சந்தானம் மஹா பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள குடங்களை எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றியுள்ள தேரோடும் 4 ரத வீதியில் வலம் வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் நவகிரகம் பிடாரி அம்மன் சன்னதி, கணபதி சன்னதி, முருகப்பெருமான் சன்னதி, சுயம் பிரகாஷ்வரர் சன்னதி, அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி உள்ளிட்ட கர்ப்ப கிரகங்களின் விமானங்கள் தங்க கவசங்களால் வேயப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் மதுராந்தகி நாச்சியார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
    • இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
    • இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே அய்யனார் கோவில் கோபுர கலசங்கள் திருடு போயின.
    • இதுகுறித்து காடுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவலிங்க அய்யனார் கோவில் உள்ளது. விசேஷ நாட்களில் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    அய்யனார் கோவிலில் பிச்சைக்கண்ணு என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து விநாயகர் சன்னதி விமான கோபுரத்தில் உள்ள கலசங்களை திருடி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பிச்சை கண்ணு கலசங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காடுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோபுர கலசத்தை திருடியது இரிடியம் விற்கும் கும்பலா? எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • சிவகங்கை அருகே உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புரவி எடுப்பு விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    தினமும் அய்யனார், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.

    நேற்று இரவு தேவகோட்டை குலாலர் தெருவில் உள்ள மகமாயியம்மன் கோவிலில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மண்ணால் ஆன குதிரை மற்றும் காளைகளை தோளில் சுமந்து சுமார் 4 கி.மீ தூரம் ஒத்தக்கடை, ஆற்றுப்பாலம், தளக்காவயல் விலக்கு வழியாக வேம்புடைய அய்யனார் கோவில் எதிரே உள்ள திடலில் பழங்கால முறைப்படி பனை ஓலையால் அமைக்கப்பட்ட பந்தலில் கிராம மக்கள் வைத்தனர்.

    குழந்தை வேண்டியும், வீட்டுக்குள் பாம்பு, ஓணான் வராமல் இருக்க மணலால் செய்த ஆண், பெண், மிதளை பிள்ளை, பாம்பு, தேள், ஓணான் போன்றவற்றை நேர்த்திக்கடனாக வேம்புடைய அய்யனாருக்கு செலுத்தினர்.

    விழாவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, பாப்பான்கோட்டை, இரவுசேரி, தளக்காவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.

    • அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
    • ஏற்பாடுகளை கல்லால் அய்யனார் கோவில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விழாக் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கூழையன்குண்டு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான அல்லி ஊத்து கல்லால் அய்யனார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கால்நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்கு கிறது. இதையொட்டி அன்று மாலை 3மணிக்கு அல்லி ஊத்தில் இருந்து மேள தாளத்துடன் தீர்த்த குடம் கோவிலுக்கு எடுத்து வருதல், மாலை 4 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்து கோவில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமையில் தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.

    வருகிற 5-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் மங்கள இசை, மகா கணபதி ஹோமம், கல்லால் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாகுதி காலை 7 மணிக்கு பால்குடம் பவனி, 8 மணிக்கு வைத்தி யலிங்க சுவாமி, கல்லால் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம், காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, 10 மணிக்கு வில்லிசை, பிற்பகல் 12 மணிக்கு விஷேச தீபாராதனை, மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டி மன்றம், இரவு 8.30 மணிக்கு வைத்தியலிங்க சுவாமி குடியிருப்பில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ தீபாராதனை சுவாமி, அம்பாள் அனுக்கிரக பூஜை நடக்கிறது.

    வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், பகல் 12.30 மணிக்கு மேள தாளம் முழங்க பத்திரகாளி அம்மன் பரிவார தேவதை களுடன் அல்லி ஊத்தில் நீராடுதல், மாலை 5.30 மணிக்கு சுடலைமாடன் சுவாமிக்கு அபிஷேகம் தொடக்கம், இரவு 7 மணிக்கு திரைப்பட கச்சேரி நடக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு வில்லிசை, இரவு 10மணிக்கு கனியான் கூத்து, நள்ளிரவு 12 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு ஜாம பூஜை, சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் சென்று வருதல், வருகிற 7-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மனுக்கு சிறப்பு பொங்க லிட்டு விசேஷ படைப்பு களுடன் அலங்கார பூஜை, அதிகாலை 5 மணிக்கு சுடலைமாடன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங் களுக்கு நிறைவு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறு கிறது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஏற்பாடுகளை கல்லால் அய்யனார் கோவில் அறக் கட்டளை தலைவர் ராம் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விழாக் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குதிரை பொட்டலில் இருந்து குதிரைகள் தூக்கிவரப்பட்டு மந்தையில் வைக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கொட்டக்குடி. இங்கு பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த ஒரு வாரமாக சாமி ஆட்டம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குதிரை பொட்டலில் இருந்து குதிரைகள் தூக்கிவரப்பட்டு மந்தையில் வைக்கப்பட்டது. பின் நேற்று மாலை மந்தையில் இருந்து கற்குடைய அய்யனார் கோவிலுக்கு தூக்கிச் செல்லப்பட்டது.

    இதில் 6 கரைக்குதிரைகள் மற்றும் நேர்த்திக்கடன் குதிரைகளும் தூக்கிச் செல்லப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு கொட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மானாமதுரை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • 4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூரில் அழகிய திருவேட்டை அய்யனார், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனிதநீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தன.

    4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் பூர்ண புஷ்கலா சமேத அழகிய திருவேட்டை அய்யனார் சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு வழிபாடு செய்தனர்.

    கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×